சக்திபீடம்-36-ந/னம்
ஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-36
அட்சரம் ந/னம்(இருபாதாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஹஸ்தினாபுர ஏரி
அட்சரதேவிகள் நார்யாதேவி/ அந்தரஷக்தி
அங்கம் வலது கணுக் கால்பாகம்
பைரவர்/இறைவன் ஸ்தானு
அங்கதேவி/ இறைவி பத்ரகாளிசாவித்ரி/ முக்திநாயகி
பீடங்கள் ஹஸ்தினாபுராயை நம
51-ல் நம் உடலில் இடது கால்விரல் நுனியில்
ஊர் குருஷேத்திரம்
அருகில் ஹஸ்தினாபுரம்
மாகாணம்/நாடு அரியாணா
இது ஹஸ்தினாபுர எனும் மகாசக்தி பீடம். இங்கு பாஸ்கர மந்திரங்கள் சித்திக்கும். ஏரியை ஒட்டியுள்ள இடத்தில் காளி கோவில்.-ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி என அழைக்கின்றனர். சாவித்திரி என்றும் அழைப்பர். ஜான்ஸா சாலையில் உள்ள கூப் பத்ரகாளி மந்திரில் அன்னையின் அங்கம் அடையாளமாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பத்ரகாளின் காலின் கீழ் படுத்திருக்கும் சிவன். அன்னையின் இருபுறமும் செந்தூர கணபதி, கருமை நிற கால பைரவர். லட்சுமி, சரஸ்வதி, சிவலிங்கம் சன்னதிகள்.
உப சக்திபீடம்:
நுபுராணவம் என்ற இடத்தில் தேவியின் நூபுரம்-சிலம்பு வீழ்ந்த தலம். இங்கும் பாஸ்கர மந்திரங்கள் சித்திக்கும்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
துய்மையான வெண்ணிற மேனி- மேல் இரண்டு கரங்களில் தாமரையையும், கீழ் இரண்டு கரங்களில் வர அபய முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
நோநந்த சக்திர் தேவேசீ மத்த மாதங்க ஸம் ஸ்திதா
ஏக வக்தரா தடித் கௌரீ தத்தே பத்ம வராபயாந்:
#####