ஓம் நமசிவய ஓம்
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்
#@#@#@#@#@
மூலர் திரவியம்!
வரலாறு!
சிவயோகி ஒருவர் கயிலையில் வாழ்ந்து நந்தியம்பெருமனிடம் சனகர், சனந்திரர், சனாதனன், சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோர உடன் இருக்க உபதேசம் பெற்று அகத்தியரைக் காண தென் தமிழகம் நோக்கிப் பயணித்தார். வழியில் கேதாரம், காசி, காளத்தி ஆகிய தலங்களை தரிசித்தார். தில்லை நடராஜப் பெருமானை வழிபட்டு திருவாவடுதுறையில் திருமாசிலாமணீஸ்வரரை தரிசித்து சாத்தனூர் வருகையில் மூலன் என்ற இடையன் இறந்துவிட்டபடியால் அவன் மேய்க்கும் பசுக்கள் அவனைச் சுற்றி நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தன. அதைக் கண்ணுற்ற யோகி தன் தவ வலிமையால் பரகாயப் பிரவேசம் செய்து மூலன் உடம்பில் புகுந்தார். பசுக்கள் சந்தோஷிக்க அவைகளின் இருப்பிடத்திற்குச் கூட்டிச்சென்று விட்டு விட்டு வந்தவர் தன் மூல உடலைக் காணது அது இறையின் செயல் என்று எண்ணி திருவாவடுதுறையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்து சிவ சிந்தனையுள் மூழ்கினார்.
வருடத்திற்கு ஒன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். முலர் தம் பாடல்களை சோமன், பிரமன், உருத்திரன், இந்திரன், மாலாங்கன், கத்துரு, காலாங்கி கஞ்சமலையன் ஆகியோர்க்கு விளக்கியுள்ளார். அவகளை உயிர்களின் நலன் கருதி அறிந்து கொள்ளும்பொருட்டு திருமறையில் பத்தாம் திருமறையின் பாயிரம் மற்றும் ஒன்பது தந்திரங்களை உரையாக உயிர்கள் படித்து பயன் இன்பம் அடைய வாழ்த்துக்கள் குருஸ்ரீ பகோரா.
பாயிரம்
முதல் தந்திரம்
இரண்டாம் தந்திரம்
மூன்றாம் தந்திரம்
நான்காம் தந்திரம்
ஐந்தாம் தந்திரம்
ஆறாம் தந்திரம்
ஏழாம் தந்திரம்
எட்டாம் தந்திரம்
ஒன்பதாம் தந்திரம்
திருச்சிற்றம்பலம்