ஓம்சிவாயநமக!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
0=0=0=0=0=0
நால்வர்
சைவ நெறியைப் பரப்ப உறுதிபூண்டு செயலாக்கம் கொண்டவர்களில் முதன்மை ஆனோர் நான்கு பேர்கள். அவர்களை நாம் நால்வர் பெருமக்கள் என அன்புடன் அழைக்கின்றோம். அவர்களில் முதல் மூவரும் அறுபத்திமூவர் நாயன்மார்கள் என அழைக்கப்படும் பெருமக்களில் ஒருவராகத் திகழ்கின்றனர். இந்நால்வரும் கீழ்கண்ட பதினாரையும் தங்களுடைய சிந்தையிலும் செயலிலும் மேற்கொண்டு வாழ்ந்தனர்.
அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக் கொள்ளும் தெளிவும்
ஏமுறும் பரதார நச்சிடாத நன் நோன்பும் தூய்மையும்
கனவிலும் உனது அன்பருக்கு அடிமையாங் கருத்தும்
தீமையாம் புறச் சமயங்கள் ஒழிந்திடு திறனும்
நல்லறஞ் செய்பவர் தங்களோடு உறவு
நல்லுபதேச மெய் உறுதியும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
நெஞ்சில் யான் எனது என்னுஞ் செருக்குறாத் துறவும்
பிறவி தீ தெனாப் பேதையர் தம்மோடு பிணக்கும் உறுதி
புனித நின்புகழ் நாள்தோறும் உரைத்திடும் பொழிவும்
மனமும் நறுகண் ஐம்புலன்களுக்கு ஏவல் செய்யுறாச் சத்துரும்
மனமும் வாக்கும் நின் அன்பர்பால் ஒப்பிடு செயலும்
மா தவத்தினோர் ஒப்பினும் வணங்கிடும் மகிழ்வும்
யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பு
வாய்மையாகவே பிறர்பொருள் விழைவுறா வானும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் தூய்க்கினும்
பிறைக் கொழுந்தணிசடையப் பெரும்.
அவர்களின் திரு நட்சத்திரம்
சித்திரைச் சதயம் அப்பர் சிறந்தவை காசிமூலம்
அத்தரைப்பணி சம்பந்தர் ஆனிமா மகத்தில் அந்த
முத்தமிழ் வாதவூரார் முதியநல் ஆடிதன்னில்
சுத்தமாஞ்சோதி நாளில் சுந்தரர் கயிலை சேர்ந்தார்.
அவர்களின் வயது
அப்பருக்கெண்பத்தொன்று அருள் வாதவூரருக்குச்
செப்பிய நாலெட்டில் தெய்வீகம்- இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி.
அவர்களுக்கான துதி
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக்கன் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரார் திருத்தாள் போற்றி
மண்ணுலகில் பிறந்த நாம் இறைவனை உண்மை அன்போடு வழிபட்டால் இறைவன் தன் பொன்னுலகை அளிப்பான். மேலும் அடியார்களை சிவமாகவே எண்ணிப் போற்றி வணங்கினால் சிவனடியை எளிதில் சென்றடையலாம் என்பதே அவர்களின் செய்தியாகும். வாழ்க அவர்தம் சைவத் தொண்டு.
அந்த நால்வர்.....
1.திருஞானசம்பந்தர்/2.திருநாவுக்கரசர்/3.சுந்தரர்/ 4. மாணிக்கவாசகர்