gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

துர்க்கை

Written by

சக்தி -- தீய சக்திகளை ஒழிப்பதில் துணை புரிபவள். அழிக்கும் சக்தி- அசைவுடைய செயல் சக்தி. 
வேறுபெயர்கள் -- துர்க்கை, விஷ்ணு துர்க்கை, அம்பாள், மகாலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, வைஷ்ணவி, இந்திராணி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி
செவ்வாய்க்கிழமை -- செவ்வாய் தோஷமுடையவர்கள் செவ்வாய்க்கிழமை பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை வழிபாடு- நினைத்த நல்லகாரியம் வெற்றி பெரும்.
வெள்ளிக்கிழமை -- எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து இராகு காலத்தில் பூஜை வழிபாடு சிறப்பு.
ஞாயிற்றுக்கிழமை -- கிரக தோஷங்கள் உள்ளோர் ஞாயிற்றுக் கிழமையன்று சூரியன் மறையும் நேரத்திற்கு முன்பாக ஒன்றரை மணி நேரம் ராகுவின் வால்பாகம். இந்த நேரம் அமிர்தம். அதனால் ஞாயிறு இராகுகாலம் துர்க்கையை பூஜை வழிபாடு செய்வது நன்மை.
ஏற்ற திதி -- அஷ்டமி திதி. ராகு கிரகத்தின் அதி தேவதை. ராகு கிரகம் நிழல்- சாயா கிரகம் ஆகும், அதன் உடலில் விஷம் வாலில் அமுதம் உள்ளது. துதிக்க ஏற்ற நேரம் இராகு காலமாகும். ராகு நேரம் சக்தியை வெளிப்படுத்தும் நேரம். அந்த நேரத்தில் துதிகளைப் படித்து அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம்.
விழாநாட்கள் -- நவராத்திரி- ஆனிமாத அமாவாசைக்குபின் ஆஷாடநவராத்திரி, புரட்டாசிமாத அம்மாவாசைக்குப்பின் மகா நவராத்திரி, தைமாத அமாவாசைக்குபின் மாக நவராத்திரி, பங்குனி மாத அம்மாவாசைக்குப்பின் வசந்த நவராத்திரி என் வருடத்தில் நான்கு. பழமையோடு புதுமையும் கலந்தவிழா. ஒன்பது நாளும் பழங்கள், பிரசாதங்கள் படைத்து, படைத்தல், காத்தல், அழித்தல் சக்தி கொண்ட அன்னையின் அருள் வேண்டி மலர் வழிபாடு செய்தல். பிரதமை முதல் திரிதியை வரை கிரியா சக்தியான துர்க்கா, சதுர்த்தி முதல் சஷ்டி வரை இச்சாசக்தியாகிய மகாலட்சுமி, சப்தமி முதல் நவமிவரை ஞாசசக்தியாகிய சரஸ்வதி என 3வகை மும்மூன்று நாள் விழா. பத்தாம் நாள் தசமியில் சிம்ம வாகனத்தில் சூரனை வதம் செய்த பரிவேட்டை நிகழ்ச்சி. தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி பூஜை செய்யலாம். புரட்டாசியில் நட்பைப் போற்றி, பக்தியைச் பெருக செய்ய கொலு வைத்தல். 1-ம் படியில் ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி தாவர பொம்மைகள், 2-ம் படியில் ஈரறிவு கொண்ட சங்கு நத்தை பொம்மைகள். 3-ம் படியில் மூவறிவு உயிர்களான எறும்பு, கரையான் பொம்மைகள். 4-ம் படியில் நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகள், 5-ம் படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள், 6-ம் படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள், 7-ம் படியில் மனிதருக்கு மேற்பட்ட மகான்கள், முனிவர்கள் பொம்மைகள், 8-ம் படியில் தேவர்கள், நவகிரக அதிபர்கள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள், 9-ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் தேவியருடன் ஆதிபராசக்தியை நடு நாயகமாக வைக்கவும்.
வணங்கும்முறை -- ஐந்து எழுமிச்சை வாங்கி அதை இரண்டாக நறுக்கி ஒன்பது துண்டுகளைத் திருப்பி நல்லெண்ணெய் ஊற்றி தாமரை நூலினால் திரி போட்டு துர்க்கைமுன் விளக்கிடவும். மீதமுள்ள ஒரு துண்டில் விளக்கேற்றி மூல தெய்வத்துக்கு வைக்கவும். 108 ஓம் சொல்லி குங்கும் அர்ச்சனை செய்யலாம். ஒம் ஸ்ரீ துர்க்கா சரணம்
என மனதில் ஒன்பது முறைக் கூறி வழிபடவும். நெய்வேத்தியப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்கவும். மூலவர் எந்த கோலத்திலிருந்தாலும் பாதத்திலிருந்து சேவித்து முகதரிசனம் செய்யவும். அர்ச்சகர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். அர்ச்சனை ஆரத்தி முடிந்தபின் பிரசாதம் பெற்று வரவும். அருள் நிறைந்துள்ள கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

உள்ளே.....

1.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற- பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை. 

2.“துர்க்கை”- துன்பமில்லா வாழ்வுக்கு- துர்க்காசூக்தம்- தினமும்-செவ்வாய்/ நேரம் கிடைக்கும் போது. 

3.“துர்க்கை”-இயற்கைச்சீற்றம், பகைவர்களால்ஆபத்து நீங்க- சித்தேஸ்வரி தந்திரம்-செவ்வாய் கிழமை. 

4.“துர்க்கை”- துன்பம், கவலைகள் நீங்க -செவ்வாய்க்கிழமை / வேண்டும் போது. 

5.“துர்க்கை வணக்கம்”-கஷ்டங்கள்நீங்கி, ஊக்கம்பெற-செவ்வாய்க்கிழமை / வேண்டும் போது. 

6.“ராகுகால துர்கை அஷ்டகம்”- துன்பம் நீங்கி, ஆறுதல் பெற-ராகு காலத்தில். 

7.துர்க்கை அம்மன் போற்றி” 
8.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது

9.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது. 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

1.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற-பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை.

o யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நிறைந்தாய் காளி!
தீது நன்மை எல்லாம் காளி! தெய்வ நீதி ஆன்றோ!
பூத மைந்தும் ஆனாய் காளி! பொறிகளைந்தும் ஆனாய்! 
போதமாகி நின்றாய் காளி! பொறியை விஞ்சி நின்றாய்!

o இன்பமாகிவிட்டாய் காளி! என்னுள்ளே புகுந்தாய்!
பின்பு நினையல்லால் காளி! பிரிது நானும் உண்டோ!
அன்பளித்து விட்டாய் காளி! ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்! தொல்லை போக்கி விட்டாய்!

o ஆதிசக்தி தாயே! என்மீது அருள்புரிந்து காப்பாய்!
எந்தநாளும் நின்மேல் தாயே! இசைகள் பாடிவாழ்வோம்!
காளிமீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்!
பின்பு நினையல்லால் காளி பிறிது நானும் உண்டோ!

2.“துர்க்கை”- துன்பமில்லா வாழ்வுக்கு- துர்க்கா சூக்தம்- தினமும்-செவ்வாய்/ நேரம் கிடைக்கும் போது.

oஅக்னி வடிவில் விளங்கும் சக்திக்கு சோமரசத்தை பிழிந்து கொடுப்போம். அனைத்துமாக விளங்கும் அந்தஜோதி எதிரிகளைப் பொசுக்கட்டும். அந்தசக்தி எங்களின் எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும். கப்பலால் கடலைக் கடப்பது போல், ‘பவ’ சாகரத்திலிருந்து (பிறவி கடலிருந்து) அந்த அக்னி சக்தி எம்மைக் கரை சேர்க்கட்டும்!

oசெந்தீ வண்ண முடையவள். தனது ஒளியால் பகைவர்களை எரிப்பவள். ஞானக்கண்ணால் அறியப்படுபவள், கர்மபலனை கூட்டி வைப்பவள். நம் புண்ணிய பாவங்களுக்கு உரிய பலனை அனுபவிக்கச் செய்பவள், பிறவிக் கடலை எளிதில் கடக்க உதவுபவள். அத்தகைய துர்க்காதேவியே உனக்கு நமஸ்காரம்!

oஅக்னி சக்தியே! நீ எடுக்கும் நல்ல உபாயங்கள் மிகவும் போற்றத் தக்கவை. அவை எங்களை சகல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றட்டும். எங்களுக்கு வாழும் இடங்களும் வளமான பூமியும் கிடைக்க வகை செய்ய வேண்டும். எங்களுடைய சந்ததியான பிள்ளை குட்டிகளும் பேரன் பேத்திகளும் உன்னருளால் பயன் பெற்று ஒளிர வேண்டும்!

oஆபத்தை போக்கும் அக்னி சக்தியே! நாவாய்- கப்பலால் கடலை கடப்பது போல சம்சார கடலை கடக்க எங்களுக்கு அனுகிரஹிக்க வேண்டும். எங்களை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்க வேண்டும். ஆதர்ஷ்ன தம்பதி அத்திரி மகரிஷி- அனுசூயா தேவியைப் போன்று அனைவரும் இன்பமுடன் வாழ அருளவேண்டும். அதேசமயம் எங்களுக்கு ஆரோக்கியமும் வேண்டும்!

oஎதிரிகளின் சேனைகளை வெல்லவும், அடக்கவும், பொசுக்கவும் செய்யக்கூடிய அக்கினி சக்தியை பரமபதமான விண்ணிலிருந்து வருமாறு அழைக்கிறோம். அந்த சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும். அக்னிதேவன், நமது பாவங்களை நீக்கி அருளட்டும்!

oஅக்னியே! வேள்விகளில் போற்றப்படும் ‘ஸ்வாஹா’ வான சக்தியே, நீ இன்பத்தை வளர்க்கிறாய். விணைப்பயனை அளிப்பதும், வேள்வி செய்வதும் துதிக்கப்படுவதும் அனைத்தும் நீயே. அக்னி சக்தியே, உனது உடலை நாங்கள் வேள்வியில் இடப்படும் பொருள்களால் உன் ஜோதி நன்கு எழுந்து இன்புறச் செய்யட்டும். எங்களுக்கு எல்ல சௌபாக்கியங்களையும் நீ அருள்வாயாக!

oஇந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தின் தோஷமே இல்லாமல், புனிதத்துடனேயே சதா தொடர்பு கொண்டு அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் நீக்கமற பரவி நிற்கும் சக்தியே! உன்னை சேவிக்கிறேன். சுவர்க்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள், விஷ்னு பக்தனான என்னை, இவ்வுலகில் வாழும்போதே எல்லா பேரின்பங்களிலும் திளைக்கும்படி வைக்க வேண்டும் அதற்கு நீயே அருள்வாயாக!

oகன்னியாகவும் தேவியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றேன். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி அவனையே அடைந்த அந்த அம்பிகையை வழிபடுகிறேன். அந்த துர்க்கா தேவி எங்களை வழிநடத்தி தர்மவழியில் செலுத்தி ஆட்கொள்ளட்டும்.

3.“துர்க்கை”- இயற்கைச்சீற்றம், பகைவர்களால் ஆபத்து நீங்க- சித்தேஸ்வரி தந்திரம்-செவ்வாய்கிழமை.

சுற்றிலும் சூழ நிற்கும் ஆபத்துகளைலிருந்து எமைக் காக்கும் துர்க்கை அன்னையே உனக்கு நமஸ்காரம். இயற்கை சீற்றங்கள் ஆகட்டும், காட்டிலே தனித்துச் செல்லும் பயணங்களாகட்டும், யுத்தத்தில் ஆகட்டும், எரிக்கும் அக்னியிலாகட்டும், ஆழ்கடலிலாகட்டும், எங்கும் எமைக் காத்தருளும் அன்னையே உனக்கு நமஸ்காரம். எந்தவகை ஆபத்திலிருந்தும் காக்கும் தேவியே, எம்மை வாழ்க்கை சாகரத்திலிருந்தும் காக்கும் ஓடமாக விளங்கும் அன்னையே! உனக்கு நமஸ்காரம்!

4.“துர்க்கை”- துன்பம், கவலைகள் நீங்க -செவ்வாய்க் கிழமை / வேண்டும் போது.
 ஞானமே வடிவாய்க் கொண்ட நாயகி நீயே தாயே
ஊனமில் பகவதி நீ உயர்மன மலரில் வாழ்வாய்
ஈனமில் மோகமாதே மகாமாயை நீயே யன்றோ!
ஆணியாய் உலகுக்கான அன்னையே போற்றி போற்றி!

 துர்க்கையைப் போற்றினாலே துயரிலை இன்பம் உண்டு
துர்க்கையாள் மனத்தின்துன்பம் துடைப்பவள் உலகத்தாயே
துர்க்கையாள் பிறையைச் சூடி துயநலம் காப்பாள் என்றும்
துக்கமேன் தரித்திரமேன் தூயவள் இருக்கும் போதே!

 எத்தனை மங்கலங்கள் அத்தனை நல்க வல்லாள்
எத்துணை உற்ற போதும் இடரெலாம் அவளால் தீரும்
எத்தனைமறைகள் உண்டோ மறைபொருள்அவளேயாகும்
பித்தனை மணந்த அந்த பேச்சியின் பாதம் தன்னில்!

 விழுபவர் எழுகின்றார்கள் வினைவலி அவர்க்கு இல்லை
தொழுபவர் தொழுவார் துர்க்கை நாரணி என்றே சொல்லி
அழுபவர்க்கான தெய்வம் அவளன்றி வேறொன்றில்லை
வழிபடில் என்றால் அன்னை வழிவழி காப்பாள்தனே!

 தேவிநாராயணியே! தினமுந்தன் சரணம் தாயே!
தேவைகள் தருவெம்தாயே! தினமுனைப்போற்றி செய்வோம்
தீமைகள் நீக்க வல்லாய்! திகம்பரன் பரவும் தேவி
ஊமைகள் பேச வல்லார் உன்னருள் இருந்தால்தானே!

 எத்தனை வடிவம் உண்டோ அத்தனை உன்னில் ஒன்றும்
அத்தனைபுவனம் ஆள்வாய் அனைத்துமாய்ஆனாய் அம்மா
எத்தனை சக்தியுண்டோ அனைத்துமுன் சக்தியன்றோ!
பித்தனார் கொண்ட மோனம் பெற்றவள் சரணம் தாயே!

 உடலதை ஓம்ப வேண்டின் உயர்நலம் காண வேண்டின்
கெடலரும் செம்மைசேர்ப்பாள் கேடிலாத் தாயை அன்பால்
விடலரும் பக்தியோடே விரும்பிடல் வேண்டும் உண்மை
அடுதலில் பெருமைகொண்ட அன்னையைவணங்கல் நன்றே!

5.“துர்க்கை வணக்கம்”- கஷ்டங்கள் நீங்கி, ஊக்கம் பெற- செவ்வாய்க்கிழமை / வேண்டும் போது.

 அன்னை துர்க்கையே வணக்கம்!
அகிலாண்ட ஈஸ்வரியே வணக்கம்!
மகிஷாசுரமார்த்தினியே வணக்கம்!
மங்கள சண்டிகையே வணக்கம்!

 அன்பின் வடிவே வணக்கம்!
அகந்தையை அழிப்பாய் வணக்கம்!
கண்ணின் மணியே வணக்கம்!
கஷ்டங்கள் தீர்ப்பாய் வணக்கம்!

 வறுமையை ஒழிப்பாய் வணக்கம்!
சிறுமையைக் களைவாய் வணக்கம்!
ஆக்கம் அளிப்பாய் வணக்கம்!
ஊக்கம் அளிப்பாய் வணக்கம்!

 அனையாச் சுடரே வணக்கம்!
ஆதரவளிப்பாய் வணக்கம்!
ஆனந்த வடிவே வணக்கம்!
அடியேன் குறை தீர்ப்பாய் வணக்கம்!

 மங்கள நாயகியே வணக்கம்!
நன்மைகள் அளிப்பாய் வணக்கம்!
சிந்தையில் உறைபவளே வணக்கம்!
சீரான வாழ்வளிப்பாய் வணக்கம்!

 குலம் காக்கும் குணவதியே வணக்கம்!
குறைகளை அகற்றிடுவாய் வணக்கம்!
வரம்வேண்டி நிற்கிறேன் வணக்கம்!
வளமான வாழ்வளிப்பாய் வணக்கம்!

6.“ராகுகால துர்கை அஷ்டகம்”- துன்பம் நீங்கி, ஆறுதல் பெற-ராகு காலத்தில்.

 வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்!
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்!
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்!
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 உலகை ஈன்றவள் துர்க்கா உமையுமானவள்!
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்!
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யையானவள்!
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 செம்மையனவள் துர்க்கா ஜெயமுமானவள்!
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்!
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்!
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்வவள்!
துறையு மானவள் இன்பத் தோணியானவள்!
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்!
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 குருவும் ஆனவள் துர்க்கா குழந்தையானவள்!
குலமும் ஆனவள் எங்கள் குடும்பதீபமே!
திருவுமானவள் துர்க்கா திருசூலி மாயவள்!
திரு நீற்றீல் என்னிடம் திகழும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்!
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்!
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

 கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே!
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே!
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே!
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!

7.“துர்க்கை அம்மன் போற்றி” 
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
ஓம் ஆதிபராசக்தியே போற்றி!
ஓம் அபிராமியே போற்றி!
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி!
ஓம் அம்பிகையே போற்றி!
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி!
ஓம் அன்பின் உருவே போற்றி!
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி!

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி!
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி!
ஓம் இமயவல்லியே போற்றி!
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி!
ஓம் இருசுடர் ஒளியே போற்றி!
ஓம் இருளை நீக்குவாய் போற்றி!

ஓம் ஈசனின் பதியே போற்றி!
ஓம் ஈஸ்வரியே போற்றி!
ஓம் உமையவளே போற்றி!
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி!
ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி!

ஓம் என் துணை இருப்பாய் போற்றி!
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி!
ஓம் எம்பிராட்டியே போற்றி!
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி!
ஓம் ஐமுகன் துணையே போற்றி!
ஓம் ஐயுறவு தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஒளிர்வு முகத்தவளே போற்றி!
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி!

ஓம் கங்காணியே போற்றி!
ஓம் காமாட்சியே போற்றி!
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி!
ஓம் கருணை ஊற்றே போற்றி!
ஓம் கற்பூரநாயகியே போற்றி!
ஓம் கற்பிற்கரசியே போற்றி!
ஓம் காம கலா ரூபியே போற்றி!
ஓம் கிரிசையே போற்றி!
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி!
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி!
ஓம் கூர்மதி தருவாய் போற்றி!
ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி!
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி!
ஓம் குமரனின் தாயே போற்றி!
ஓம் குற்றம் பொருப்பாய் போற்றி!
ஓம் கொற்றவையே போற்றி!
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி!
ஓம் கோமதியே போற்றி!
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி!
ஓம் சங்கரியே போற்றி!
ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி!
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி!
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி!
ஓம் சக்தி வடிவே போற்றி!
ஓம் சாபம் களைவாய் போற்றி!
ஓம் சிம்ம வாகினியே போற்றி!
ஓம் சீலம் தருவாய் போற்றி!
ஓம் சிறுநகை புரிபவளே போற்றி!
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி!
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி!
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி!
ஓம் செங்கதிர் ஒளியே போற்றி!
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி!
ஓம் சோமியே போற்றி!
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி!
ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி!
ஓம் தாயே நீயே போற்றி!
ஓம் திருவருள் புரிபவளேபோற்றி!
ஓம் தீங்கினை ஒழிப்பாய் போற்றி!
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி!
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி!
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி!
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி!
ஓம் துர்க்கையே அம்மையே போற்றி!
ஓம் துன்பத்தை வெரறுப்பாய் போற்றி!
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி!
ஓம் தூயமனம் தருவாய் போற்றி!
ஓம் நாராயணீ போற்றி!
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி!
ஓம் நிந்தனை ஒளிப்பாய் போற்றி!
ஓம் பகவதியே போற்றி!
ஓம் பகவானியே போற்றி!
ஓம் பசுபதி நாயகியே போற்றி!
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி!
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி!
ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி!
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி!
ஓம் பூஜிக்கின்றேன் துர்க்கா போற்றி!
ஓம் பொன் ஒளி முகத்தவளே போற்றி!
ஓம் போர் மடத்தை அளிப்பாய் போற்றி!
ஓம் மகிஷா சூரமர்த்தினியே போற்றி!
ஓம் மாதங்கியே போற்றி!
ஓம் மலை மகளே போற்றி!
ஓம் மகமாயி தாயே போற்றி!
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி!
ஓம் மாதவன் தங்கையே போற்றி!
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி!
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி!
ஓம் வேதவல்லியே போற்றி!
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி!
ஓம் ஜெய ஜெய தேவியே போற்றி!
ஓம் ஜெயங்கள் அலிப்பாய் போற்றி!
ஓம் துர்க்கா தேவியே போற்றி! ஓம் துர்க்கா தேவியே போற்றி!
ஓம் தேவி துர்க்கையே போற்றி! ஜெய தேவி துர்க்கையே போற்றி!
ஓம் தேவி துர்க்கையே போற்றி! ஜெய தேவி துர்க்கையே போற்றி!
ஓம் தேவி துர்க்கையே போற்றி! ஜெய தேவி துர்க்கையே போற்றி!

8.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது

சீதளாதேவியே வணக்கம். உன்னைச் சரணடைந்தோரின் உடல் உபாதைகளும் சரும நோய்களும், கொப்புளங்களும் அவற்றால் ஏற்படும் பயமும் வேதனையும் தீர்க்கும் தாயே உன்னை வணங்குகின்றேன். எனக்கு எல்லா நோய்த் துயரங்களையும் பயத்தையும் நீக்கி அருள் புரிவாய் தாயே!

9.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது.

மங்களை உன்றன் பத்ம மலரடி சூடினாலே
மங்களம் வாய்த்தல் உண்மை மற்றுமென் மங்களையே! மங்களம் நாணுன் நாணே! மாதர்கள் போற்றும் தேவி! மங்களம் 
தருக அம்மா! மாந்தர்கள் வணங்குகின்றோம்!

யாவுமாய் ஆகி நின்ற தேவியே சண்டி நீயும்
ஏவுவுல் தரிக்க வல்லாய்! எல்லாமாய் ஆனாய் அன்றோ!
மூவரில் முதன்மையானாய்! முரிந்திடும் புருவ வில்லாய்!
தேவரும் வியப்பில் வீழ தேர்ந்தனை கருணை கொண்டாய்!

நீலமா மலரை உன்றன் நீள்விழி மணந்த தம்மா!
கோலமே கூற்றம் தனனிக் கொளுத்திடும் செம்மைகொண்டாய்
ஆலமே சூழ்ந்த தேனும் அங்கொரு மஞ்சள் கொண்டாய்!
வாழவே உன்னை வேட்டோம் வகையருள் சண்டிகாவே!
வாழ்க்கையாம் கடலில் வீழ்ந்து வருந்தினம் வந்துனது வாசல்
ஆழ்மனத் தன்பினாலே அமைந்தனம் அன்னை அன்றோ!
தாழ்ந்தனம் தேவி உன்றன் தளிரடிப் பாதம் பற்றும்
ஏழைகள் துயரைத் தீர்க்க இக்கணம் எழுக தாயே!

காக்கவே காக்க நீயே! கணிபவள் நீயே தாயே!
நீக்கரும் மங்களங்கள் நிமலைதான் சண்டிகாவே!
போக்குவை விபத்தினின்றும் பொலிய மங்களமே நல்கு!
தேக்கரும் கருணை வெள்ளம் தினமுனை தோத்தரித்தோம்!

மகிழ்வினை நல்கும் தேவி! மங்களம் நல்கும் தேவி!
மகிழ்வதைத் தருவதற்கோ மலைத்திடா அன்னை நீயே!
மகிழ்வினைச் சுபத்தை நல்கு! மகிழ்வெனச்சுபமாய் ஆனாய்
மகிமையும்கொண்டாய்அம்மா! மனதினில்உன்னைக்கொண்டோம்!

மங்களம் நீயே! ஈசை மங்களம் 
எங்கும் ஆனாய்! மங்களம் 
எதிலும் நல்கும் மங்கள சண்டி நீயே!
மங்களம் புவனம் எல்லாம் மல்கிடவைக்கும் தாயே!

தோத்திர மாலை கொள்ள தோன்றிய மங்களமும் நீயே!
தோத்திரம் செய்வோர் தம்முள் தோன்றிடும் மங்களமும் நீயே!
தீத்திறம் அளிக்க வல்ல தேவியே! மனு வம்சத்து
தோத்திரம் கொள்ள வந்தாய்! தூயவளே வணங்குகின்றோம்!

வாழ்வினில் இன்பம் சேர்ப்பாய்! 
மங்களம் அனைத்தும் நல்கி!
தாழ்விலாச் சுவர்க்கம் சேர்க்கும்
சண்டியே போற்றுகின்றேன்!

சார்ந்தனை எங்கும் என்றும் சர்வமங்கள தாரையாய்!
பாரிதில் எல்லாச் செய்கை பரிபவம் இன்றிக் காப்பாய்!
ஆரெவர் வாரந்தோறும் அரிய செவ்வாய்தான் பூஜை 
நேரிடில் அருளைச் செய்யும் நேர்மையே சண்டி போற்றி!

இயங்குவை நிலைத்த தானே எல்லாமும் நீயே தாயே!
மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி
தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற
வயங்கிய தாளைப் பற்றி வணங்கியே வாழ்த்துகின்றோம்!

மங்கள சண்டி தன்றன் மாண்பினை உரைக்கும் இந்த
மங்களங்கள் நல்க வல்ல மாதேவன் சொன்ன தோத்திரம்
எங்கனும் சொன்னோர் கேட்டோர் அவர்தம் புத்ரர் பௌத்ரர்
பொங்கு மங்களமே தங்க புவியினில் வாழ்வர் மாதோ!

“ஸ்ரீமங்களாஷ்டகம்”-

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.


குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......
o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

o“மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.

          “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879195
All
26879195
Your IP: 34.229.223.223
2024-03-19 08:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg