gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 19 July 2018 19:02

குபேரன்சபை- 12 ராசிக்குரியவர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
####

குபேரன்சபை- 12 ராசிக்குரியவர்.

குபேரன்!

பிரம்மாவின் பேரன் விஸ்வராவின் முதல் மனைவி, பரத்வாஜ மகரிஷியின் மகள் இத்விதாவின் மகன் வைஸ்ரவணன்- குபேரன். சிறிய வயதில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

முற்பிறவியின் காரணமாக விச்ரவஸ் முனிவர் ஒர் அரக்கியை திருமணம் செய்ய வேண்டிவந்தது. அக்காலத்தில் முனிவர்கள் தவம் செய்யும்போது யாராவது வரமாக கேட்டால் கேட்பதை கொடுக்கவேண்டும் என்பது நியதி. அப்படி அவர் தவமிருக்கும்போது கேசகி என்ற அரக்கி தன்னை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என வரம் பெற்றதனால் இரண்டாவது மனைவி கேசகி என்ற கைகசியிக்கு இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற மகன்களும் கும்பாஷினி-சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர்.

முனிவர்கள் வம்சத்தில் தந்தையின் மரபினையும் அசுர இனத்தில் தாயின் மரபை பின்பற்றுவது வழக்கமாக இருந்ததால் வைஸ்ரவணன் ரிஷியின் வம்சம் ராவணனும் அவன் உடன் பிறப்புகளும் அசுர வம்சமாகியது. எப்படியிருப்பினும் இலங்கேஸ்வரன் இராவணின் அண்ணன் வைஸ்ரவணன். முறைப்படி வைஸ்ரவணனுக்கு இலங்காபதியாக மகுடம் சூட்டியது இராவணனுக்கு பிடிக்கவில்லை.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதிய இராவணன் தவம் செய்து ஈசனை மகிழ்வித்து கிடைத்த வரத்தின் சக்தியால் வைஸ்ரவணனை தோற்கடித்து இலங்கையையும், தேவேந்திரன் வைஸ்ரவணனுக்கு கொடுத்த புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினான்.

மகாலட்சுமியிடம் சிவன் எல்லா தேவர்களின் நிதிக்குவியல்களையும் அளித்து அதை பரிபாலனம் செய்யுமாறு சொல்ல லட்சுமி எனக்கு நிதி நிர்வாகம் செய்ய ஒருவர் வேண்டும் என வேண்டினாள். நாரதர் ஆலோசனைப்படி வைஸ்ரவணனும் கடுந்தவம் செய்து சிவனை மகிழ்விக்க தேவர்களின் பொக்கிஷத்தை கவனிக்கும் பொக்கிஷதாரனாக்கிய சிவன் வைஸ்ரவணனுக்கு குபேரன் பட்டம் அளித்தார். கு என்றால் குரு, செல்வம், பேரன் என்றால் நிர்வாகம் செய்பவன். குபேரன் செல்வத்தை நிர்வாகம் செய்பவன். சிவன் எதிரில் தோன்றி காட்சியளிக்க வேண்டுவனவும் உண்டோ என ஒன்றும் கேட்காமல் ஆனந்தமான திருமுக மண்டலத்துடன் இருக்க, சிவன் அவரை வடக்கு திசைக்கு அதிபதியாக்கி மலையடிவாரங்களில் வாழும் யட்சர்களின் தலைவனாக்கினார்.

வைஸ்ரவணன் மீண்டும் தவம் செய்து ஈசனே என்னை நெறிப்படுத்த தாங்கள் எப்போதும் என்னோடு இருக்க வேண்டும் என வரம் கேட்டுப் பெற்றதால் குபேரனோடு எப்போதும் சிவசாந்நித்யம் நிறைந்திருக்கின்றது என்பதால் சிவ வழிபாட்டில் குபேரனுக்கும் சேர்த்து ஆரத்தி. எனக்கான பூஜைகளில் ஆரத்தி காட்டும்போது உன்பெயரைச் சொல்லி ஆராதிக்கும் ஆகமத்தை ஏற்படுத்தி, குபேரனை வழிபடுவோருக்கு சந்தான பாக்யமும், தனபாக்யமும் கொடுக்கும் விசேஷ வரத்தை அளித்தார்.

ஓம் ராஜதிராஜாய ப்ரசஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸமே காமான் காம காமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹாராஜாய நம! எனச் சொல்லி ஆரத்தி காட்டுவர்.

அதாவது எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான வைச்ரவணனே விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக்கூடியவரே, எனது நியாமான கோரிக்கைகளை இறைவனிடம் சொல்லி ஈடேற அருள் செய்ய உம்மை வேண்டி வணங்குகின்றேன் என்பதாகும்.

திருமகள் எப்போதும் குபேரனினின் இருப்பிடத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் அளாகாபுரியில் அளவற்ற செல்வம் நிறைந்து இருக்கின்றது. குபேரனுடன் லட்சுமிகரம் அதாவது லட்சுகடாட்சம் நிறைந்திருப்பதால் அதனைக் குறிப்பிடவே குபேர லட்சுமி படம். எந்த வீட்டில் தீபங்கள் ஏற்றுகின்றார்களோ அந்த சமயத்தில் குபேரன் லட்சுமியை குப்பிடுவான். அதனால் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றினாலே அங்கே லட்சுமி கடாட்சத்துடன் சிவபக்தன் குபேரன் சதாகாலமும் சிவனை துதிப்பதால் சிவ அருளும் நிறையும்.

யட்சர்கள் மனிதர்கள் போலவே உருவம் கொண்டவர்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோருக்கும் நன்மை செய்ய விரும்புவர்கள். அன்பும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட இவர்களின் சக்தி அசாத்தியமானது. இவர்கள் மனித குலத்தின் நண்பர்கள். இந்த யட்சர் கூட்டத்தின் தலைவன் குபேரன். குபேரபண்டாரி- பொக்கிஷக்காரன், சிவமித்திரன், வடதிசை ரட்சகன் என்ற பெயர்களும் உண்டு.

ஒரு சிட்டிகை விபூதி ஏன்!

குபேரன் சிறந்த சிவ பக்தன். குபேரன் சிவத்தலங்களுக்கு சென்று பூஜைசெய்து வழிபட்டு வந்தான். ஒருநாள் சிவன் காட்சி கொடுக்க தான் விரும்பும் போதெல்லாம் தரிசிக்க வரம் கேட்க மகிழ்ந்தார் சிவன். யாருக்கும் கிடைக்காத இந்தப் பேறு தனக்கு கிடைத்திருப்பது பற்றிய பெருமிதத்தினால் நாளடைவில் கர்வம் கொண்டான். நாரதரை சந்தித்த குபேரரை அவர் குழப்பிவிட ஒரு பிரயோஜனமும் இல்லாத இந்த வரத்தை தாம் ஏன் கேட்டோம் என நினைத்தான்.

அடுத்தமுறை இறைவனை சந்தித்தபோது அன்று ஏதாவது வரம் வேண்டுமா என்றீர்கள். இந்த உலகத்தில் உள்ள சொத்துக்கள் எல்லாம் எனக்கு வேணும் எனகேட்க அவ்வாறே என சிவன் அருளினார். எல்லா சொத்துமே எனக்குன்னா உங்க சொத்தான பார்வதியும் எனக்குத்தானே சொந்தம் என்ற குதர்க்கத்தைக் கேட்ட பார்வதி ஈன புத்தியுள்ள உன் உடல் ஷீனம் அடைய என்று சாபம் கொடுத்தாள். உருக்குலைந்த குபேரன் பூவுலக சிவத்தலங்களுக் கெல்லாம் சென்று தன்னை மன்னிக்க வேண்டினான்.

பல காலத்திற்குப்பின் இத்தலத்தில் ஈசன் அவனை மன்னித்து ஒரு சிட்டிகை விபூதி அளிக்க அதை அவன் ஓர் சிமிழில் வைத்து பூஜை செய்து வந்தான். உரிய காலம் வந்ததும் உலகத்து செல்வம் எல்லாவற்றிற்கும் அவனே அதிபதி என்றார் எம்பெருமான். ஒரு சிட்டிகை விபூதி உலகத்து சொல்வம் எல்லாம் தரவல்லது என்பதால்தான் கோவிலில் பூஜை முடிந்ததும் ஒரு சிட்டிகை விபூதி பிரசாதம் தரப்படுகின்றது. அதை உபயோகிக்கும் பக்தர்களைப் பொருத்தது அதன் மகிமை.—விழுப்புரம் கைலாசநாதர்.

குபேரனுடைய மனைவி மனோரமா. குபேரனுடைய சேவகர்கள் குஹ்யகர்கள் எனப்படுவர். குபேரனின் அவைக்கு விழல் என்று பெயர். புஷ்பக விமானம் வைத்திருப்பவன். கையிலையின் நடுவில் உள்ள நிதிபதி என்று பெயரைவுடைய குபேரனின் அனகாபுரி-குபேரபுரிக்கு அவர் நண்பரான சிவபெருமான் அடிக்கடி வருவார். குபேரன் தன்னுடைய ரத்தினசபையில் வெண்ணிற ஆசனத்தில் மனைவியுடன் அமர்ந்திருக்க அவனைச் சுற்றி நவநிதி தேவதைகள் இருக்க சங்கநிதியும் பதும நிதியும் குபேரனை வணங்கியபடி நிற்கின்றன.

மீண்டும் குபேரன் அம்பாளை நோக்கி கர்நாளி என்ற இடத்தில் தவமிருந்து இராவணனிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றான். கர்நாளி குபேரன் கோவிலில் குபேரன் படமில்லை. லிங்கமும் பார்வதியின் விக்ரமும் உள்ளது.குஜராத்-பரோடாவிலிருந்து 60 கி.மீ.

செல்வங்களுக்கு அதிபதி குபேரன். அவன் லட்சுமி கடாட்சம் பெற்றவர். அஷ்ட ஐஸ்வர்யத்தையும், பதினாறு வகை செல்வத்தையும் அளிப்பவர். எனவே செல்வம் ஒருவனை அடைய தீபாவளி திருநாளுக்கு அடுத்தநாளன்று லட்சுமி குபேர பூஜை செய்வது நலம். குபேர பூஜை காலத்தில் நவநிதி சேவை எனும் வழிபாட்டினை செய்வது மேலும் சிறப்பு. லட்சுமி குபேர பூஜையுடன் குபேரருக்கு நாணய வழிபாடும் செய்யலாம். பொதுவாக வியாழக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை உள்ள நேரம் குபேரகாலம் எனப்படும். அல்லது வெள்ளிக்கிழமையும் செய்யலாம்.

இந்த பூஜை முறைகளை பிரம்மாவிடமிருந்து அவர் மகன் புலஸ்திய மகரிஷிக்கும் பின்னர் அவர் பேரனுக்கு இரகசிய முறையில் கற்றுத்தரப்பட்ட விதிகளை நாரதர் பூவுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இரகசிய பூஜை முறை ‘மூர்த்தி இரகசியம்’ எனப்படும். சிந்தாமணி சிந்தையில் விரும்பியதைத் தரும் குபேரசிந்தாமணி மந்திரம் ஆகும். ஒரு தெய்வத்தின் மூர்த்தி ரகசிய பூஜையினை தெரிந்து வழிபட்டால் அத்தெய்வத்தின் அருளை விரைவில் பெறலாம்.

குபேரபூஜை
ஒன்பது வாரம் தொடர்ந்து அல்லது ஒன்பது மாதங்கள் குறிப்பிட்ட தினத்தில் செய்ய வேண்டிய பூஜை இது. ஆண், பெண் இருபாலரும் செய்யலாம். யார் செய்தாலும் தொடர்ந்து அவரே செய்வது சிறப்பு. தொடர்ந்து செய்கையில் ஏதாவது காரணத்தினால் செய்ய இயலவில்லையென்றால் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவர் செய்யலாம். எல்லா பூஜைகளிலும் குடும்ப உருப்பினர்கள் கலந்து கொள்வது நலம் பயக்கும். ஒவ்வொரு பூஜைக்கும் ஒரே மதிப்பிலான காசுகள் ஒன்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் எடுத்த மதிப்புள்ள காசுகளையே அடுத்த பூஜைகளுக்கும் பயன் படுத்த வேண்டும் மொத்தமாக சம் மதிப்புள்ள எண்பத்தொரு காசுகள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நவநிதி சேவை- அதிகாலை எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து லட்சுமி குபேரர் படத்தை வைத்து அதன் முன் குபேரன் கோலம் போடவேண்டும். பூஜை தடையின்றி நடைபெற மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கணபதியையும் குல தெய்வத்தையும் வழிபடுங்கள். பிறகு நல்ல நேரத்தில் ஒரே அளவுடைய ஒன்பது கலசங்களில் உள்ளே சிறிது ஏலக்காய் பச்சைக் கற்பூரம் போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி நூல் சுற்றி மாவிலை, தேங்காய், சந்தனம், குங்குமம், பூச்சரம் வைத்து குபேரன் கோலம் போட்ட கட்டத்திற்குள் வைக்கவும். அந்த கட்டத்திற்குள் ஒரு கட்டத்திற்கு ஒன்றாக ஒன்பது காசுகளையும் வைக்கவும். பூஜை அறையில் சுவஸ்திக் கோலம் போட்டு அதன்மீது வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் நடுவே குபேரனுக்கு தனி கலசம் அலங்கரித்து வைத்து இரு பக்கமும் குத்து விளக்கேற்றி 1.சங்க நிதி, 2.பத்ம நிதி, 3.மகாபத்ம நிதி, 4.சங்காக்ய நிதி, 5.மகராக்ய நிதி, 6.சுகச்சப நிதி, 7. குமுதநிதி-முகுந்த நிதி, 8.குந்தாக்ய நிதி, 9.நீல நிதி ஆகிய ஒன்பது நிதியங்கள் என்ற நவநிதி பெயர்களைச் சொல்லி நவநிதிகளையும் குபேரனையும் அந்த கலசங்களில் எழுந்தருளச் செய்து லட்சுமி குபேர மந்திரங்களை செல்லி வணங்கவும். இதில் ஸ்வர்ணம்-பொன், ரஜதம்-வெள்ளி, வைரம், வைடூரியம் எல்லாம் அடங்கும். குத்துவிளக்கு ஏற்றும்போது மங்களகரமான தீபத்தில் ஜோதியாய் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயே உன்னை மனதார வணங்குகின்றோம். எங்கள் மனையில் மங்களங்கள் யாவும் பெருகி, மங்காத செல்வங்கள் சேர அருள் புரிவாய் தாயே என வேண்டி ஏற்றவும்.

ஓம் ஸ்ரீம் வசுதே வசுதாரே வசுகரி
நவகரி தான்யகரி ரத்னகரி ஆவாஹயாமி என்ற ஸ்லோகத்தை மும்முறை கூறி

ஓம் நிதி ரூபாய வித்மஹே
நித்ய மங்களாய தீ மஹி
தந்தோ குபேர ப்ரசோயாதயாத்! என்ற காயத்ரியை மூன்று முறை கூறவும்.

பின்னர் கற்பூரதீபம் காட்டி ஆராதனை செய்யவும். நிவேதனமாக அவல் பாயாசம், லட்டு. கேசரி. சர்க்கரை அன்னம் ஆகியவற்றில் ஒன்றும் ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, கொய்யா, திராட்சை ஆகிய பழங்களையும் வைக்கலாம். இறுதியில் மங்கள ஆரத்தி செய்து பூஜை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை தட்சனைகளூடன் ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. வசதி குறைவின் ஒன்பதாவது வாரமுடிவில் கொடுத்தாலும் போதும்.

எல்லா கலசங்களின் நீரை ஒன்று சேர்த்து சிறிதளவு எல்லோரும் உட்கொள்ளலாம். பின்னர் வீடு முழுவதும் மாவிலையால் அந்த நீரை தெளிக்க வேண்டும். பூஜையில் வைக்க வேண்டிய குபேர கட்டம்.

 

 

 

ஸ்ரீ

 

 

 

27

20

25

 

ஸ்ரீ

22

24

26

ஸ்ரீ

 

23

28

21

 

 

 

ஸ்ரீ

 

 

 

 

இராசிகள்

அதிபதி

நண்பர்கள்

பகைவர்கள்

மேஷம்

செவ்வாய்

தனுசு,கும்பம்,மீனம்

ரிஷபம்,மிதுனம்,கடகம்,கன்னி, விருச்சகம்,மகரம்

ரிஷபம்

சுக்கிரன்

மிதுனம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்

கடகம்,சிம்மம்

மிதுனம்

புதன்

கடகம்,துலாம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,ரிஷபம்

சிம்மம்

கடகம்

சந்திரன்

கன்னி,தனுசு,மீனம்,மிதுனம்

சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம்,மேஷம்

சிம்மம்

சூரியன்

தனுசு,கும்பம்,மீனம்

கன்னி,விருச்சகம்,மகரம், ரிஷபம்,மிதுனம்,கடகம்

கன்னி

புதன்

துலாம்,விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,ரிஷபம்,கடகம்

சிம்மம்

துலாம்

சுக்கிரன்

விருச்சகம்,தனுசு,மகரம்,கும்பம்,மேஷம்,மிதுனம்

கடகம்,சிம்மம்

விருச்சகம்

செவ்வாய்

ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம்

தனுசு,கும்பம்,மீனம்,சிம்மம்

தனுசு

குரு

கும்பம்,ரிஷபம்,மிதுனம்,சிம்மம், கன்னி,துலாம்

மேஷம்,விருச்சகம்

மகரம்

சனி

மீனம்,ரிஷபம்,மிதுனம்,கன்னி, தனுசு

கடகம்,சிம்மம்,விருச்சகம்

கும்பம்

சனி

மீனம்,ரிஷபம்,மிதுனம்,கன்னி, தனுசு

கடகம்,சிம்மம்,விருச்சகம்

மீனம்

குரு

ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி, துலாம்,கும்பம்

மேஷம்,விருச்சகம்

 

பூமி சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்து அவற்றை ராசிகள் என்பர். 360 டிகிரியில் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி. முதல் ராசி மேஷம் 0 டிகிரியில் தொடங்கும். இதன்படி சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை. இது இளவேனில் காலம். எனவே இதிலிருந்து தமிழ் மாதங்கள் ஆரம்பிக்கும்.


சங்கராந்தி:
சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நுழையும் வேளையே சங்கராந்தி-இதுவே மாதப் பிறப்பும் ஆகும். 12 ராசிக்கு 12 சங்கராந்திகள்
1.தான்ய சங்கராந்தி-சித்திரை-சூரியன் மேஷ ராசியில் நுழையும் வேளை.
2.தாம்பூல சங்கராந்தி-வைகாசி-சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளை.
3.மனோதர சங்கராந்தி-ஆனி-சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை.
4.அசோக சங்கராந்தி-ஆடி-சூரியன் கடக ராசியில் நுழையும் வேளை.
5.ரூப சங்கராந்தி-ஆவணி-சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை.
6.தேஜ சங்கராந்தி-புரட்டாசி-சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளை.
7.ஆயுள் சங்கராந்தி-ஐப்பசி-சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளை.
8.சௌபாக்யசங்கராந்தி-கார்த்திகை-சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளை
9.தனுஷ் சங்கராந்தி-மார்கழி-சூரியன் தனுசு ராசியில் நுழையும் வேளை.
10.மகர சங்கராந்தி-தை-சூரியன் மகர ராசியில் நுழையும் வேளை.
11.லவண சங்கராந்தி-மாசி-சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளை.
12.போக சங்கராந்தி-பங்குனி-சூரியன் மீன ராசியில் நுழையும் வேளை.

12 இராசிகளும் இராசி புருஷனின் அவயங்களாக கருதப்படும்.
மேஷம்- சிரம்
ரிஷபம்– முகம்
மிதுனம்- கைகள்
கடகம்- இதயம்
சிம்மம்- வயிறு
கன்னி- அரை/இடுப்பு
துலாம்- வஸ்தி
விருச்சகம்-லிங்கம்
தனுசு- துடைகள்
மகரம்- மூட்டு
கும்பம்- கணுக்கால்
மீனம்- பாதம்

1 முதல் 60 வரை இராசியைப் பிரித்து அதில் இனைந்திருக்கும் கிரங்களை வைத்து தனித்தனி பலனை ஒன்று சேர்த்து சொல்வது இராசி பலனாகும். தனி மரம் தோப்பாகாது என்பது போல் இராசியின் ஒரு சிறு பகுதி மட்டும் ராசி பலனாகாது. தானியத்தின் குவியல் போன்றது ராசி பலன்கள். காடு என்றால் பல மரங்களின் தொகுப்பு என்பதுபோன்றே இராசி என்பதும் சரம், ஸ்திரம், உபயம், பகல்ராசி, இரவுராசி, ஒற்றைப்படைராசி, இரட்டைப்படைராசி, ஜலராசி, மனுஷ்யராசி, விலங்கினராசி, ஊர்வனராசி, பறப்பனராசி என அதன் பிரிவுகள் விரிந்திருக்கின்றது. பலன்கள் சொல்லும்போது ராசியின் திசைகள், ராசியின் மாறுபட்ட இடங்கள், லக்னராசி, சந்திரன் இருக்கும் ராசி, அவர்களின் அதிபதிகள் இருக்கும் ராசி, சந்திர லக்ன அம்சகராசி, லக்னாம்சகராசி ஆகியவற்றை இணைத்துச் சொல்லப்படும். கேந்திரம், த்ரிகோணம், உபசயம், அபசயம் போன்ற நிலைகள், அதில் இணையும் கிரகங்கள் ஆகியவற்றையும் சேர்த்து பலனில் சொல்வதால் ராசியின் விரிவாக்கம் துல்லியமான பலனை தேட உதவும்.

ஒரு ராசியில் பிறந்தவனின் இயல்பு மற்றும் உணவு தென்படும் வகையில் இராசிக்குரிய உயிரினங்கள் சொல்லப்பட்டுள்ளன. பிறந்தவனின் இயல்பையும் செயல்பாட்டையும் முடிவு செய்ய இராசிகள் உதவும். இராசியை வழிபட்டால் அத்தனை கிரகங்களையும் வாணங்கியதாகும். பிறந்த நட்சத்திரத்தை வழிபடும்போது இராசியையும் சேர்த்து வழிபடுதல் சிறப்பு.

குருபகவான் தவமிருந்து பிரம்மாவிடமிருக்கும் புஷ்கரத்தைக் கேட்டார். புஷ்கரம் பிரம்மாவிடமே இருக்க விரும்பியது. அதனால் பிரம்மன் விருப்ப்ப்படி 12ராசிகளில் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளில் குருபிரவேசிக்கும் காலத்தில் இருக்க ஒப்புக்கொண்டது. இந்தக் காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடல் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மூன்றரைக் கோடித் தீர்த்தங்களில் நீராடிய பலனைத் தரும். இந்தக் காலம் பூஷ்கரணி தீர்த்த நீராடல் ஆகும்.

மேஷம்-ஆடு- காரமான கொஞ்சம் சூட்டுடன் கூடிய உணவில் விருப்பம். மேஷராசியானால் (மேஷலக்னமாக அல்லது சந்திர லக்னமாக இருந்தாலும்) நான்கு கால் பிராணிகள் போல் நடைப்பயணத்தில் விருப்பம். அவசர அவசரமாக உண்பான். நீரில் பயம் இருக்கும். அளவிற்கு அதிகமான ஆசை இருக்கும். தன்னை தூய்மை படுத்த அக்கறை காட்டமாட்டான்.மேஷம்- ராசிக்குரிய மூலிகை- வைகுண்ட மூலிகை. ராசிக்குரிய புனித நதி. கங்கை

ரிஷபம்–மாடு- புல்லை உணவாக விரும்பும். இது லக்னமானால் பயணத்தில் வேகம் இருக்காது. மெள்ள நடப்பான். பாரத்தை சுமப்பான். துயரங்களைப் பொறுத்துக் கொள்வான். உடல் உழைப்பில் சளைக்க மாட்டான். உட்கொண்ட உணவு ஜீரணிக்கும்படியான அக்னி பலமுண்டு.ரிஷபம்- ராசிக்குரிய மூலிகை- அம்மான் மூலிகை.ராசிக்குரிய புனித நதி.நர்மதை

மிதுனம்-மனிதன்- அரிசி கோதுமை விருப்பம். மிதுனம்- ராசிக்குரிய மூலிகை- அற்ற இலை ஒட்டி.ராசிக்குரிய புனித நதி.சரஸ்வதி

கடகம்-நண்டு- மீனை விரும்பும் கடகம்- ராசிக்குரிய மூலிகை- நத்தை சூரி.ராசிக்குரிய புனித நதி.யமுனை

சிம்மம்-சிங்கம்- மிருகங்களை விரும்பும்  சிம்மம்- ராசிக்குரிய மூலிகை- ஸ்ரீவிஷ்ணு மூலிகை.ராசிக்குரிய புனித நதி.கோதாவரி

கன்னி-ஓடத்தில் அமர்ந்துள்ள கன்யகைப் பெண்- கன்னி- ராசிக்குரிய மூலிகை- துளசி.ராசிக்குரிய புனித நதி.கிருஷ்ணா

துலாம்-தராசு துலாம்- ராசிக்குரிய மூலிகை- செந்நாயுருவி.ராசிக்குரிய புனித நதி.காவிரி

விருச்சகம்-தேள்.விருச்சகம்- ராசிக்குரிய மூலிகை- மஞ்சை கிலுகிலுப்பை.ராசிக்குரிய புனித நதி.தாமிரபரணி

தனுசு-வில் தனுசு- ராசிக்குரிய மூலிகை- சிவனார் மூலி.ராசிக்குரிய புனித நதி.சிந்து

மகரம்-மகரமத்ஸம்.மகரம்- ராசிக்குரிய மூலிகை- யானை வணங்கி.ராசிக்குரிய புனித நதி.துங்கபத்ரா

கும்பம்-குடம்.கும்பம்- ராசிக்குரிய மூலிகை- தகரை மூலிகை.ராசிக்குரிய புனித நதி.பிரமபுத்ரா

மீனம்-இரண்டு மீன்கள். மீனம்- ராசிக்குரிய மூலிகை- குப்பைமேனி.ராசிக்குரிய புனித நதி.பிரணீதா.

 


#####

Read 13577 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 31 March 2019 21:10
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879142
All
26879142
Your IP: 54.226.25.246
2024-03-19 08:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg