ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
#####
கமலாத்மிகா!
பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி. லட்சுமி என்றால் கருணையுடன் பார்ப்பவள் எனப்பொருள். சந்திரனின் சகோதரியானவள் அழகு, தூய்மை, மங்கலம் இவற்றுக்கு காரணமானவள். ஞானமும், செல்வமும் அளிப்பவள். செந்தாமரையில் வீற்றிருந்து அபயவரம் காட்டி கமலமலர் ஏந்தியிருப்பவள். விஷ்ணுவின் மச்சாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் கமலாத்மிகா. இவள் தென்மேற்கு திசையில் தோன்றியவள்.
அலை மகளாக கருதப்படும் இவள்
சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி,
பாதாளத்தில் நாகலட்சுமி,
அரசர்களிடம் ராஜ லட்சுமி,
இல்லறவாசிகளிடம் கிருக லட்சுமி,
க்ஷத்ரியர்களிடம், கீர்த்தி லட்சுமி,
வைசியர்களிடம் வர்த்தக லட்சுமி,
புண்யவான்களிடன் ப்ரீதி லட்சுமி,
வேதாந்திகளிடம் தயாலட்சுமி
எல்லா பிராணிகளிடம் சோம லட்சுமி
சந்திரனில் சந்திரியை, சூரியனில் காந்தியாகவும் விளங்குபவள்.
எல்லா இடங்களிலும் யாவராலும் பூஜிக்கப்பட்டு எல்லா சம்பத்துக்கும் அதிஷ்டான தேவதையாக எங்கும் வியாபித்து விளங்குகின்றாள்.
கமலாத்மிகாவின் மூல மந்திரத்தால் முறைப்படி வேள்வி செய்தால் செல்வம், ஆரோக்கியம், பதவி, ஆன்மீக முன்னேற்றம் ஆகியன அடையலாம்
#####