ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
1. உடம்பும், உடம்பு சார்ந்தவைகளும்!.
36 வகையான பொருட்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன
சமகத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்தன்மையுடன் எல்லாப் பிரிவுகளும் உச்சக்கட்டத்தில் ஒரே வழிபாட்டு நோக்கின் இலக்கை அடைய வழிகோலுகின்றது. "உடம்புதான் நேர்மை என்ற வேரின் தொடக்கம்" என்று ஒரு வடமொழி வழிபாட்டு நூல் குறிப்பிடுகிறது. இப்பகுதி முழுவதும் 'உடம்பு' சார்பாகவே சொல்லப்பட்டுள்ளது உணவுப்பதார்த்தங்களும், அர்ப்பணிப்பதினால் கிடைக்கும் உணவுப்பொருள்களும், உடம்பும் அதன் உறுப்புகளும், அவற்றின் அமைப்புகளும் சொல்லப்பட்டுள்ளன.
சமஸ்கிருதம்::
வாஜச்ச மே ப்ரஸவச்சமே ப்ரய்திச்ச மே ப்ரஸிதிச்ச மே தீதிச்ச மே க்ரதுச்சமே ஸ்வரச்ச மே ச்லொகச்ச மே ச்ரவச்ச மே ஜ்யோதிச்ச மே ஸுவச்ச மே ப்ராணச்ச மேSபானச்சமே வ்யானச்சமேசுச்சமே சித்தஞ்சம ஆதீதஞ்ச மே வாக்சமே மனச்சமே சக்ஷுச்ச மே ஸ்ரோத்ரஞ்சமே தக்ஷச்ச மே பலஞ்ச ம ஓஜச்ச மே சஹச்ச ம் ஆயுச்ச மே ஜராச ம ஆத்மா ச மே தனூச்சமே சர்ம ச மே வர்ம ச மேங்கானி ச மேஸ்தானி ச மே பரூக்ம்ஷி ஷி ச மே சரீராணி ச மே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
உணவுப் பொருள்களும், உணவளிக்கும் மனதும், தூய்மையான உணவும், உணவு உட்கொள்ளும் கொடுப்பிணையும், உணவளிக்கும் வேட்கையும், உணவைச் செறிக்கவைக்கும் தன்மையும், உணவை சம்பாதிக்கும் வேள்வியும், வேள்வி செய்யும் போது பாடப்படும் பாட்டை சரியாக உச்சரிக்கும திறனும், குயில் போல இனிமையான குரலும், புகழும், சொற்களை கையாளும் திறமையும், கேள்வித்திறமையும், நன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் திறனும், உள்ளொளியும், சொர்க்கமும், உடம்பில் சீரான மூச்சுக்காற்றும், மூச்சுக்காற்றின்மையும், மேலும், அறிவினால் ஏற்படும் ஞானமும், அந்த ஞானத்தினால் துரிதமாக அறியப்படும் செய்திகளும், சுவையான பேச்சும், திடகாத்திரமான மூளையும், கூர்மையான பார்வையும், துல்லியமான காது கேட்கும் திறனும், உயிரும், எண்ணங்களும், எண்ணத்தினால் அறியப்பட்ட பொருளும், அறிவொளியினால் அறியப்படும் உந்துதலும், செயல்பாட்டின் திறனும், மூச்சுக்காற்றின் திறனும், எதிரிகளை வெல்லும் திறமையும், நீண்ட ஆயுளும், மதிக்கப்படும் முதுமையும், தேவையான அளவு திமிரும், உள்ளொளியும், செதுக்கினாற்போன்ற உடல்வாகும், நலமும் உடலைக்காக்கும் கவசம் முதலியனவும், திடமான உறுப்புக்களும் எலும்புகளும் கணுக்களும் - திடமான மூட்டுகளும், மறுபிறப்பால் உயர்ந்த தலைமுறையில் பிறவிக் கொடுப்பிணையும் - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####