ஓம்நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்
&&&&&
கார்த்திகை மாத விரதங்கள்!
கார்த்திகை பௌர்ணமி- கார்த்திகையில் பவளலிங்கம் வழிபாடு சிறப்பு, பகற் பொழுது உபவாசம் இருந்து ஈசனை வழிபட வேண்டும்.
கார்த்திகைமாத அஷ்டமி மனோன்மணி-மகேஸ்வரன்-வணங்கினால் விரும்புவன் கிட்டும்
மேலும் கார்த்திகை பௌர்ணமியில் ஸ்ரீ துளசியின் ஜன்ம தினம் என்பதால் துளசி மாடத்திற்கு பூஜை செய்து வழிபடுதல் அவரது குறை தீர்ந்து நல்ல விருப்ப நோக்கங்கள் எல்லாம் அடையப் பெறுவர். துளசி என்றால் தன்னிகரில்லாதவள் எனப் பொருள். துளசியை வைணவத்தில் திருத்துழாய் என்பர். லட்சுமி தேவியானவள் தர்மத்வஜன் - மாதவி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்து பிரம்மாவை நோக்கி தவமிருந்து துளசிச் செடியாக மாறி விஷ்ணுவுக்குப் பிரியமாகி விஷ்ணு பிரியை என்று அழைக்கப் படுகின்றாள். துளசி மந்திரத்தில் வரும் எட்டு நாமங்களும் காரணப் பெயர்களாகும். கண்ணுவ சாகையில் உள்ளது அஸ்வமேத யாக பலனைத் தரும். அதை தினமும் சொல்லி பூஜை செய்து துளசியை தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்பு. துளசி பூஜைக்கு துளசி விருட்சமே முக்கிய உருவம். ஆவாகனம் செய்யாமலே சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் முதலியவற்றால் துளசி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். துளசி பதிவிரதை, புஷ்பசாரமானவள், எல்லாவற்றையும் தூய்மை செய்பவள். பாவ வினைகளைச் சுட்டெரிக்கும் அக்னி ஜுவாலையாக இருப்பாள்.
கார்த்திகை விரதம்- கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரத்தில் பன்னிரண்டு மதங்கள் தொடர்ந்து இருப்பது சிறந்த பலனைத் தரும். விரதம் இருந்து முருகனை வழிபடுவோருக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய பேறுகள் கிட்டும்.
திருக்கார்த்திகை விரதம் முருகப் பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் உகந்தது. இந்த விரதம் இருக்க பரணி நட்சத்திரத்தில் பகலில் உணவு உண்டு இரவு உண்ணாமல் மறுநாள் கார்த்திகை முழுவதும் விரதமிருந்து நாமாவளிகள், துதிகள் பராயணம் என்று இறை சிந்தனையுடன் இருந்து உறக்கம் தவிர்த்து மாலை மீண்டும் நீராடி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து இரவில் பிரசாதங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த நாள் ரோகிணியன்று விரதமிருந்து பகல் உணவு உண்டு உறக்கம் தவிர்த்து பராயணம் செய்து மாலையில் ஆலயம் சென்று வழிபட்டு இரவு உணவைத் தவிர்த்து பால் பழம் அருந்தி இறை சிந்தனையுடன் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பரணி, கார்த்திகை, ரோகிணி என்று மூன்று நாட்களும் இவ்விரதத்தைக் கடைபிடித்தால் குமரன் அருளையும் சிவபெருமான் அருளையும் பரிபூரணமாகப் பெறுவர். அதன் பலனாக நிறைவான அறிவு, செல்வம், ஆயுள், ஆரோக்கியம் என அனைத்தும் பெறுவர்.
பிரதிபத (எ) பிரதமை விரதம்- பிரம்மன் பிரமாண்டத்திலிருந்து பூமி, ஆகாயம், திசைகள், உபதிசைகள், தேவர்கள், அசுரர்கள் என எல்லாவற்றையும் உறபத்திசெய்த முதல் திதி என்பதால் பிரதமை என்றானது. பிரதமையன்று பிரம்மா அக்னியை தோற்றுவித்ததால் அக்னி பூஜைக்கு உரியது. முன்னால் வரும் சதுர்த்தசியன்று இந்த விரதத்திற்கான சங்கல்பம் மேற்கொண்டு பிரதமை விரதத்தை கார்த்திகை பௌர்ணமி முதல் தொடங்கி ஓராண்டு தொடர்ந்து செய்வது விசேடமானது. பிரம்மனுக்கு விரதமிருந்து பூஜைசெய்து பிரம்ம தேவரே எனக்கு அருளாசி தர வேண்டும் என வேண்டவும். பாலைத் தவிர்க்கவும். விரதம் முடிந்தபின் பாலை அருந்தி விரதத்தினை முடிவு செய்ய வேண்டும்-
த்விதீய / துவிதையை விரதம்- அஸ்வினி குமார்களுக்கு தேவர்கள் என்ற அங்கீகாரமும் அவிர்பாகமும் கிடைத்த நாள் இது. தேவலோக மருத்துவர்கள் அசுவனி தேவர்கள் பூஜைக்குரிய நாள். கார்த்திகை மாதம் சுக்லபட்சம் த்வீதியை அன்று துவங்கி ஒருவருட காலம் தொடர்ந்து அனுஷ்டிக்கவும்- உப்பைத் தவிர்க்கவும்
சாந்தி விரதம்- கார்த்திகை மாத சுக்லபட்ச பஞ்சமி திதியில் சாந்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் நீங்கி சாந்தி நிலவும். நியதி என்னவென்றால் ஓராண்டு காலத்திற்கு சூடான உணவைத் தவிர்த்தல் நன்மை பயக்கும். விரத நாள் முடிவில் பாம்பு-சேஷன் பிரதிமை செய்து தானம் வழங்க வேண்டும். மிகச் சிறந்த நாகங்களான வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், த்ருதராஷ்ட்ரன், கார்க்கோடன், அனந்தன், தனஞ்செயன் ஆகியவை சர்ப்ப வடிவிலிருந்து அபயம் தருவதுடன் செல்வங்களை வாரிவழங்கும். நாக தோஷங்கள் நீங்கும்.
சப்தமி விரதம்- கார்த்திகை சுக்ல சப்தமியில் விரதத்தை துவங்கலாம். நான்கு மாதம் அனுஷ்டிக்க வேண்டும். மாசி சப்தமி- விசேஷ பலன்களைத் தரும். வளார்பிறை சப்தமியிலோ அல்லது சங்கராந்தி கிரகணம் முடிந்த பிறகோ விரதத்தை தொடங்கி அக்னியை சூரிய ஜோதியாக பாவித்து ஹோமம் செய்யவும். 12 மாதங்களில் 12 ஆதித்தியர்களைப் பூஜை செய்தால் வருடம் முழுவதும் சூரியனைப் பூஜித்த பலன், சூரியனுக்கு பூஜை- ரதசப்தமி- மாசிமாத சுக்ல பக்ஷ பஞ்சமியன்று ஒரு பொழுது விரதமிருந்து மறுநாள் சஷ்டியன்று இரவு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, அடுத்த நாள் சப்தமியன்று பாரணை செய்து சூரிய நாராயணருக்கு பூஜை செய்து எளியோர்க்கு உணவு அளித்திடல் வேண்டும். சூரியனுக்குகந்த நளான இன்று பாயாச நெய்வேத்தியம். வில்வ ஆகாரம் செய்யவும்.
கார்த்திகை மாத சிறப்புகள்- கார்த்திகைத் தீபம்: அருட்பெரும் ஜோதி என்றார் வள்ளலார். அலகில் சோதியன் என்றார் திருநாவுக்கரசர். நெருப்பை அக்னி தேவன் என்றும் திருவிளக்கை தீப லட்சுமி என்றும் வழி படுகின்றோம். அத்தகைய நெருப்பை ஜோதியை போற்றும் நாள் கார்த்திகை தீபத் திருநாள். ஜோதி ஸ்தம்பமாய் நின்ற இறைவனை அடிமுடி காண பிரம்மன், விஷ்ணு புறபட்ட நிகழ்வு நடந்த தலம் திருவண்ணாமலை. அந்த நாளே கார்த்திகைத் தீபத்திருநாள்.. இறைவன் இங்கு தீயாக சோதிப் பிளம்பாக வெளிப்பட்டமையால் திருவண்ணாமலை ஐம்பூதத்தலங்களுள் அக்னி(தீ)த் தலமாக வணங்கப் பெறுகின்றது. கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் சிவபார்வதி இருவரும் ஒளிவடிவத்தில் இருப்பதால் அன்று தீபமேற்றி வழிபடுகின்றோம். இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே வீட்டை விளக்குகளால் அலங்கரித்து கார்த்திகைத் தீபத் திருநாளில் இறைவனை வணங்கும் பழக்கம் பல யுகங்களாக மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் சேர்ந்தால்தான் விளக்காகும் அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கும் வாழ்வின் அம்சமாகும். மாயை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் அறிவில் அடக்கம். இந்த அறிவொளியைத்தான் நாம் தீப தேவதையாக வழிபடுகின்றோம். கார்த்திகை திருநாளன்று வீடு முழுவதும் தீபமேற்றினால் செல்வமும் செழிப்பும் வீடுதேடி வரும், மகாலட்சுமி வாசம் செய்வாள்.
பரணி தீபம்: கார்த்திகைப் பெண்கள் வளர்த்த குழந்தைகளைப் பார்க்கச் சென்ற உமை ஆறு குழந்தைகளையும் ஒன்றுசேர எடுத்து அணைக்க சண்முகனார் தோன்றிய நாள் கார்த்திகை மாதம் பரணித் திருநாள். பரணி நட்சத்திரம் கார்த்திகை மாதம் எமனுக்குரியது. ஒரு உடலிலிருந்து விடுபட்ட ஆன்மா இரு வழிகளில் தன் பயணத்தை மேற்கொள்கின்றது. புண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒளியும் நறுமணமும் மிகுந்த நல்ல வழியில் பயணிக்கும். பாவம் செய்தவர்கள் இருள் நிறைந்த பாதையில் பயணம் செய்வர். பரணி தீபம் ஏற்றுவதால் அந்த இருள் சூழ்ந்த பாதையில் பயணம் செய்யும் ஆன்மாக்களுக்கு சிறிது வெளிச்சம் கிடைக்கும் அது அந்த பரணி தீபம் ஏற்றியவர்களுக்கு புண்ணியமாகும். அதனால் பரணி தீபம் ஏற்றி அதை வான் நோக்கி காண்பிப்பது வழக்கமானது. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றி அதன் சுடரிலிருந்துதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
சொக்கப்பனை: தீபத்திருநாளன்று கோவில் வாயிலில் பனை மற்றும் தென்னை ஓலைகளை குவித்து அதனைக் கொளுத்துவர். இந்தச் சுடரிலிருந்து நெருப்பு பெறப்பட்டு வீட்டின் விளக்குகளில் ஏற்றப்படும். இந்த நிகழ்வே சொக்கப்பனை எனப்படும். இதன் தத்துவம் என்ன வென்றால் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா ஒளிவடிவானவராக நெருப்புப் பிழம்பாக காட்சியளித்த கார்த்திகைத் திருநாளன்று அந்நிகழ்வை நினைவுகூற செக்கப்பனை ஏற்றப்படுவதால், பிரம்மனின் ஆணவம் அன்று அழிந்ததுபோல்; ஒவ்வொரு ஆன்மாவின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் அந்த தீபஒளியின் நெருப்பில் சாம்பலாகும் என்பதாகும். சொக்கனாகிய சிவபெருமானை குறிப்பதால் சொக்கப்பனை எனப்பட்டது. மேலும் இறைவனின் அருள் எனும் ஒளி இருந்தால் வீட்டில் தீய வினை, தீயசக்திகள் அகன்று நல்ல வெளிச்சம் பிறக்கும் என்பதையும் விளக்குகின்றது. இந்த வசதி கிடைக்காதவர்கள் வீட்டிலுள்ள சாமி படத்தின் விளக்கிலிருந்து நெருப்பைப் பெற்று அகல் விளக்குகளைப் பற்றவைக்கலாம். சொக்கப்பணை ஏற்றுவது என்பது மக்களின் அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் பிறக்கச் செய்யும் ஒரு குறியீடாகும்.
ஆந்திராவில்- சிவபெருமான் உண்ட விஷம் அவரை ஒன்றும் செய்யாதிருந்தால் தான் தீக்குளிப்பதாக பார்வதி வேண்டிக்கொண்ட நிகழ்வாக கொண்டாடப் படுகின்றது. மூங்கில், பனை ஓலை கொண்டு கட்டி வாயில் ஏற்படுத்தி தீயிட்டு அத்தீயிலே பார்வதியின் திரு உருவத்தை மூன்று முறை கொண்டு செல்வர். ஜ்வாலா தோரண விழா என்பர். இந்தச் சாம்பலை எடுத்துச் சென்று வயல்களில் தெலித்தால் நோய்கள் பயிரை அண்டாது என்ற ஐதீகம்.
&&&&&