gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 17 July 2018 19:45

பைரவ சபை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!

####

பைரவ சபை!

பைரவர்!

இரண்யாட்சனின் வளர்ப்பு மகன் அந்தகாசுரன். சிவனை நோக்கி கடுந்தவமிருந்து யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். தேவர்கள், முனிவர்களை வென்று பெண்டிரை அவமானம் செய்தான். அனைவரும் சிவனிடம் முறையிட சிவன் தன்னுடைய அம்சமாக காலபைரவரைத் தோற்றுவித்து அந்தகாசுரனை அம்ஹாரம் செய்தார். 

ஆதிசங்கரர் அருளிய “காலபைரவ அஷ்டகம்” - போகம், முக்தி இவைகளை அளிப்பவரும், பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும், அடியார்களிடம் அன்பு கொண்டவரும், காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே, காசியம்பதியின் தலைவரே உங்களுக்கு நமஸ்காரம். எனக்கு அருள் புரிவாய் ஐயனே!-

பைரவர் என்றால் எதிரிகளுக்கு பயத்தை தருபவர். தன்னை அண்டியவர்களுக்கு பயத்தைப் போக்கி பலத்தை அளிப்பதால் சிவன் இவருக்கு திரிசூலம் அளித்து காவல் உரிமையை அளித்தார். ஈசனைப்போலவே 64 அம்சங்களை உடையவர் பைரவர். சிவாலயங்களில் பைரவரின் ஏதாவது ஓர் அம்சம் பரிவார மூர்த்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அஷ்ட-எட்டு திக்குகளிலும் பைரவரே காவல் புரிகின்றார். இந்த சிறப்பான எட்டு வடிவங்களே அஷ்ட பைரவர் என போற்றப்படுகின்றது. கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் தோன்றியவர் காலபைரவர். இவர் சூரியனுடைய அம்சத்தை பெற்றவர். ஆதலால் ராகு காலத்தில் ஞாயிறு தோறும் வழிபடுவது சிறப்பு.

“பைரவ துதி”
ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

சிவபெருமானின் ஐந்து குமாரர்களில் ஒருவர் (கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயப்பன், பைரவர்). பைரவரை க்ஷேத்ர பாலர் என்பதுண்டு. 

க்ஷேத்ரபாலர்:-“பைரவ அஷ்டகம்” - செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்.

அஷ்ட பைரவரை பூஜித்து வழிபட்டால் க்ஷேத்திரத்தில் செய்த பாபங்கள் நிவர்த்தி. காசியின் எண் திசைக்கும் காவல் தெய்வங்கள். 1.குருபைரவர்- அனுமத்கட்டம், 2..சண்டபைரவர்- துர்க்காகுண்டம், 3.அஸிதாங்கபைரவர்- விருத்தகாலம், 4.கபாலபைரவர்- லாட்டுபஜார், 5.க்ரோதண பைரவர்- காமாக்ஷாமே, 6.உன்மத்தபைரவர்- பீமசண்டி, 7.சம்ஹாரபைரவர்- திருலோசனா சங்கமம், 8.பீஷணபைரவர்- பூதபைரவம்

தன் ஐந்து தலையால் செருக்குற்ற பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவரைக் கொண்டு கிள்ளச் செய்தார். அந்தக் கபாலம் அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பைரவர் பிரமஹத்தி தோஷத்தால் பல தலங்கள் சுற்றி காசியம்பதியில் அன்னபூரணி அம்மன் அன்னம் அளிக்கும்போது கீழே விழுந்த அன்னத்தை எடுக்க் முயன்ற கபாலத்தைத் தன்காலால் நசுக்கினார். கபாலபைரவராக இருந்து காலபைரவராக மாறி காசியில் அருள்புரிகின்றார். ஒரே பைரவர் எட்டு செயல்களை எண் திசைகளில் செய்யும்போது அஷ்டபைரவராகின்றார்.

அஷ்ட பைரவர்கள்
1.ஸ்ரீ அசிதாங்க பைரவர்-6கரங்கள்.அன்னவாகனம். சக்தி-பிராம்மி,  அஸிதாங்க பைரவ அஷ்டகம்”- முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

வழிபட எதிரிகள் தொல்லை விலகும். எடுத்த நல்ல காரியங்கள் இனிதே முடியும்

2.ஸ்ரீ குரு பைரவர்-4கரங்கள், காளைவாகனம், சக்தி-மஹேஸ்வரி, "குரு பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

வழிபட அரசுப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் கிட்டும். 

3.ஸ்ரீ சண்ட பைரவர்-4கரங்கள், மயில்வாகனம், சக்தி-கௌமாரி, "சண்ட பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பரிகார பூஜைகள் செய்து வழிபட இவரது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும் 

4.ஸ்ரீ குரோத பைரவர்-4கரங்கள், கருடவாகனம், சக்தி-வைஷ்ணவி,  "க்ரோத பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்...

வழிபட உயிர்களின் மன அழுக்குகளான அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவற்றை நீக்குபவர்

5.ஸ்ரீ உன்மத்த பைரவர்-4கரங்கள், குதிரைவாகனம், சக்தி-வராஹி,  "உன்மத்த பைரவ அஷ்டகம்” முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களும் தேய்விறை அஷ்டமியில் நெய்தீபமேற்றி வழிப்ட்டால் நலன் பெறுவர்.

6.ஸ்ரீ கபால பைரவர்- 4கரங்கள், யாணைவாகனம், சக்தி-ஐந்த்ரீ, இந்திராணி, "கபால பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..

பஞ்ச பூதங்களையும் இயக்கும் இவரை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அகற்றி நல்வாழ்வு அளிப்பார்.

7.ஸ்ரீ பலி பீஷ்ண பைரவர், சிம்மவாகனம், சக்தி-சாமுண்டி, பீஷ்ண "பைரவ அஷ்டகம்” மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

நெய் தீபமேற்றி வழிபட்டால் திருமணத்தடை விலகும். புத்திர பாக்யம் கிட்டும்.

8.ஸ்ரீ கால சம்ஹார (வடுக)பைரவர்-8கரங்கள், நாய்வாகனம், சக்தி-சண்டிகை "சம்ஹார பைரவ அஷ்டகம்” பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை ,எப்போதும் எனக்காக வேண்டி தியானிக்கிறேன்..

இவரின் அம்சமே மற்ற ஏழு பைரவர்களும். தேய்பிறை அஷ்டமியில் இவரை பூஜித்தால் அனைத்து பலன்களும் கிட்டும்.  இவர் காலத்தில் நனமை அளிப்பவர். ஆபத் உத்தாரணர். இவரே மகாகாலர், க்ஷேத்ரபாலர், சட்டபாலர் என பூஜிக்கப்படுகின்றார்.

 

#####

Read 11747 times Last modified on திங்கட்கிழமை, 10 December 2018 11:45
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880703
All
26880703
Your IP: 100.25.40.11
2024-03-19 16:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg