gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 07 May 2018 03:01

ஐப்பசி மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

&&&&&

ஐப்பசி மாத விரதங்கள்!

ஐப்பசி பௌர்ணமி- ஐப்பசியில் கோமேதக லிங்கம், வழிபாடு சிறப்பு பூஜித்து மிஞ்சிய சாதத்தை மட்டும் உண்டு சிவபூஜையை முடிக்க வேண்டும்.

ஐப்பசிமாத அஷ்டமி காந்த-ஈஸ்வரன்-வணங்கினால் 1000 யாகபலன். 

ஐப்பசி சிறப்பு- அன்னாபிஷேகம்! உயிர்கள் உயிர்களுக்குப் பல தான தருமங்களைச் செய்யச் சொல்லியிருந்தாலும் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றே சாஸ்திரங்கள் பகர்கின்றன. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தார் என இலக்கியங்களும் போற்றும் உயர்ந்த நிலையில் உள்ள அந்த அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.

அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் என்கிறது சாமவேதம். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதி அந்தமில்லா இறைவன் அன்னத்தின் வடிவிலும் இருக்கிறார் என்பதே இதன் பொருள். சிவசக்தி ஐக்கியமாக கருதப்படும் அன்னாபிஷேகத்தை தரிசித்தால் தம்பதியினர் ஒற்றுமை ஓங்கும். குலம் தழைக்கும். பௌர்ணமி தினத்தன்று சிவபெருமான் சந்திரனின் பதினாரு கலைகளுடன் கூடிய பூரண அம்சமாக ஆழ்ந்த யோக நிலையில் ஆனந்தமாக இருப்பார். அதனால்தான் மிக உயர்ந்த மகா அபிஷேகமெனப்படும் சுத்த அன்னத்தால் செய்யப்படும் அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமியில் நட்த்தப்படுகின்றது. அன்னாபிஷேகத்தில் இருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமாக கருத வேண்டும். அந்த சிவதரிசனம் பலகோடி சிவதரிசனத்திற்கு சமமானது.

ஐப்பசி காலையில் பெருமானின் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் லிங்கத் திருமேனி மூவதும் மறையும்படி சுத்த அன்னம் சாத்தப்படுகின்றது. இரண்டாம் காலம்-மாலை 1800 மணியிலிருந்து இரவு 2030 வரை அன்னாபிஷேக மூர்த்தியாக இருந்து இரண்டாம் கால பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்படும். பாணப்பகுதியில் உள்ள அன்னம் வெப்பம் மிகுந்து இருக்கும் அதனால் அதை திருக்குளத்திலோ கடலிலோ அல்லது நீர் நிலைகளிலோ விட்டுவிடுவர். பாணப் பகுதி தவிர மற்றப் பகுதியில் உள்ள அன்னம் தயிருடன் சேர்த்து மக்களுக்கு பிரசதமாக வழங்கப்படும்.

சிவன் பிம்ப ரூபமாக இருக்கிறார். உயிர்கள் அனைத்தும் அவரது பிரதி பிம்ப ரூபம். உயிர்கள் உணவு உண்டு பிரதி பிம்பத்தை திருப்தி செய்கின்றது. பிம்பம் திருப்தியானால் மட்டுமே பிரதி பிம்பத்தால் இயங்க முடியும். எனவே பிம்பத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து திருப்தி படுத்த முயல்கின்றோம். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாரக இருக்கும் பருவகாலம் ஐப்பசி. அப்போது அந்த புதிய நெல்லைக் குத்தி அந்த அரிசி கொண்டு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு

சுக்கிரவார விரதம்- முருகனுக்கு உகந்த சுக்கிரவார விரதம் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பக்தி சிரத்தையுடன் தொடர வேண்டும். குடும்பத்தில் நலம் நிலைக்கும். செல்வம் பெருகும். இந்த விரதம் விநாயகர், உமாதேவி, முருகன் என மூவருக்கும் உகந்தது.

சஷ்டி விரதம்- ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வளர்பிறையில் பிரதமை திதி முதல் சஷ்டிதிதி வரை உள்ள ஆறு நாட்களும் சஷ்டி விழா விற்குரியது. சஷ்டி திதியில் வரும் விரதம் என்பதால் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருக்க முடியாதவர்காள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் அருந்தி ஆறாவது நாளன்று பூரண விரதம் இருக்க வேண்டும். 

வளர்பிறை தினத்தன்று வைகறையில் துயிலெழுந்து ஆற்றின் எதிர்முகமாக நின்று முக்கோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரத்தின் நடுவில் ஓம் என்று எழுதி முருகனை சிந்தையில் நிருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும். கிணறு குளத்திலும் இது போன்றே குளிக்க வேண்டும். பின்னர் வழ்க்கமான பூஜைகளை முடித்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். முருகனுக்கு உகந்த துதிகளைச் சொல்ல வேண்டும். தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறு ஆண்டுகள் இருந்தால் நல்லது. ஒரு வேளை அரிசி உணவு எடுத்துக் கொண்டு காலையும் இரவும் பால், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். சஷ்டியில் உபவாசம் இருந்தால் கருப்பையில் கரு உண்டாகும்- ஐப்பசி வளார்பிறை சஷ்டியில் ஷண்முகனை நினைந்து விரதம்- உப்பு இல்லாத உணவை உட்கொண்டு நியமத்துடன் கடைபிடித்தால் கந்தனின் அருளால் சந்தான பாக்யம் கிடைக்கும். சர்வமங்களம் சேரும். சட்டியில் இருந்தால் அகப்பையில் தானே வரும் என்பது பழமொழி- விரதத்தின் பலன் அகமாகிய ஆன்மாவில் பதியும். அது பிறவிகள் பல எடுக்கும்போது புண்ணியமாக வளரும் என்பதே சூட்சுமம்.

கேதார கௌரி விரதம்- விகட நாட்டியத்தைக் கண்ட தெய்வீக தம்பதி சிவபார்வதியினரை அங்கிருந்த அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டுருவம் எடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்தார். கோபம் கொண்ட பார்வதியை, பிருங்கி முனி வீடு பேற்றை மட்டும் விரும்புகின்றார். பூவுலகில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் யாவும் இல்லை. ஆகையால் இகவாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கவில்லை என்று ஈசன் சமாதானம் கூறியும் அதனை ஏற்காமல் தன் சக்தியை பிருங்கியிடமிருந்து எடுத்துவிட்டார். வலுவிழந்து தள்ளாடிய முனிவருக்கு கோல் ஒன்றைக் கொடுத்து அவர் தடுமாறாமல் நிற்கச் செய்ய பிருங்கி சிவனை வணங்கி சென்றார்.

தன் கணவர் தன்னை மதிக்க வில்லை என்று கூறி உமை கோபங்கொண்டு சிவனைப் பிரிந்தார். பூவுலகில் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து ஈசனை மீண்டும் அடைய கௌதம முனிவரின் ஆலோசனைப் படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டார். 21 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஈசனுடன் சேர்ந்தார். ஈசன் தன்னில் பாதியை பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி. கேதாரம் எனும் சேத்திரத்தில் பார்வதி விரதம் இருந்ததால் கேதார கௌரி விரதம் என்றானது.

ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் கேதார விரதம் அனுஷ்டிக்கப் படுகின்றது. அந்நாளே தீபாவளித் திருநாள். ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசைப்படுத்தும் நாள் தீபாவளி.

தீப ஒளித் திருநாள்! -ஐப்பசி திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் நந்தி தேவருக்கு விசேஷமானது. மற்றும் யமனுக்குரிய நாள். அன்று பகல் முழுவதும் விரதமிருந்து மாலை பிரதோஷ வழிபாட்டை செய்து வழிபட்டு யம தீபம் ஏற்றி உயரமான இடத்தில் வைத்து எள்ளும் நீரும் அதன் பக்கத்தில் வைத்தால் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது ஐதீகம். எமதீபம்- பெரிய வட்டமான மண் விளக்கில் நல்லெண்ணெய் மட்டும் ஊற்றி பருத்தி துணியால் ஆன திரி போட்டு வடக்கு அல்லது மேற்கு நோக்கி வைத்து விட்டு பின் விளக்கேற்றவும் அருகில் எள், நீர் வைக்கவும். எமனே, தர்ம ராஜனே, எங்கள் முன்னோர்களுக்கு எங்களை அறியாமல் ஏதாவது குறை வைத்திருந்தால் அதை நீக்கி அவர்களுக்கு நிம்மதி கிட்டச் செய்வீராக என வணங்கி வழிபடவும். மேலும் தீயவை அழிந்து நல்லவை நிலவுவதற்கு அடையாளமாக விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றோம்.

அமாவாசைக்கு முதல் நாள் ஐப்பசி- நரக சதுர்தசி தீபாவளியாக கேரளம், தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றது. பூமாதேவியின் மகன் நரகாசூரனை சத்யமாவின் துணையுடன் கிருஷ்ணர் வதம் செய்த நாள். மகாவிஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்வுடன் பாதாளலோகம் செல்லுமுன் பலி ஒர் வரம் கேட்டான். தங்களால் ஆட்கொள்ளப்பட்ட இந்நாளை மக்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, தீபமேற்றி மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதே அது. அதன்படியும் ஐப்பசி சதுர்த்தசி அன்று தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

நீரில்-கங்கை, எண்ணெய்யில்-லட்சுமி, அரப்பில்-சரஸ்வதி, ஆடைகளில் விஷ்ணு ஆகியோர் எழுந்து அருளுவதால் அவைகளை உபயோகிக்கின்றோம் நரகன் என்ற அசுரன் அழிந்து உலகிற்கு ஒளி கிடைத்தநாள் என்பதால் தீபங்களை ஏற்றி வழிபடுதலும் உண்டு.

ஆந்திரம் மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களில் முதல்நாள் தன திரயோதசியும், 2ம் நாள் நரக சதுர்த்தசியாகவும், 3ம் நாள் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடப்படுகின்றது.

மஹாராஷ்டிராவில் துவாதசியன்று ஆரம்பித்து ஐந்து நாள் விழாவாக கொண்டாடப் படுகின்றது. 1ம்நாள் பசுவிற்கும் கன்றுவிற்கும் பூஜை. 2ம் நாள் தந்தேரஸ்- தன் திரயோதசி-லட்சுமிக்கு உகந்த நாள்- பொன் பொருள் வாங்க ஆர்வம். 3ம் நாள் நரக சதுர்த்தசி- கிருஷ்ணருக்கு பூஜை. 4ம் நாள் லட்சுமி பூஜை. 5ம் நாள் பாலி பிரதிபாதா- வாமன ரூபத்தில் விஷ்ணு மகாபலிச் சக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தும்போது இந்த நாளில் பூலோகத்தில் மக்களின் சந்தோஷங்களைப் பார்த்து செல்வதாக ஐதீகம்.

குஜராத்தில் கிருஷ்ணபட்ச துவாதசியன்று ஆரம்பித்து ஆறு நாள் விழாவாக கொண்டாடப்படுகின்றது. 1ம்நாள் பசுவிற்கும் கன்றுவிற்கும் பூஜை- வாக்பரஸ். 2ம் நாள் தந்தேரஸ்- தன் திரயோதசி-லட்சுமிக்கு உகந்த நாள்- பொன் பொருள் வாங்க ஆர்வம். 3ம் நாள் லட்சுமி பூஜை. இந்த நாளே இங்கு தீபாவளி. லட்சுமியுடன் குபேரனுக்கும் பூஜை. விளக்கு ஏறி லட்சுமியை வரவேற்கின்றனர். 4ம் நாள் காளி சௌடாஸ் விளக்கு ஏற்றி அலங்காரம். 5ம் நாள் போர்டுவர்ஷ்- குஜராத்திகளின் புது வருடம் தொடக்கம். இதை லாப்பன்சம் என்பர். 6ம் நாள் பாயி தூஜ்- சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்தல்- யமனின் சகோதரி யமுனை தன் சகோதரனுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்த நாள்.

மேற்கு வங்காளம்- தீபாவளி கொண்டாட்டங்கள் காளி பூஜா எனப்படும். திரியோதசி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. நிஷாபூஜா, ஷியாமாபூஜா எனப்படும். மகா காளி அரக்கர்களோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள். மண்ணால் ஆன காளி உருவத்திற்கு அரக்கு வளையல், சங்கு வளையல், குங்குமம் வைத்து புத்தாடை உடுத்தி இனிப்பு வழங்கி வழிபட்டு இறுதிநாள் கடலில் கரைக்கின்றனர்.

கொங்கன், கோவா- நரகாசூரன் மடிந்த நாளே இங்கு தீபாவளி. நரக சதுர்தசிக்கு முதல் நாள் காகித்தாலும் சணலாலும் நரகாசூரன் உருவம் செய்து மறுநாள் காலை பட்டாசுகள் மூலம் அவற்றை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்து இனிப்பு சாப்பிட்டு எண்ணெய் ஸ்நானம் செய்தால் தீங்கு நீங்குவதாக ஐதீகம். அன்று வீடுகளில் சிறப்பு பூஜை.

உத்ரபிரதேசம், ராஜஸ்தான், உத்ராஞ்சல், மத்தியபிரதேசம், ஆகிய மாநிலங்களில் அமாவாசையை ஒட்டிய நாள் மாலை நேரத்தில் தொடங்குகிறது தீபாவளி. ராம- ராவண யுத்தம் முடிந்து ராமர் வெற்றி வீரராக அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது. வரணாசியில் அன்னபூரணிக்கு லட்டு தேர் செய்து பூஜிக்கின்றனர்.

பீகார், இமாசலப் பிரதேசம்- பசுவிற்கும் கன்றுவுக்கும் பூஜை செய்கின்றனர். தீபாவளிக்கு மறுநாள் பாயிதூஜ் எனப்படும் சகோதரப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

கங்கோத்ரி, யமுனோத்ரியில் முதல்நாள் தீபாவளி. 2ம் நாள் யமதுவிதியை பண்டிகை. 3ம் நாள் தேவியை தாய் வீடிற்கு அனுப்பும் பண்டிகை. யமுனோத்ரி அம்மனை கடுமையான குளிர்காலத்தில் கர்சாலி மலைகிராமத்திற்கு எடுத்துச் சென்று உனியால் என்ற வம்சத்தினர் பூஜை செய்து வருவர்.

&&&&&

Read 4791 times Last modified on திங்கட்கிழமை, 26 November 2018 11:17
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879901
All
26879901
Your IP: 44.213.99.37
2024-03-19 12:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg