ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#*#*#*#*#
49. வர்ணாசிர தர்மம்!
வர்ணாசிர தர்மம் நான்கு 1. பிரம்மச்சரியம், 2. கிரஹஸ்தியம், 3. கிரஹஸ்தியம், 4. சன்னியாசம்
பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்பது திருமணமே புரியாமல் நித்ய கர்மானுஷ்டங்களை கடைப் பிடிப்பது ஆகும். ஒருவன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் மனதையும் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். இன்சொல்லால் பேசி அறவழியில் நடக்க வேண்டும். இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டுமே உண்ண வேண்டும். இறைவன் நாமங்களையே உச்சரித்து சதா இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.
கிரஹஸ்தியம்
இல்லறத்தில் ஈடுபட்டு மனை மக்களுடன் இல்லற தர்மத்தை கைக்கொண்டு வாழ்வது. இறைபூஜை, அதிதிபூஜை செய்வது சிறப்பு.
வனப்பிரஸ்தம்
அரசாட்சி செய்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை நல்லாட்சி செய்து உரிய காலத்தில் அரச பதவியைத் துறந்து உரியவர்களிடம் ஒப்படைத்து தன் துணையுடன் காட்டிற்குச் சென்று பற்றைத் துறந்து பகவான் பதத்தை நாடுவது ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்வது.
சன்னியாசம்
அனைத்து உறவுகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழ்வது. கிடைத்தால் சாப்பிடுவது இல்லாவிட்டால் கிடைத்த இடத்தில் படுப்பது என்பதை ‘சத்திரா போஜனா-மடாநித்திரா’ என்பர். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளவதில்லை. நாளைக்கு என எதையும் சேமிப்பதில்லை.
#*#*#*#*#