gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 16:47

ஜகத் குரு – ஆதிசங்கரர்

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

$$$$$

ஜகத் குரு – ஆதிசங்கரர்

பாரத தேசத்தில் தர்மத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை நீக்கவும், அழிந்து வரும் ஞானம், மோனம், அன்பு ஆகியவற்றைக் காப்பாற்றவும் அறியாமையில் உழலும் மக்களின் அஞ்ஞானத்தை நீக்கி அறியாமை இருளைப் போக்க ஈசனின் கால்களில் விழுந்து வெண்டுகோள் விடுத்த தேவர்கள், ரிஷிகளிடம், அஞ்சாதிர்கள் தென் தமிழகத்தின் ஒரு பகுதியான காலடியில் நானே அவதாரம் எடுத்து உங்கள் குறைகள் தீர்ப்பேன் என்றார். இது நடந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்னர்.

தத்தாத்ரேயரின் வம்சத்தில் தோன்றிய வித்யாதிராஜரின் மகன் சிவகுரு. மனைவி ஆர்யாம்பிகை. திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் தங்களுக்குப் பிறகு தங்கள் குலதெய்வம் சிவப்பேரூர் சிவனை வணங்க யாரும் இல்லாமல் போய்விடுமே என அஞ்சி காலடியில் இருந்து சிவப்பேரூர்(திருச்சூர்) நடந்து சென்று ஒரு மண்டலம் சிவப்பேரூர் ஆலயத்தில் தங்கி விரதம் இருந்து அப்பனை வணங்கி வழிபட்டனர்.

ஒருநாள் கனவில் தோன்றிய ஈசன், சிவகுரு எனப் பெயர் வைத்திருக்கின்றாயே நீ என்ன சிவனுக்கு குருவா என்று கேட்க விழித்த சிவகுருவிடம் மகன் வேண்டி வழிபாடு செய்கின்றாய் உனக்கு புத்திசாலியான அற்ப ஆயுளுடன் கூடிய குழந்தை அல்லது நூறு ஆண்டுகள் வாழும் முடனாக இருக்கும் குழந்தை இதில் எது வேண்டும் எனக்கேட்டார். விழித்தெழுந்த சிவகுரு மனைவியிடம் சொல்ல அவள் தானும் இதே கனவைக் கண்டதாகச் சொல்ல இருவரும் நமக்கு என்ன வேண்டும் என்று ஈசனுக்குத் தெரியும் என முடிவை ஈசனிடம் விட்டு விட்டனர். அன்று மீண்டும் கனவில் தோன்றிய பெருமான் அந்த ஆதர்ச தம்பதிகளை வாழ்த்தி எல்லாம் அறிந்த புத்திசலியான குழந்தை பிறக்கும் என ஆசீர்வதித்தார்

கர்ப்பவதியான ஆர்யா குழந்தை எட்டி உதைக்கின்றது எனச் சொல்ல அவள் வயிற்றில் காது வைத்துக் கேட்க ஓம் என்ற நாதம் கேட்டு அதிசயப்பட்டார் சிவகுரு. நந்தன வருஷம் வைகாச மாத சுக்லபஷ பஞ்சமி திதியில் வசந்த காலத்தில் சூரியன் உச்சியில் சஞ்சரிக்கும் நண்பகலில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்றிருக்கும் மங்களகரமான சுப வேளையில் ஆதிரை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. சம் -சந்தோஷம், மங்களம். கரன் -தருபவன். என்பதால் சம்கரன் சங்கரன் எனப் பெயர் சூட்டினர்.

சிவகுரு பூஜை செய்யும் மணிமங்கலம் கோவிலில் தேரோட்டம். அதைப்போன்றே தேர் செய்யச் சொல்லி அடம் பிடித்த குழந்தைக்கு பொம்மை தேர் செய்து கொடுத்தார். தேர் வரும்போது சங்கரனை கையில் வைத்திருந்த சிவகுருவிற்கு தேரில் தன் குழந்தை சங்கரன் இருப்பது போன்றும் தன் கையில் தேரில் உள்ள சிவன் விக்ரகம் இருப்பது போன்று காட்சி கிடைக்க அதிர்ந்த சிவகுரு ஈசனே தன் மகன் என உணர்ந்தார். மேலும் தன்னை தேர் செய்யச் சொல்லியதால், சிவன் கோவிலுக்கு தேர் செய்தால் சிவலோகப் பதவி என சாஸ்திரத்தில் சொல்லியிருப்பது புலப்பட்டது அப்படியானால் இறைவன் தன்னை ஆட்கொள்ளப்போகின்றான் என்று உணர்ந்தார். அன்றிரவு சங்கரனைக் கட்டிப் பிடித்தபடியே இறைவனடி சேர்ந்தார்.

கனகதாரா

சங்கரனுக்கு ஐந்து வயதானபோது ஆர்யாம்பிகை பூனூல் கல்யாணம் செய்வித்து அருகில் உள்ள குருகுலத்திற்கு அனுப்பினாள். குரு குலத்தில் இருப்பவர்கள் உஞ்சவிருத்தி – பிச்சையில் கிடைப்பதைத்தான் உண்ண வேண்டும். உணவில் சுவை, கர்வம் கூடாது என்பதற்கான பயிற்சி அது. அதன் படி பஞ்சம் தாண்டவமாடிய அயாசகன் வீட்டின் முன் சங்கரன் சென்று ‘பவதி பிஷாம் தேஹி’ என்றான். தன் வீட்டின் முன் இந்தக் குரல் கேட்டு பல நாட்கள் ஆகியபடியால் அதிர்ந்த அயாசனின் மனைவி வீட்டில் பிச்சையிட ஒன்றும் இல்லையாதலால் சோர்ந்து நிற்க இரண்டவது முறையாக பவதி பிஷாம் தேஹி ஒலி கேட்க பதறிய அவளின் நினைவிற்கு ஊறுகாய் நினைவுவர அதிலிருந்த ஒரே நெல்லிக் காயை எடுத்துவந்து பிச்சைகேட்ட சங்கரின் பாத்திரத்தில் போட்டாள். அந்தப் பெண்ணின் சோகத்தையும் ஏழ்மை நிலையையும் கண்ட சங்கரன் மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் சொல்ல ஒரு நெல்லிக்கனி தந்த அந்த ஏழை வீட்டில் தங்க நெல்லிக்கனிகள் கொட்ட அவர்கள் வாழ்வு வளமாயிற்று.

கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில்
மணம் வீசும் முகுள மலர்களைத் தங்கநிற வண்டுகள் மொய்ப்பது போல மகாவிஷ்ணுவின் மார்பிலே தங்க மங்கையான மகாலக்ஷ்மியின் பார்வை உறைந்திருக்கின்றது. அதனால் பரந்தாமன் எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்திருக்கின்றார். பொன்மகளே அத்தனை மகிமை வாய்ந்த உன் கடைக்கண் பார்வையை இந்தப் பக்கம் திருப்பி சகல சௌபாக்கியங்களையும் தருவாயாக!

தங்க நிறத்தில் தாமரைப் பூவை வைத்திருப்பவளே போற்றி!
உலகங்களின் நாயகியான என் தாயே போற்ரி!
தேவர்களுக்கும், கலைஞர்களுக்கும் கருணை காட்டும் தெய்வமே போற்றி!
திருமாலின் மகிமையால் எல்லா சக்திகளையும் பெற்றவளே போற்றி!

கருணை என்னும் காற்று நிறைந்த லக்ஷ்மிகடாக்ஷம் என்னும் மேகம் ஏழையான இந்த சாதகப் பறைவையின் தாபத்தை அகற்றி தனம் எனும் மழையைத் தரட்டும்!

பூஜிக்கத்தக்கவளே, உனக்குச் செய்யும் நமஸ்காரம் செல்வத்தை அளிக்கும். மகிழ்ச்சியைத் தரும். சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும். பாவங்களைப் போக்கும்.!

எனவே எப்போதும் உன்னை நமஸ்கரிக்கும்படி எனக்கு அருள்புரிவாயாக!

தாமரையில் அமர்ந்திருப்பவளே! கையில் தாமரையை வைத்திருப்பவளே! பட்டு ஆடை, சந்தனம், பூக்கள் ஆகியவற்றை அணிந்தவளே! பகவதியே! ஹரிபத்தினியே! அழகியே! மூன்று உலகங்களிலும் செல்வத்தை வாரி வழங்குபவளே! அருள் செய்வாயாக!

புளியம்பழஓடு

குருகுலத்தில் இருக்கும்போது சங்கரன் தன் அம்மாவை நினைக்க அவள் தன் மகனுக்கு குருகுலம் முடிந்ததும் திருமணம் நடத்த கனவு கண்பது புரிந்தது. தான் சன்னியாசம் ஏற்பதை அம்மாவிற்கு உணர்த்த கனவில் சந்நியாசி கோலத்தில் காட்சியளிக்க பயந்துபோன ஆர்யா குருகுலத்திற்கு வந்து மகனை கூட்டிக் கொண்டு போகும் வழியில் ஒரு புளிய மரத்தடியில் இளைப்பாரினர். அப்போது புளியைப் பார்த்து ஆசைப்பட்ட ஆர்யா ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு முகம் சுழிக்க தன் அம்மாவிற்கு பழுத்த பழம் ஒன்றை தந்து இது சுவையாக இருக்கும். பக்குவமாக இருக்கும். புளியம்பழத்தின் ஓடுதான் பந்தம், பாசம் புரிகின்றதா அம்மா என்றார்.

காலடி

தினமும் பூரணநாதிக்குச் சென்று நீராடி வழிபட்ட ஆர்யா ஓர் நாள் உடல் சோர்வால் ஆற்றங்கரையில் விழுந்து கிடந்தாள். அன்னையை வீட்டிற்கு கூட்டிவந்த சங்கரன் அன்னையை ஆற்றுக்கு அனுப்பாமல் தானே நீர் கொண்டுவர பூரணா நதிக்குச் சென்றார். குழந்தை வடிவான ஈசனைக் கண்ட பூரணா நதி அவரின் பின்னே வந்து அவர் வீட்டு வாசலைத் தொட்டுச் சென்றது. அவர் கால் அடிகளைப் பின்பற்றி நதி ஓடி வந்ததால் ஊர் காலடி எனப் பெயர் பெற்றது.

காலம் நெருங்கிவிட்டது

சங்கரனால் பூரணாநதி தன் வீட்டுப் பக்கம் வந்ததை நினைத்து ஆனந்தப்பட்டாலும் தன் மகன் தெய்வீக சக்தி உள்ளவன் என்பதால் தன்னை விட்டு போய்விடுவானோ எனப் பயந்தாள். தன் மகனுக்கு திருமணம் செய்ய விரும்பினாள். உணர்ந்த ஈசன் சப்த ரிஷிகளை வரவழைக்க அவர்களுக்கு மோர் கொண்டுவரும்போது காலம் நெருங்கிவிட்டது என அவர்கள் சொன்னது ஆர்யா காதில் விழ இறைவன் தந்த வரத்தைப்பற்றி நினைத்து துயரம் அடைந்தாள். இறைவன் அப்படி நிர்ணயித்திருந்தாள் யார் மாற்ற முடியும் என சங்கரன் ஆறுதல் சொன்னார்.

மறுபிறவி

அடுத்த நாள் சங்கரன் புரணா நதியில் குளிக்கும்போது ஓர் முதலை சங்கரின் காலை பற்ற அவர் அலற திரண்ட ஊர்மக்கள் ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்தனர். ஆர்யா பயத்தினால் கண்ணைமூட தாயே கடைசியாக உன் மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றான் சங்கரன். ஒரு தாயால் தன் கண் முன்னே தன் உயிரினும் மேலான மகன் இறப்பதை எப்படி பார்க்க முடியும் அழுதாள். அரற்றினாள், பிதற்றினாள். அப்போது நீ நினைத்தால் என்னைக் காப்பாற்ற முடியும் எனச் சங்கரன் சொன்னான். அம்மா, இந்த ஜென்மத்திலே எனக்கு முதலையினால் சாவு என எழுதியிருக்கு. அதை மாத்த முடியாது. ஆனால் நான் சந்நியாசம் வாங்கி விட்டால் அது அடுத்த பிறவியாகும் அதனால் முதலையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றான். அதற்கு ஆர்யா ஒப்புக்கொள்ள காலை கவ்விய தேவதூதன் விண்ணில் எழுந்து வணங்கி மறைந்தான். சங்கரன் சொந்த பந்தங்களை நீக்கிக் கொள்வதாக சங்கல்பம் செய்து புனித பூரணாநதியில் மூழ்கி சன்னியாசியாக எழுந்தார். அன்னையிடம் இறுதி காலத்தில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் நான் வருவேன் என்று கூறி வணங்கி சங்கரராக புறப்பட்டார்.

தீட்சை

சங்கரர் தன் குருவைத்தேடி புறப்பட்டார். நர்மதை நதிக்கரையோரம் ஒரு குகையிலிருந்து வந்த ஓம் ஓசை அவரை ஆட்கொண்டது. வாசலில் நின்றார். மனதில் நினைத்தார். எண்ணங்கள் உள்ளேயிருப்பவருக்கு உணர்த்த தான் எந்த சீடனுக்காக, யாருக்காக காத்திருந்தோமோ அவர் வந்திருப்பதை உணர்ந்தார் குருதேவர் மகான் கோவிந்த பகவத் பாதர். யாரப்பா நீ! என்றார்.

சுகமோ, நோயோ எனக்குக் கொஞ்சமும் தெரியாது,
அறமோ, பாவமோ அதுவும் தெரியாது.
மந்திரம், வேதம், கோவில் எதுவும் தெரியாது,
நான் சாப்பிடுபவன் அல்லன், சாப்பிடப்படும் பொருளும் அல்லன்,
நான் நிரந்தரமான பேரின்ப உணர்வு நிலை
சிவன் நான்! சிவன் நான்!

மரணமோ, பயமோ எனக்குக் கிடையாது,
சாதி வேறுபாடுகளும் எனக்கில்லை,
அம்மா, அப்பா எனக்கு ஏது! பிறவிகூட எனக்கில்லை,
நன்பன்கூட கிடையாது, சீடன் இல்லை,
குருவும் இதுவரை இல்லை, நான் நிரந்தரமான பேரின்பம்,
என்பெயர் சிவம், சிவனே நான்!

எனக்கு உருவமில்லை, அரூபமும் இல்லை
எங்கும் இருப்பவன் நான்!
ஆனால் என்னை யாருக்கும் புரியாது,
விடுதலை இல்லை, அறியப்படுவதும் இல்லை,
நான் நிரந்தரமான பேரின்பம்!
நான் சிவன், சிவன் நான்!

இந்த வரிகளைக் கேட்டபடி வந்த கோவிந்தபகவத்பாதர் கையில் கமண்டலத்துடன் இருக்கும் பாலகனைப் பார்த்து உனக்காகத்தான் நான் காத்திருக்கின்றேன் என்றார். பின்னர் சங்கரரைப் பார்த்தபடியெ நர்மதை நதியையும் பார்த்தார். குருவின் பார்வையைப் புரிந்தகொண்ட சங்கரர் தன் கையிலிருந்த கமண்டலத்தை தண்ணீரில் அழுத்த சுழன்று சென்ற நர்மதா அந்த கமண்டலத்திற்குள் சங்கமம் ஆனது. ஈசனே சங்கரராக வந்திருப்பது கண்டு மனம் குளிர்ந்த பாதர் முறைப்படி அவருக்கு சிகை மழித்து செங்காவி உடை அணிவித்து தண்டம் தாங்க தீட்ஷை அளித்தார். சன்னியாசி ஆன சங்கரருக்கு அத்வைதம் போதித்தார்.

ஒரு சராசரி சிஷ்யனாக குரு கோவிந்த பகவத் பாதருக்குத் தொண்டு செய்து வந்தார் சங்கரர். ஒருநாள் பாதர் சங்கரரை நோக்கி நீ காசி செல்லும் காலம் வந்து விட்டது. அங்கே அத்வைத தத்துவத்தை போதிக்க ஆசி கூறினார். என்னுடைய குருமகான்கள் கூறியபடி என் பணியை முடித்துவிட்டேன் எனக்கூறி பத்திரிகாசிரமத்திற்குப் புறப்பட்டார் கோவிந்த பகவத் பாதர்.

காலடி சங்கர் கால்கள் காசி நோக்கி நகர்ந்தன. கங்கை கரையை அடைந்தார். விஷ்ணுவும், சிவனும் ஒன்றே! ஒன்றிலிருந்து தோன்றிய இரு வடிவங்களே என்ற அத்வைத கருத்தை கங்கை சொல்வதாக நினைத்தார். மாண்டவர்கள் காதில் ஈசன் மந்திரம் ஓதும் மணிகர்ணிகா படித்துறையில் அமர்ந்து அத்வைத தத்துவத்தை போதிக்க ஆரம்பித்தார். கோவிந்தபகவத்பாதர் கூற்றுப்படி பிரம்ம சூத்திரங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உரை இயற்றினார்.

சனந்தனர்-விஷ்ணு- பத்மபாதர்

ஒருநாள் சோழநாட்டிலிருந்து சனந்தனர் என்று ஒருவர் வந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உற்றுப்பார்த்த சங்கரர் தன் ஞான திருஷ்டியால் வந்திருப்பது விஷ்ணுவே என்றறிந்தார். சங்கரரும் சனந்தரும் நெருக்கமாக பேசிக் கொள்வது மற்ற சீடர்களுக்கு சனந்தனர் மேல் பொறாமையை ஏற்படுத்தியது. இதைப் போக்க நினைத்த சங்கரர் அக்கரையில் ஒரு வேலையை செய்ய சனந்தனரை பணித்தார். அன்றைய பாடத்தை ஆரம்பித்தார். அப்போது திடிரென்று சனந்தனரை இங்கே வா என்று சைகை செய்தார். அதைக் கண்டதும் குரு அழைக்கின்றார் என்பதை தவிர இடையே கங்கை இருப்பதையும் மறந்து நடக்க ஆரம்பித்தார். சீடர்கள் அவர் கங்கையில் மூழ்கி விடுவார் என நினைத்தனர். ஆனால் கங்கை அவர் வைக்கும் ஒரு அடிக்கும் ஒரு கமலத்தை வைக்க அதன் மேல் காலடிவைத்து சங்கரரை வந்தடைந்தார். சனந்தனரின் பெருமையை உணர்ந்த சீடர்களின் பொறாமை  அகன்றது. அன்றுமுதல் சனந்தனர் பத்மபாதர் என்றழைக்கப்பட்டார்.

சங்கரருக்கு ஞானம்- மதீஷா பஞ்சகம்-தரிசனம்

குறுகலான பாதை வழி சீடர்கள் பின்தொடர சங்கரர் விஸ்வநாதர் ஆலயம் சென்று கொண்டிருந்தார். எதிரில் சொறி பிடித்த நான்கு நாய்களுடன் குளித்து பல நாட்கள் ஆன ஒருவன் வந்து கொண்டிருந்தான் அவன் தங்களுக்கு வழி விட்டு விலகிச் செல்வான் என்று நினைத்தார் சங்கரர். அவன் விலகாததால் கொஞ்சம் விலகு என்றார்.

அவன் குதித்துச் சிரித்தான், சாமி என்ன சொல்றீங்க. விலகு விலகு என்று சொல்றீங்களே. எதிலிருந்து விலகனும்னு சொல்றீங்க எனக்குப் புரியலையே. நான் ஒரூ சோத்துப் பிண்டம். ஒரு சோத்துப் பிண்டத்தை இன்னொரு சோத்துப் பிண்டம் விலகச் சொல்வது சரியா என்றார். கூட்டுக்குள்ளே ஞான ஒளி இருக்குன்னு சொல்வாங்களே அப்படீன்னா ஒரு ஒளியைப் பார்த்து இன்னொரு ஒளி ஒளியனுமா என்றான். சாமி நீங்க தினம் தினம் சூரியனை கும்பிடறதைக் பார்த்தேன். அந்தச் சூரியன் கங்கைக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் பர்க்காமல் தன் ஒளியை வீசுகின்றதே, என் கள் குடத்தைக் கொண்டு கங்கையில் நீர் மோர்ந்தால் அது நிரம்பும். தங்க கலசத்தில் நீர் மோர்ந்தாலும் அது நிரம்பும். என்று அந்த புலையன் சொல்ல சொல்லக் கேட்ட சங்கரர் அந்த அர்தத்தை அப்படியே உள்வாங்கினார்.

அந்த புலையனை அப்படியே உற்றுப் பார்த்தார். அவர் கண்களில் நீர் வழிந்தது. கை கூப்பினார். பரவசமானார். மும்முறை வலம் வந்து புலையனின் கால்களில் அப்படியே விழுந்து வணங்கினார். குருவே குருவே என்று உருகினார். அந்த பரவச உணர்ச்சியில் குருவைப் போற்றும் மதீஷா பஞ்சகம் பாடினார். அப்போது புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதர் காட்சி கொடுக்க, கங்கை மற்றும் நான்கு வேதங்களும் காட்சி கொடுக்க சங்கரர் சங்கரனை மீண்டும் வணங்கினார்.

ஆயுள்- எட்டு- எட்டு- பதினாறு

தன் ஆயுள் எட்டு ஆண்டுகள் என்று சங்கரரே நிர்ணயத்தது. எட்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலை கவ்வ சன்னியாசியானதால் மறுபிறவியாகி அடுத்த எட்டு ஆண்டுகள் என பதினாறாகி அது நாளையுடன் முடிகின்றது என்ற நிலையில் வியாச பகவான் வந்து தான் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி சங்கரருடன் சில விளக்கங்களை கேட்டு பலநாட்கள் விவாதித்து திருப்தியுடன் மறைந்திருந்த அத்தனை விடைகளையும் உன் உரையில் விளக்கியுள்ளாய் எனப் பாராட்டினார். என் கடமை முடிந்து விட்டது இன்றோடு இந்த பூவுலகைவிட்டுப் பிரியலாம் என நினைக்கின்றேன் என்ற சங்கரரை, பக்தி மார்க்கத்தை எளிமைப்படுத்தி சீர் செய்ய வேண்டும், எனவே நீ இன்னும் பதினாறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ விருப்புகின்றேன் என்று மேலும் பதினாறு ஆண்டுகளுக்கு சங்கரரின் ஆயுளை நீட்டித்து ஆசி புரிந்தார் வியாசபகவான்.

வியாசபகவானின் ஆணைப்படி முதலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் தசோப நிஷத்துகளுக்கும் உரை எழுதி அவையெல்லாம் அத்வைத தத்துவத்தையே கடைசி தத்துவமாக எடுத்தியம்புகின்றன எனத் தீர்க்கமாக விளக்கினார். பின்னர் நரசிம்ம பூர்வதா பனீயம், சுவேதாஸ்வதார என தொடர்ந்து உரைகள் எழுதினார். பின் இந்து மதப் பிரசாரம் செய்ய கிழக்கு திசைநோக்கி வந்து பிரம்மன் சரஸ்வதியை திருமணம் புரிந்த சந்தோஷத்தில் யாகம் செய்ததால் பிரயாகை எனப்பட்ட திரிவேணி சங்கமம் வந்தார்.

மாறிய குமாரிலபட்டர்

குருவை தெய்வமாக மதிக்கும் மதத்தில் பிறந்த தான் பௌத்தத்தை தன்னை சீடனாக நம்பி போதித்த குருமார்களை ஏமாற்றி விட்டோமோ என்ற மனவேதனை பிரயாகையில் பிறந்த குமாரிலபட்டருக்கு இருந்தது. அது குருத் துரோகம் என நம்பினார். கடவுள் இல்லை கர்மாவே பலன் தரும் என்று போதிக்கும் நான் இப்படி போலியாக நடந்து கொள்ளலாமா என வருந்தினார், புத்த விஹாரத்தின் ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது வேதத்தை சாட்சியாக வைத்து உயிர்பிச்சைக் கேட்டவர் எல்லா பௌத்தர்களையும் வாதில் வென்ற பிறகு தற்போது தன் உடலைத் தானே துன்புறுத்தி இறந்துபோகத் தலைப்பட்டு உமிக்காந்தல் தீயில் இறங்கினார்

அந்தத் தீ மெல்லப் பரவி அவர் கால்கள் கருகத் துவங்கியபோது பிரயாகை வந்திருந்த சங்கரர் பௌத்தரை வென்ற குமாரிலபட்டரைக் கண்டு கர்ம காண்டமே முக்கியம் எனும் மனிதரை வேதாந்தத்தின் பக்கம் திருப்பினால் ஞான காண்டத்தின் அவசியத்தை உலகுக்கு நன்றாக உணரவைக்கலாம் என்ற எண்ணத்தில் அவரைப் பார்க்க வந்தார், நிலைமை முற்றியிருக்கக் கண்ட சங்கரர் ஏன் இந்த முயற்சி எனக் கேட்க நான் செய்த பிழைக்கு தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி சிரமான முறையில் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

குமாரிலபட்டரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் கடைசி நேரத்தில் அத்வைதிக முறைகளை அவருக்கு விளக்கினார். இறைவன் அணுக்கிரஹத்தால் மட்டுமே சுக பலன் நீடித்திருக்க முடியும், கர்ம காண்டத்தை மட்டும் அனுசரிப்பது போதாது அதன் நிரந்தர பலன் ஞானகாண்டத்தில் இருக்கின்றது அதுதான் வேதாந்தம் என விளக்கினார். உடலின் அடிப்பாகம் அக்னி கனலால் எரிய உள்ளம் சங்கரரின் அருட்கனலால் வெளிச்சமுற்றது, இருக்கும் ஓர் ஆத்மா அதைக் காரியத்தால் கட்டுப்படுத்த இயலாது, ஆத்மாவில் உறைவதே பிறப்பைக் கழிக்கும் பேரானந்தம் எனச் சங்கரர் கூறக் கேட்ட குமாரிலபட்டர் நெகிழ்ந்து போனார். உங்கள் கருத்தை மக்களுக்குச் செல்ல இயலாத நிலைக்கு ஆனேன் என வருந்தினார், உங்களை நான் குருவாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன் என்றார்,

மாகிஷ்மதி நகரில் மீமாம்சக கொள்கை உடைய மண்டனமிஸ்ரர் என ஒருவர் என்னைவிட தீவிரமானவர் அவரை நீங்கள் வாதத்தில் வெல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்து தன் ஆவியை அக்னிக்கு அர்ப்பணித்தார், சங்கரர் குமாரிலபட்டருக்காகப் பிரார்த்தனை செய்தார், மாகிஷ்மதி நகரை நோக்கி நடந்தார்.

மண்டனமிச்ரர்- சுரேச்வராசாரியார்

மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வலைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வலைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது.

வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் என்று ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.

திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.

கானகத்தில் இறந்துகிடந்த அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.

ஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.

கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள்.

பத்மபாதர், சுரேச்சுவரர் இன்னும் பிற சீடர்கள் பின்தொடர பிரயாகை வந்தவர் நடு சாலையில் இறந்த தன் மகனைப் பார்த்து பெற்றோர்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அந்த இளைஞனின் சவத்தின் முன் நின்று பார்க்க அவன் எழுந்து குருவே நமஸ்காரம் என சங்கரரைப் பின் தொடர்ந்தான். அந்தப் பகுதியில் கர்மவாதியாக புகழ்பெற்ற பிரபாகரனை வாதில் வென்று சீடராக்கினார்.

அட்சயவடம்.

அட்சயவடம் என்பது ஆலமரம். இதன் வேர்கள் பிரயாகை முழுவதும் பரவியிருப்பதாக ஐதீகம், மரத்தின் நடுப்பகுதி காசியிலும் நுனிப்பகுதி கயாவிலும் இருப்பதாக நம்பம்பபடுவதால் தன் சீடர்களுடன் ஆலமர தரிசனம் செய்தர் புனி மரத்தின் கிளையில் ஒரு தொழுநோய்க்காரன் தூக்கிலிட்டுக் கொள்ள முயற்சித்தான். அவனை தொட்டு தழுவி அவன் தொழுநோய் நீங்க அவனுக்கு உதங்கர் என பெயரிட்டு அவனை சீடராக்கிக் கொண்டார்.

பிரயாகைக்கு அருகே உள்ள பிரதிஷ்டானபுரியில் கலைவாணியின் அருள் பெற்ற அமரசிம்மன் நூற்றுக் கணக்காண ஜைன நூல்களை எழுதியிருந்தான். சங்கரருடன் வாதிடவந்தவன் சங்கரர் பாதத்தை பார்த்ததும் அவரை வெல்ல முடியாது என உணர்ந்து சரஸ்வதிதேவியின் உதவியை நாடி ஒரு கலசத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து இடையில் ஒரு திரை போட்டு வாதம் ஆரம்பிக்க எல்ல கேள்விகளுக்கும் பதில் சரியாக வர சந்தேகம் கொண்ட சங்கரர் ஞான திருஷ்டியில் உண்மை உணர்ந்து, கலைவணியே! அன்று சரஸவாணியாக சங்கடமாய் கேள்வி கேட்ட நீ இன்று மீண்டும் சோதிக்கின்றாய் என்றதும் திரை அற்று விழுந்தது. அதன்பின் பதில் சொல்ல திணறிய அமரசிம்மன் பின்புறம் சென்று தான் எழுதி ஜைன நூல்களை தீயிட்டு கொளுத்தினான். சங்கரர் விபரம் உணர்ந்து அவன் தலையில் கைவைக்க அவன் சுய நிலைக்கு வந்தான். அப்போது அமர கோசம் ஒன்று மட்டும் மிஞ்சியிருந்தது. அமரசிம்மனையும் தன் சீடனாக்கி கொண்டார்.

தன் சீடர்களுடன் ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் மல்லிகார்ஜுனர் மேல் சிவானந்தலஹரி பாடல்களைப் பாடினார். அந்தப் பகுதியில் இருந்த கபாலிகர்கள் பைரவரை வணங்கி நரபலி கொடுப்பவர்கள். அதிகாலை நீராடி கொஞ்சநேரம் ஈசுவர தியானத்தில் தனியாக இருக்கும் சங்கரரைக் கொல்ல கபாலிகன் கையில் வாளுடன் வந்தான். சங்கரரைப் பார்த்து சம்மதமா எனக்கேட்க சம்மதம் சொல்லியவர் கண்மூடி அமர்ந்தார். கை வாளை ஓங்கியவன் ஐயோ என்று அலற கண் விழித்தவர் நரசிம்மர் அந்த கபாலிகனை நாராய் கிழித்து போட்டிருக்கக் கண்டார். உடனே காட்சியும் மாறியது அந்த இடத்தில் நரசிம்மருக்குப் பதில் பத்மபாதர் நின்றிருந்தார். பத்மபாதருக்கு நரசிம்ம மந்திரம் உபதேசமாயிருப்பதை சங்கரர் அறிந்தார்.

ஸ்ரீசைலத்திலிருந்து அகோபிலம் வந்து ஸ்ரீ நரசிம்மரை வணங்கினார். அருகில் உள்ள ஸ்ரீபலி என்ற ஊரில் வாய்பேசாத உமையான மகனுடன் வந்த பெரியவர் சங்கரரிடம் தன் குறையைச் சொன்னார். நீயார் சொல்லுப்பா என்றார் சங்கரர். மடைதிறந்த வெள்ளம்போல் சுலோகத்துடன் பாட ஆரம்பித்தான். பேசும் தன் மகனை வீட்டிற்கு கூட்டிச் சென்றால் அங்கு அவன் ஒன்றும் பேசவில்லை. திடுக்கிட்ட தந்தை அவனை சங்கரரிடம் மீண்டும் கூட்டிவந்தார். சங்கரரைப் பார்த்ததும் பாட ஆரம்பிக்க தந்தை இவன் இனி உங்கள் பிள்ளை எனச் சொல்லி அவனை அவரிடம் விட்டார். சங்கரர் அவனுக்கு ஹஸ்தாமலகர் எனப் பெயர் சூட்டி தன் சீடனாக்கி அவன் பாடிய பாடல்களுக்கு குருவானே தாமே உரை எழுதினார். அது ஹஸ்தாமலகீயம் எனப்பட்டது.

கொல்லூரில் கோல முனிவர் வழிபட்ட லிங்கத்தினை சங்கரர் வழிபட்டார். மனக்கண்ணில் காட்சியளித்த அம்பிகையின் வேண்டுகோளின்படி மூகாம்பிகை சிலையை பஞ்ச லோகத்தில் வடித்து லிங்கத்தின் பின் பிரதிஷ்டை செய்தார். பூஜை முறைகளையும் ஆராதனைகளையும் லிங்கத்திற்கு என வரையறுத்துக் கொடுத்தார். தொடர் பயணத்தால் மயங்கிய நிலையில் இருந்தவரை நீ தேடியதால் நான் உன்னைத் தேடிவந்தேன் எனக்கூறிய மூகாம்பிகை எதிரே தோன்றி அமுதம் தந்தாள். அப்போது சங்கரர் அன்னையைப் பாடியது சௌந்தர்யலஹரி எனப்படும்.

கர்நாடக தேசத்தில் பயணம் செல்லும் வழியில் இருந்த பெருமாள் கோவிலினுள் சங்கரரை விட மறுத்தவரிடம் உள்ளே இருக்கும் சிவனும் ஹரியும் ஒன்றே என்ற பின் உள்ளே அழைத்துச் சென்றவர்கள் அங்கே இதுவரை மகாவிஷ்ணு மட்டுமே இருக்கக் கண்டவர்கள் சங்கரரும் நாராயணரும் இணைந்து ஹரிஹரமூர்த்தியாக இருக்கக் கண்டனர். அன்றுமுதல் அந்த ஊர் ஹரிஹரம் என்றானது.

சங்கரர் சிருங்கேரி வந்தார். சாரதா பீடம் ஏற்படுத்தி பிரம்ம விதயா ஸ்வரூபிணியான ஸ்ரீ சாரதாதேவியை பிரதிஷ்டை செய்தார், அங்கு படிப்பறிவில்லாத வேலைக்காரன் கிரி தானாக சுலோகங்களைத் தோடக விருத்தத்தில் பாடிக் கொண்டு வந்து சங்கரர் பாதங்களில் வீழ்ந்து வணங்க அதைக் கண்டு பத்மபாதர் ஆச்சரியப்பட சங்கரர் அவரை தோடகாச்சாரி என்றழைத்து தன் சீடனாக்கிக் கொண்டார்.

பத்மபாதர் சங்கரருடன் சிருங்கேரியில் இருந்தபோது பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு விளக்கவுரை எழுத மண்டனமிஸ்ரர் விரும்ப சங்கரர் அதற்கு விளக்கவுரை தேவையில்லை என்றார். பத்மபாதர் சங்கரரிடம் அனுமதிகேட்க அவர் புன்னகைக்க பத்மபாதர் உரை எழுதி படித்துக் காண்பித்தார். அப்போதும் சங்கரர் புன்னகைப் புரிந்தார். பத்தமபாதர் தான் எழுதி உரையுடன் இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார். வழியில் தன் தாய்மாமன் வீட்டில் ஓலைச் சுவடிகளை வைத்துவிட்டு இராமேஸ்வாம் சென்று திரும்பி வருவதற்குள் அவர் தாய்மாமன் கர்ம மார்க்கத்தைப் பின் பற்றுபவர் வீட்டில் இப்படி ஒரு நூலா என அதை எரித்துவிட்டு அது வைத்திருந்த வீட்டையும் எரித்துவிட்டார். சங்கரரிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி பாதங்களில் வீழ்ந்தவருக்கு நீ படித்துக் காட்டிய பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றது நான் சொல்கின்றேன் நீ எழுதிக் கொள் என்றார். அதற்கு ‘பஞ்சபாதிகா’ எனப் பெயர்.

சிருங்கேரியில் இருக்கும்போது தன்னைப் பெற்ற ஆர்யாம்பிகை அம்மாள் அந்திமக் காலத்தில் இருக்கின்றாள் என்பதை உணர்ந்து மகாவிஷ்ணுவிடம் தன் தாய்க்கு குட்டி கிருஷ்ணனாக காட்சி கொடுத்து அருள பிரார்த்தனை செய்தார். காலடி சென்று தாய் அருகில் அமர்ந்து வாஞ்ஜையுடன் போசினார். அம்மாவின் உணர்வுகள் மெல்ல மெல்ல அடங்கின. சொந்தங்கள் தகராறு செய்த நிலையில் அக்னி பகவானை அழைத்து தன் தாய்க்கு கொள்ளிவைத்தார். சிருங்கேரி வந்தர்.

பிருத்வீதவர் என்ற முற்றும் தெளிந்த சீடரை சரதா பீடத்தின் முதல் ஆச்சார்யராக நியமனம் செய்து அவருக்கு ஆலோசகராக மண்டன்மிஸ்ரர்-சுரேச்சுவரரை நியமித்தார். பின் சிதம்பரம் வந்தார். நடராஜரை தொழுதர்.

சிதம்பர ரகசியம்!

சிற்சபையின் அருகே உள்ள வாயிலில் திரைச் சீலை அகற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்படும் அப்போது அங்கே காட்சியளிப்பது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டுமே. மூர்த்தி யில்லாமல் வில்வம் மட்டும் தெரியும். இதுதான் சிதம்பர ரகசியம். இறைவன் இங்கு ஆகாய வடிவில் இருக்கின்றான் என்பதன் பொருள் அது. அதைக் கண்டு களித்தார் சங்கரர். அன்னாகர்ஷண யந்திரத்தை ஸ்தாபித்தார். திருவிடைமருதூர் பயணமானார்.

அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம்

திருவிடைமருதூரில் முதல் மதிலின் உட்புறம் சங்கரர் வலம்- அஸ்வமேதப் பிரதட்சணம் செய்தார். பூஜித்ததும் நானே பூஜிக்கப்பட்டதும் நானே என்று விளக்கம் தந்த மகாலிங்கத்தை வணங்கினார். தான் செய்யும் அத்வைத பிரச்சாரம் சரியா என்ற மகாலிங்கத்திடம் கேட்க இடியோசை முழங்க லிங்கம் இரண்டாகி ஒரு கை வெளிவந்து அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம் என திருவாய் மலர்ந்து ஆசிபுரிந்தது. சங்கரர் கோவிலைச் சுற்றி வரும்போது பக்த சிரோன்மணிகள் கால் வலிக்கு ஓய்வாக ஓரிடத்தில் அமர்ந்திருக்க அது பிரமஹத்தி அமருமிடம் எனக்கூறி ஈசன் பார்வை படும்படி வாசல் புறத்தில் அமரச் சொன்னார்.

திருச்சி வந்த சங்கரர் தாயுமானவரையும் மட்டுவார் குழலம்மையும் வழிபட்டு திரிசரன் என்ற அரக்கனை மாய்த்து திரிச்சிராப்பள்ளி எனப் பெயர்தந்த மலைக் கோவிலைக் கிரிவலம் வந்தார். பின் யானைக்கும் சிலந்திக்கும் மோட்சம் தந்த திருவானக்கா சென்று சிவன் சித்தராக வந்து கட்டிய நான்காம் மதிலைத் தொட்டுப் பார்த்தார், தொழிலாளர்களுக்கு கூலியாக கொடுக்கப்பட்ட விபூதி அவரவர் செய்த வேலைக்கு ஏற்ப பொன்னாக மாறிய திருநீற்று மதில் அது. எப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வர லிங்கத்தை வழிபட்டார். உக்கிரத்துடன் இருந்த அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குள் நுழைந்தார். 43 கோணங்கள் கொண்ட தடாகங்களை –தோடு செய்து அம்பாளின் சக்தியை அதில் உறையும்படி செய்தார். அம்மனுக்கு நேர் எதிரில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்ரம் தனிய வைத்தார். ஸ்ரீரங்கம் வந்தார். பக்தர்கள் அனைவரும் தேடிவந்து தரிசனம் செய்யும் வகையில் ஜனாகர்ஷண யந்திரத்தை ஸ்தாபித்து ஸ்ரீரங்கநாதரை வணங்கினார்.

தன் தலையில் உள்ள சந்திரனிடமிருந்து மதுவைப் பொழிந்து நாகம் உமிழ்ந்த நஞ்சை போக்கி புனிதப்படுத்திய இடமான மதுரையில் மீனாட்சி அருளாட்சி புரியும் கர்பகிரகத்தின் முன் நின்று சங்கரர் ஸ்ரீமீனாட்சி பஞ்சரத்தினம் பாடி மகிழ்ந்தார். தொண்டி அருகில் இருக்கும் உப்பூர் சென்று கணேசர்மீது ஸ்ரீகணேசபஞ்சரத்தினம் பாடி வழிபட்டார். இங்கிருந்து திருவனந்தபுரம் சென்று பத்பநாதப் பெருமானை வழிபட்டார். அத்வைதத்தை எதிர்த்தவர்களை வாதிட்டு வென்றார்.

பாரதம் முழுவதும் நடந்து சென்றதால் சங்கரரின் உடல் நலிந்து காச நோய் பீடித்தது அந்த நிலையிலும் திருக்கோகர்ணம் வந்து ஈசனை வழிபட்டார். அன்றிரவு ஈசன் கனவில் தோன்றி நோய்பபற்றி கவலைப் படவேண்டாம் .ஜயந்திபுரத்தில் முருகனை சந்தித்தால் உன் நோய் நீங்கும் என விபூதி அளித்தார். திடுக்கிட்டு விழித்த சங்கரர் ஈசன் அளித்த விபூதி கையில் இருப்பது கண்டு பராவசமாகி அதனை உடற்முழுவது பூசிக்கொண்டார். முருகன் சிக்கலிலே வேல் வாங்கி சூரபதுமனை வெற்றி கொண்ட ஜயந்திபுரம்-திருச்செந்தூர் சென்றபோது ஆதி சேஷன் வழிபட்டுக் கொண்டிருக்க புஜங்கம்- பாம்பு நடையில் ‘சுப்ரமண்ய புஜங்கம்’ பாடி முருகனை வழிபட அவர் காசநோய் நீங்கியது.

திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரம் சென்று ராவணனைக் கொன்ற பிரம்ஹத்தி தோஷம் தீர அனுமன் கயிலையிலிருந்து கொணர்ந்த விஸ்வேஸ்வர லிங்கத்தை முதலில் தரிசித்தார். பின்னர் சீதை மணலால் செய்து ராமர் வழிபட்ட ராமநாதஈசுவரரை வழிபட்டார். பர்வதவர்த்தினியை வணங்கி பள்ளிகொண்ட பெருமாளை வணங்கினார்.

கன்னியாகுமரியில் பாணாசுரனை அழித்து கன்னிவடிவில் தவமிருக்கும் அம்மனை தரிசித்தார். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை வலம் வந்தார். பின்னர் திருப்பதி சென்று திருக்குளம் அருகில் உள்ள ஆதிவராகரைத் தரிசித்தார். வெங்கடஜலபதியை அங்கம் அங்கமய் ரசித்து வழிபட்டார் விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் பாடினார். அங்கு தனாகர்ஷ்ண யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். அலர்மேலு மங்கைத் தாயாரை வழிபட்டார்.

திரியம்பகேஸ்வரம் சென்று எவரை தரிசித்தால் 28 ஆகமங்களையும் கற்ற பலன் கிட்டுமோ அந்த ஐந்து முகங்களைக் கொண்ட திரியம்பகேஸ்வரர் முன் அமர்ந்து தியானித்தார். அங்கிருந்து சோமநாத் சென்று சோமநாதரை, பார்வதி தேவியை வணங்கினார். பின்னர் மீதமிருந்த ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்தார். இந்த பன்னிரண்டு துவாதச லிங்கங்கள் பற்றிய துவாதச லிங்க ஸ்தோத்திரங்கள் பாடினார்.

கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள துவாரகை சென்று காளிதேவியையும், சித்தேஸ்வரரையும் ஸ்தாபித்து காளிகாபீடம் நிர்மானித்தார் அதன் ஆச்சார்யராக பத்மபாதரை நியமித்தார். பின் காஷ்மீர் சென்றபோது இதுவரை மூன்று அறிஞர்களுக்கு மட்டுமே திறந்த சர்வக்ஞபீடத்தின் நான்காவது கதவு சங்கரருக்கு திறந்தது. அந்த பீடத்தில் அமர்ந்து அத்வைத உரையை போதிக்க அரம்பித்தார், காஷ்மீர மன்னன் சங்கர்ரை கவுரவிக்க அங்கிருந்த மலை ஒன்றிற்கு சங்கராசாரிய மலை எனப் பெயரிட்டான். அடுத்து சங்கரர் பதரிவனம் சென்றார்.

பதரிவனத்தில் விஷ்ணு காட்சி கொடுக்க அவர் பாதங்களை வணங்கி ‘ஷட்பதி ஸ்தோத்திரம் பாடினார். விஷ்ணுவின் வேண்டுகோளின்படி அலக்நந்த பகுதியில் புதையுண்டு கிடந்த நாராயணனின் சிலாரூபத்தைக் கண்டுபிடித்து பிரதிஷ்டை செய்தார். அந்த இடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடம் ஏற்படுத்தி அதன் முதல் ஆச்சார்யராக தன் சீடர் ஆனந்தகிரியை நியமித்தார். ஆச்சாரியார் தோடகாஷ்டகம் செய்ததால் ஆனந்த கிரியின் பெயர் தோடகாச்சாரியார் என அழைக்கப்பட்டார். அங்கு தன் சத்குரு கோவிந்தபாதரும், பரமகுரு கௌடபாதரும் தவத்தில் இருக்கும் காட்சியை மனதில் கண்டு ஆச்சரியப்பட்ட சங்கரர் அவர்களை தட்சிணா மூர்த்தியாகப் பாவித்து தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் பாடினார்.

அங்கிருந்து புறப்பட்டு கைலாயம் சென்றர். அங்கு தேவர்கள், முனிவர்கள் பூதகணங்கள் அனைவரும் ஈசனை வழிபட தானும் வழிபட்டு பரவசமடைந்து பாட ஆரம்பித்தார். பஞ்ச ஸ்படிக லிங்கங்களையும், பார்வதி தேவி நினைவாக சிவன் செய்த ஸ்தோத்திரத் துதி அடங்கிய சுவடி ஒன்றையும் கொடுத்த இறைவன் இந்த லிங்கங்களை தகுந்த இடங்களில் பிரதிஷ்டை செய்து சுவடி- சௌந்தர்ய லஹரி யை பூலோகம் எங்கும் பிரசாரம் செய்துவிட்டு தன்னில் வந்து இனைய அருள் புரிந்தார். அவைகளைப் பெற்றுக் கொண்ட சங்கரர் ‘உமாமகேஸ்வர ஸ்தோத்திரம்‘ பாடினார். பஞ்சலிங்கங்களையும் சுவடியையும் எடுத்துக் கொண்டு வெளியில் சங்கரர் வருவதைப் பார்த்த நந்திகேஸ்வரர் இவைகள் அவரிடம் வந்தது பற்றிக் கேட்க பெருமானைப் பார்த்த ஆனந்தத்தில் வந்து கொண்டிருந்த சங்கரர் நந்தி கேட்டதைக் கவனிக்கவில்லை. சந்தேகப்பட்ட நந்தி அவர் கையிலிருநத சுவடியைப் பிடுங்க முதல் 41 பாடல்கள் மட்டும் சங்கரரிடம் இருக்க மற்றவை நந்திகேஸ்வரரின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. அதற்காக சங்கர வருத்தப்பட ‘வருந்தாதே சங்கரா விடுபட்ட பகுதியை நீயே பூர்த்தி செய்’ என அசரீரி எழுந்தது.

சௌந்தர்ய லஹரி என்றால் அழகு அலைகள் என்று பொருள். லஹரி என்றால் சந்திரன் உதிப்பதால் கடலில் ஏற்படும் பொங்குதலைக் குறிக்கும். அதாவது மனிதனின் மனமாகிய கடலில் அம்பிகை எனும் அழகான சந்திரன் பிரகாசிக்கும் போது ஏற்படும் ஆனந்தமும் ஓர் அலை வரிசையே,

தன் கையிலிருந்த 41 ஸ்லோகங்களையும் படித்த சங்கரர் அவைகள் சாக்த தத்துவங்களை கூறும் மகோன்னத மந்திர சாஸ்திர சூட்சமங்கள், குண்டலினி, யோக தத்துவங்கள், ஸ்ரீவித்யா ஆராதனை பற்றிய ரகசியங்கள் என அறிந்து அதில் ஆனந்தமாக திளைத்திருந்தார். மீதம் 51 பாடல்களை அவரையே எழுதும்படி அசரீரி கூறியதால் தேவியை நினைத்து தியானித்து எழுத ஆரம்பித்து சௌந்தர்ய லஹரியை முடித்துவிட்டு நேபாளம் சென்றார்.

பசுபதிநாதர் ஆலயத்தில் ஈசன் தந்த ஸ்படிக லிங்கங்களில் ஒன்றை- வரலிங்கத்தை ஸ்தாபித்து, மகாதிரிபுரசுந்தரியையும் பிரதிஷ்டை செய்தார். அங்கிருந்து கேதார்நாத் சென்றார், சிவபெருமன் தன்னிடம் தந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான முக்தி லிங்கத்தை கேதார்நாத்தில் ஸ்தாபித்தார், கேதர் ஆலயத்தை புதுப்பித்து வழிபாட்டு முறைகளை சீர் படுத்தினார். இங்கிருந்து சீடர்களுடன் காசிக்குச் சென்றார்.

சீடர்களுடன் விஸ்வநாதரை தரிசித்தார். அங்கு ஒரு முதியவர் இலக்கணப் பாடங்களை சூத்திரங்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவர், ஆச்சாரியார்களுக்கு இறுதிக் காலம் வரும்போது கல்வி காப்பாற்றாது. கோவிந்தன்தான் காப்பாற்றுவான் என்று உபதேசித்தார். அவர் சீடர்களும் சில ஸ்லோகங்களைப் பாடினார். இவை அனைத்தும் சேர்ந்து வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறக்கும் புனித பஜகோவிந்தம் எனப்படும், மத்திய பாரதத்தின் பல பகுதிகளில் அத்வைத பிரச்சாரம் செய்தார்.

தேவியின் நாபி விழுந்த நீலாசலம், ஸ்ரீக்ஷேத்ரம், புருஷோத்ம க்ஷேத்ரம் எனப்படும் பூரி வந்தடைந்தார். பலராமர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகியோரை தரிசித்தார். ஜகநாதஅஷ்டகம் பாடினர். இங்கு கோவர்த்தன மடம் நிறுவிய சங்கரர், விமலா பீடத்தை தோற்றுவித்து முதல் ஆசாரியராக ஹஸ்தமலகரை நியமித்தார்.

மீண்டும் சிருங்கேரி வந்த சங்கரர் சிவன் கொடுத்த ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தை சிருங்கேரியில் ஸ்தாபித்தார். அங்கிருந்து தொண்டை மண்டல திருவொற்றியூருக்கு வந்தார். ஈசனை வழிபட்டார் வட்டப்பாறை அம்மன் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பதித்து புனிதப் படுத்தி நரபலி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தினார். திரிபுர சுந்தரி ஸ்தோத்திரம் பாடினார். எல்லா ஜனங்களும் புரிந்து கொள்லும் முறையில் வினா-விடை மணிமாலா எனப்படும் பிரச்னோத்ர ரத்ன மாலிகாவை சொன்னார். பூவிருந்தவல்லியில் தரிசனம் செய்துவிட்டு மாங்காடு சென்றார்.

ஈசனின் அனல்வழித் தீயும், உமையின் தவத்தின் உக்கிரத் தீயும் சேர்ந்த அளவற்ற வெப்பத்தால் வாடி வருந்திய மாங்காடு மக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக அபூர்வ அமைப்புக் கொண்ட அர்த்தமேரு எனப்படும் 43 திரிகோணம் அமையக் கூடிய ஸ்ரீ சக்கரத்தை யந்திரப் பிரதிஷ்டை செய்து மாங்காட்டின் வெப்பத்தை தணித்தார். சிவனையும் சக்தியையும் தரிசித்து காஞ்சிபுரம் சென்றார்.

வரதராஜ பெருமாளை தரிசித்தார். ஹரி சரணாஷ்டகம், ப்ராத ஸ்மரணஸ்தோத்திரம், ஸ்ரீவரமஹாகணபதி மந்திராக்ஷராவளி ஸ்தோத்திரம், ஸ்ரீ கணேச புஜங்கம். விஷ்ணு ஷட்பதி, ஸ்ரீலட்சுமி நரசிம்ஹ கருணாரஸ ஸ்தோத்திரம், ஆகிய ஸ்தோத்திரங்களைப் பாடினர். சிவகாஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரரைத் தரிசித்தார். சிவபஞ்சாட்சர துதி பாடினார். காமாட்சி சன்னதியில் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்தார். சக்கரத்தை சுற்றியுள்ள அமைப்பில் உள்ள வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி ஆகிய எட்டு தேவிகளையுடைய ஸ்ரீ சக்ரத்திற்கு அர்ச்சனைகள் செய்ய வைத்தார். காமாட்சியின் இடதுபுறச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள அரூப லட்சுமியையும், வலது புறத்தில் உள்ள சொரூப லட்சுமியையும் வணங்கினார்.

காஞ்சீபுரத்திலும் சர்வக்ஞபீடம் ஏற்படுத்தினார். அறிஞர்கள் பலருடன் வாதிட்டார். பிரம்ம தேசத்திலிருந்து வந்த சிறுவனுடன் 3நாட்கள் வாதிட்டார். அவனுக்கு சர்வக்ஞாத்மன் எனப் பெயரிட்டு தன் துறவியாக ஆக்கிக்கொண்டார். பாரதத்தின் நான்கு பகுதியிலும் நான்கு பீடங்களை ஏற்படுத்திய சங்கரர் ஐந்தாவதாக காஞ்சியில் காமகோடி பீடத்தை ஏற்படுத்தி யோக சந்திரமௌலீஸ்வரர் லிங்கத்தை ஸ்தாபித்தார்.

பரத நாட்டில் இருந்த 72 மதங்களைச் செம்மைப் படுத்தி நெறிமுறைகளை வகுத்து அவற்றை சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என ஆறாகத் திருத்தி அவகளை நாடெங்கும் பரப்ப முறையே பரமதகாலானர், லட்சுமணன், கிரிஜாகுமார், வடுகநாதர், திவாகர், திரிபுராகுமார் ஆகியோரை அனுப்பிவைத்தார்.. அதனால் அவருக்கு ஷண்மத ஸ்தாபகர் என்ற பெயர் உண்டானது. இதனால் நாட்டில் இருந்த மதப் பூசல்கள் குறைந்தன.

அவருக்கு 32 வயது முடிந்து இறைவனுடன் இனையும் நாள் வந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக சுரேச்சுவரரை நியமித்தார் சங்கரர். சந்திரமௌலீசுவரரையும், திரிபுரசுந்தரியையும் பூஜை செய்ய சர்வக்ஞாதானரை நியமித்தார்.

வைகாசிமதம் சுக்லபட்ச ஏகாதசி தினம் தன் சீடர்களையும் பக்தர்களையும் ஒன்றுகூட்டி சந்திரமௌலீசுவரர் பூஜை செய்தார். தன் வாழ்நாள் முழுவதும் அருளிய தத்துவங்களை எளிய முறையில் ஐந்து பாடல்களாக-ஸோபான பஞ்சகம் பாடினார். ஈசனிடமிருந்து தான் பெற்ற ஐந்து ஸ்படிக லிங்களில் மீதமிருந்த ஒன்றை மோட்ச லிங்கத்தை சிதம்பரத்தில் ஸ்தாபிக்க அனுப்பி வைத்தார். பின் காஞ்சி காமட்சியம்மன் கர்பகிரகம் சென்றார். காமேஸ்வரரையும் காமாட்சியையும் கண்டு இன்பமுற்று ‘திரிபுரசுந்தரி வேதபாதஸ்தவம் என்ற தோத்திரம் பாடினார். காமேஸ்வரருக்குள் காமாட்சி கரைய தானும் ஒளிவடிவாகி அந்த ஜோதியில் மறைந்தார் சங்கரர்.-ஜகத்குரு ஆதிசங்கரர்.

$$$$$

Read 14170 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 September 2019 09:06
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879395
All
26879395
Your IP: 54.160.244.62
2024-03-19 09:21

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg