gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 13 May 2018 19:54

சிவ லிங்கங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

&&&&&

சிவலிங்கங்கள்!

சிவ பக்தர்கள், அடியார்கள் அனைவரும் ‘ஓம் நமசிவய’ என நெக்குருகி பிரார்த்திக்கும்போது அந்த உயிர்கள் நினைவில் இருப்பது ஈசனின் லிங்க ரூபம்தான். பிரம்மனுக்கும் மகா விஷ்ணுவிற்கும் தங்களிடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது அவர்கள் நடுவே அக்னி பிளம்பாக சிவபெருமான் தோன்றினார். அதுதான் இறைவன் எடுத்த முதல் வடிவம். லிங்க வடிவம். அது முதல் லிங்கோத்பவம்- லிங்கம் தோன்றுதல் உண்டாயிற்று. அன்று முதல் சிவபெருமான் லிங்க உருவிலேயே வழி படப்பட்டு வருகின்றார். அந்த வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் பலவகையாக பகுக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.

அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.

பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.

சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.

ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..

ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.

சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.

1.சலலிங்கம்
(சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை. அவைகள்-
1.ஆயஸ்காந்த லிங்கம்-காந்தத்தால் உருவான லிங்கம் சித்தர்கள் வழிபடுவது. அஷ்டமா சித்திகளை அளிக்க வல்லது.
2.மௌகித்த லிங்கம்-முத்துக்களை எரித்த சம்பலிலிருந்து உருவாக்கப்பட்டது. மங்களமும் செல்வமும் அருளும் தன்மை கொண்டது.
3.ஸ்வர்ண லிங்கம்-தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
4.ரஜத லிங்கம்- வெள்ளியால் செய்யப்பட்டது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
5.பித்தலா லிங்கம்-பித்தளையால் செய்யப்பட்டது. பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லா மரணத்தை தரும்.
6.திராபு லிங்கம்-தகரத்தால் செய்யப்படுவது. எதிரிகள் இல்லாமல் செய்யும்.
7.ஆயச லிங்கம்- கந்தக அமிலத்தால் செய்யப்படும் எதிரிகளின் தொல்லையை அழிக்கும்.
8.சீசா லிங்கம்-வெள்ளீயத்தால் செய்யப்படுவது. எதிரிகள் நெருங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
9.அஷ்டதாது லிங்கம்-எட்டு வகையான தாதுக்களால் உருவானது. சித்தி அளிக்கக் கூடியது.
10.அஷ்டலோக லிங்கம்-எட்டு வகை உலோகங்களால் செய்யப்படுவது. தொழுநோய் குணமாகும்.
11.வைடூர்ய லிங்கம்- வைடூரியத்தால் உருவான லிங்கம். எதிரிகளின் எதிர்பாரா தாக்குதல்களின்று காப்பாற்றும்.
12.பாதரச லிங்கம்- பாதரசத்தால் ஆனது. அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
13.ஸ்படிக லிங்கம்- ஸ்படிகத்தால் ஆனது. எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

2. அசலலிங்கம்
(அசலம்- புடை பெயராதது)-.அவைகள்
1.சுயம்பு லிங்கம்-தானாகவே இறைவன் விரும்பிய இடத்தில் தோன்றிய லிங்கம்
2.தெய்வீக லிங்கம்-தேவர்களால் பூஜிக்கப்பட்டு பூமிக்கு வந்த லிங்கம்.
3.அர்ஷ/ஆரிடலிங்கம்-ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் வழிபாட்டிற்கென உருவாக்கிய லிங்கம்,
4.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை.
5.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை.
6.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது.
7.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம்.
8.மனுஷ்ய லிங்கம்-சாதாரண மனிதர்களால் உருவாக்கப் பட்ட லிங்கம். இந்தவகை லிங்கங்கள் பீடத்தின் அளவு, பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பலவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
8.1.வர்த்தமான லிங்கம்- பிரம்ம பாகமும் விஷ்ணு பாகமும் ஒரே அளவில் இருந்து ருத்ரபாகம் அதைப் போல் இரு மடங்கு இருப்பதாகும். வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
8.2.ஆத்ய லிங்கம்—மூன்று பாகங்களும் சம்மான அளவில் இருக்கும். இந்த வகை லிங்கங்களில் 1.புண்டரீக லிங்கம்-வழிபட்டால் பெரும் புகழ் கிட்டும், 2.விசாலா லிங்கம்- வழிபட்டால் பெரும் பொருள் கிட்டும், 3.ஸ்ரீவத்சா லிங்கம்- வழிபட்டால் எல்லா வளங்களும் கிட்டும், 4.சத்ருமர்த்தனா லிங்கம்- வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி தரும்.
8.3.முகலிங்கம்- முகங்களின் அடிப்படையில் ஏக லிங்கம்- ஒரு முகம், சதுர்முக லிங்கம்- நான்கு முகங்கள் (தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ), பஞ்சமுக லிங்கம்- ஈசனின் ஐந்து முகங்கள் தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ, ஈசானம் கொண்டது.
8.4.பஞ்ச பூத லிங்கம்- ப்ரித்வி-பூமி லிங்கம், வாயு லிங்கம் ஜல லிங்கம், ஆகாச லிங்கம், அக்னி லிங்கம்,
8.5.ஷணிக லிங்கம்- தற்கால வழிபாட்டில் பயன்படுத்துவது நீண்ட பயணம் செல்பவர்கள் தனகளுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கங்களே ஷணிக லிங்கம். இந்தவகை லிங்கங்கள் மலர், சந்தனம், விபூதி, அன்னம் ஆகியவை கொண்டு உருவாக்கப்படும் போது அவைகள் உருவக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறும். பூஜை முடிந்தபின் அவைகள் கரைக்கப்படும்.
1.கந்த லிங்கம்-சந்தனம், குங்குமம், கஸ்தூரி கலந்து உருவாக்கப்படும்.-வழிபடுவதால் சிவ சாயுஜ்ய மோட்சம்-பிறப்பில்ல நிலை சித்திக்கும்.
2.புஷ்ப லிங்கம்- பலநிறம் கொண்ட வாசனையுள்ள அழகிய மலர்களால் உருவாக்கப்படுவது. நில சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் சேரும்.
3.கோசாக்ரு லிங்கம்- பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும்- வணங்கினால் வளம் பெருகும்.
4.வாலுக லிங்கம்-சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படுவது. வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5.யவா கோதுமா சாலிஜ்ஜ லிங்கம்- சோளம், கோதுமை போன்ற மாவினால் உருவாக்கப் படுபவை- இது குழந்தை பேற்றைத் தரும்.
6.சீதாகண்ட லிங்கம்-இனிப்புவகைகளால் உருவாக்கப்படுவது- நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவல்லது.
7.திலாப்சிஷ்த லிங்கம்- எள்ளை அரைத்து செய்வது- எல்லா ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வது.
8.பாம்ச லிங்கம்-சாம்பல் கொண்டு செய்வது. எல்ல நற்குணத்தையும் அருளும்.
9.கூட / சீதா லிங்கம்-வெல்லத்தால் செய்யப்படுவது- இது மன நிம்மதியைத் தரும்.
10.வன்சங்குர லிங்கம்- மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது- வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுள்.
11.லவண லிங்கம்- உப்பு, மஞ்சள், திரிகடுகம் சேர்ந்து செய்வது- மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி அருளும்.
12.பிஷ்டா லிங்கம்- அரிசி மாவினால் செய்வது- நல்ல கல்வியைத் தரும்.
13.ததிதுக்த லிங்கம்-பால், தயிரிலிருந்து முழுவதும் நீரை நீக்கி செய்வது. மனமகிழ்ச்சியையும் வளங்களும் அருளும் தன்மை கொண்டது.
14.தான்ய லிங்கம்-நவதான்யங்களால் உருவாக்கப்படுவது- விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15.பழ லிங்கம்-பலவகையான பழங்களால் உருவாக்கப் படுவது. பழதோட்டம் வைத்திருப்போருக்கு நல்ல பலன்.
16.தாத்ரி லிங்கம்- நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும்- கஷ்டப்படு பவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலை.
17.நவநீத லிங்கம்-வெண்ணெய்யால் உருவானது. பணமும் புகலும் சேரும்.
18.கரிக லிங்கம்-விசேஷவகைப் புல்லால் உருவாக்கப்படும்- துர்மரணத்தை தடுக்கும்.
19.கற்பூர லிங்கம்- கற்பூரம் கொண்டு உருவக்கப் படுகின்றது- சிறந்த ஞானத்தை தந்து மாயையை அழிக்கும்.

புராணங்களில் இந்திரன் மணிமாய லிங்கத்தையும், சூரியன் தாம்ரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கத்தையும்(முத்துக்களால் ஆனது) ,குபேரன் ஹேம லிங்கம் எனும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அன்பான உயிர்களே நீங்களும் உங்கள் வசதி சூழ்நிலைக்கேற்ப லிங்கங்கள் செய்து அணிந்து கொள்ளுங்கள். பிரதிஷ்டை செய்து வழிபட்டு வளமுடன் வழ்க என வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா.

&&&&&

Read 8575 times Last modified on வெள்ளிக்கிழமை, 21 June 2019 10:18
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880578
All
26880578
Your IP: 54.160.244.62
2024-03-19 15:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg