ஓம்நமசிவய!
நர்த்தன விநாயகா போற்றி!
நவசக்தி விநாயகா போற்றி!
நித்திய கணபதியே போற்றி!
பஞ்சமுக விநாயகா போற்றி!
திரிபுராந்தகர்!
வரங்களால் பலம் பெற்ற வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை அமைத்து அக்கோட்டைகளுடன் எவ்விடத்தும் செல்லும் ஆற்றல் பெற்று உலகிற்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தனர். விண்ணோர்கள் ஒன்று கூடியும் அவர்களை அழிக்க முடியவில்லையாதலால் சிவனிடம் வேண்டினர். சிவன் அக்கோட்டைகளை தகர்த்தெறிய திருவுளம் கொண்டார் எல்லா கடவுளும் தங்களின் ஆற்றலில் பாதியை சிவனுக்கு அளிக்க முன்வந்தனர்.
அனைவரும் சேர்ந்து உருவாக்கிய தேரில் பூமி தட்டானது. சூரிய சந்திரர்கள் சக்கரங்களாயினர். வேதங்கள் குதிரைகளாயின. மேருமலை வில்லானது. வாசுகி நாணாகியது. திருமால் அம்பானார். அக்னியே அதன் முனை. இமயன் அதன் இறகு. நான்முகன் தேரோட்டியானார். போருக்குப் புறப்பட்ட பெருமான் தேரில் ஏறி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கினார். பெருமானுடைய வலக்கால் சிறிது முன்னேயும், இடக்கால் சற்று வளைந்து பின்னேயும் அம்பெய்ய அமைந்த நிலை. நான்கு கரங்களில் வலக்கரங்களில் சிம்மகர்ணமுத்திரையில் அம்பு பூட்டிய வில்லின் நாணைப் பற்றியிருக்கும், இடக்கரங்களில் ஒன்று வில்லைப் பற்றியிருக்கும், மற்றொரு வலக்கரம் டங்கத்தையும், இடக்கரம் மானையும் பற்றியிருக்கும். சடாமகுடம் அணிந்து இடப்பக்கம் உமையுடன் இருப்பார். திரிபுரம் எரித்தபோது ஆடிய ஆடல் கொடுகொட்டி பாண்டரங்கம் எனப்படும்.
தூலம், சூக்குமம், காரணம் என்ற மூவகை உடல்களையும் அவற்றிற்கு காரணமாய் அமைந்த ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் அழித்து இறைவன் நமக்கு அருள் செய்யும் திறத்தினையே அறிவுறுத்தும் வடிவம். மாறுபட்ட ஆன்மாக்களை வசப்படுத்தும் முக்குணங்களை மாற்றுவார். முப்புரங்களை எரித்து சாம்பலாக்கிய திரிபுராந்தகர் வடிவம். நிகழ்வு நடந்த தலம்: திருவதிகை. காட்சி: திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி. காஞ்சி கயிலாசநாதர்,
#####