ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
&&&&&
ஓம் சிவபர தத்துவத்தை சொல்லாமல் சொல்லும் அற்புத ஆலயம்
மூலிகை வனநாதர் ஆலயம்
&&&&&
யுகங்கள்-யுகதர்மங்கள்
கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்ரி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிரந்த யாகங்கள் புரிவர். தரும் தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்ரு ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர்.
கோவில்கள் இயற்கை எழிலும், ரம்யமான சூழலும் கொண்டிருக்க வேண்டும். ஏரிகள், குளங்கள், கிணறுகள், பூக்கள், மரங்கள், அன்னப்பட்சிகளின் இனிமையான சத்தங்கள், இசையொலிகள் போன்ற அருமையான சூழலில் கோயில் கொண்டிருக்கத்தான் தெய்வங்கள் விரும்பும். குளங்கள் வெட்டுவது மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் சேர்த்த புண்ணியம். கோவில் கட்டும் பணியானது யாகங்கள் நடத்துவது போன்ற புண்ணியங்களைத் தரும். எனவே அப்படிபட்ட ஓர் அற்புதமான கோவிலை இறையருள் முழுமையாக நிறைந்த வண்ணமாக மூலிகை வனநாதர் ஆலயம் அமைக்க விரும்பும் எண்ணத்தை அடியேனுக்கு இறைவன் அருளியுள்ளான்.
யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்த மூலிகை வனநாதர் ஆலயம்- ஒவ்வொரு தெய்வத்திற்கும் சபை ஏற்படுத்தி அதில் அவர்கள் மக்கள் நல் வாழ்விற்காக எடுத்த உருவங்கள், அதன் சிறப்புக்கள், பயன்கள் ஆகியவற்றை முடிந்தவரையில் அடியேன் தேடித் தெளிந்து தெரிவித்துள்ளேன். இந்த எண்ணங்களுக்குச் சொந்தக்காரார் அடியேனில்லை. என்னுள்ளே இருக்கும் பரம்பொருளே. அவன் அருளால் அனைத்து உயிர்களும் இந்த ஆன்மீக தெளிவுகளைத் தெரிந்து ஆனந்தம் அடைய வேண்டும் என்பதே அடியேன் விருப்பம் பண்டைய மன்னர்கள் மக்களின் நாகரீகம் வாழ்முறைகளுக்கு உதவிகரமாய் இருக்கவே ஆலயங்களை கட்டுவித்தனர். அந்த முறையில் வருங்கால சந்த்தியினர் புரிந்து கொள்ளும் விதமாக நம் கலாச்சார பண்பாடுகள் உணர்த்தப்பட வேண்டும். அதற்கான முதல் தொடர் முயற்சி இது. அன்புடன் -குருஸ்ரீ பகோரா.
சபைகள்!
1. விநாயகர் சபை
2. நவகிரகங்கள்! சூரிய சபா!
3. லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை!
4. நாரயணர் சபா!
5. ராஜலட்சுமி சபை!
6. பத்ரகாளி சபை!
7. பூமாதேவி!
8. பைரவ சபை!
9. ஞான பண்டிதன் சபை!
10. குபேரன் சபை- 12 ராசிக்குரியவர்!
11. பிரம்மன்-சரஸ்வதி!
12. பெரியதிருவடி!
13. சின்னதிருவடி!
14. விஷ்வக்ஷேனர்!
15. நாரதர்!
16. தத்தாத்ரேயர்!
17. ஐயப்பன்!
$$$$$