ஓம்நமசிவய!
கூர்வாமரோ. முருகார் மலர்த்தாம் முடியானை அடியார்
முயற்சித்திறம் திருகாமல் விளைவிக்கும் தயானைவதனச்
செழுங்குன்றினைப் பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி
புத்தேளிரும் ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#*#*#*#*#
40.மூச்சுகள்!
மூச்சு விடும் அளவிலும் ஒழுக்கமுறை வேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்னிக்கை 21600 என்ற அளவில் இருக்க வேண்டும். இதைக் கடைபிடிப்பவர்கள் 120 ஆண்டுகள் வாழலாம். ஒரு மானிட உடம்பு தினந்தோறும் நிமிஷத்திற்கு பதினைந்து மூச்சுகள் என மூச்சு விடுகின்றது. மூக்கின் வலது இடது துவாரங்கள் வழியாக நம் சுவாசம் நடக்கின்றது. உள்ளுக்கும் இழுக்கும் மூச்சுக்கு நிஸ்வாஸம்(பூரகம்)- நிச்சுவாசம் என்றும் வெளிவிடும் மூச்சுக்கு உஸ்வாஸம்(ரேசகம்)- உச்சுவாசம் என்றும் பெயர். உள்ளே இழுத்த மூச்சை நிறுத்துவது அதாவது கட்டுவது, மற்றும் வெளியே விட்டு மூச்சை நிறுத்துதல் அதாவது அசைவுற செய்தல் என்பதை கும்பகம் என்பர். முன்னது உள்கும்பகம், பின்னது வெளிக்கும்பகம் எனப்படும். பூரக, ரேசக மூச்சுகளை யோகவலிமையால் நிறுத்திவைக்க முடிந்தவருக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் விகாரங்கள் ஒடுங்கிவிடும். இதை லயம் என்றும் கூறலாம். யோகாப்பியாசன சித்தி பெற்றவர்களுக்கே இந்த லயம் ஏற்படும். உள்ளே வாங்கும் நிஸ்வாஸ(பூரக), வெளியே விடும் உஸ்வாஸ(ரேசக) மூச்சுகள் ஹம்ஸ என்றும் சொல்லப்படும்.
இந்த பூரக ரேசக மூச்சுகள் ஒவ்வொரு ஜீவனின் உடம்பிலும் உள்ள ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞேயம் என்பதிலும் மற்றும் ஸகஸ்ராரம் என்பதிலும் சுற்றி சுற்றி வந்து அந்த ஜீவனின் ஆயுள் பிரமாண காலத்தை நடத்திக் கொண்டிருக்கும். இப்படிக் கலையில் நடக்கும் ஐம்பூதங்களின் அந்தக் கரண வியாபாரத்தால் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளை க்ஷீணப்படுத்தி நரை திரை மூப்பை எளிதில் உற்பவம் செய்யும். ஆனால் தற்போது ஜீவன்கள் ஓடுவதனாலும் நடப்பதனாலும் தூங்குவதனாலும் போகம் செய்வதனாலும் சுவாசம் அதிகரித்து உடலின் ஜீவசக்தி குறைந்து 120 ஆண்டுகள் என்பது குறைந்து விடுகின்றது. ஜீவன் விடும் சுவாசம் குறைந்தால் வயது ஏறும். அதற்காண பயிற்சிகளே பிரணாயாமம், வாசியோகம். எனவே இதிலிருந்து விடுபட்டு நலமுடன் இருக்க பிரணாயாமம் செய்ய வேண்டும்.
#*#*#*#*#