ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#*#*#*#*#
59.தோஷங்கள்!
சர்ப்ப, பித்ரு, மாத்ரு, சகோதர, மாதுல, பிராமண, பத்தினி, மந்திர, பிரேத ஆகிய சாபங்களால் ஏற்படும் புத்ர தோஷங்களினால் குழந்தை பிறந்த சில நாட்களில் இறப்பது, பாசமுள்ள பிள்ளைகள் வளர்ந்து இளைஞர் / இளம் பெண்ணாக இருக்கும்போது இறப்பது, பெண் குழந்தைகளுக்கு காலங்கடந்து திருமணம் நடப்பது, திருமணம் முடிந்து குறுகிய காலத்தில் வாழாவெட்டியாக பிறந்த வீட்டிற்கு திரும்புவது, மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளையாக பிறப்பது போன்றவைகள் நிகழ்கின்றன.
முன்பிறவியில் தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப் படுத்தியதாலும், அவர்களின் கடைசிக் காலத்தில் சரியாக பராமரிக்காமல் இருப்பது பித்ரு / பிதுரு சாபமாகின்றது. இதன் காரணமாக இப்பிறவியில் தன் தந்தையோடும் தன் பிள்ளைகளுடனும் ஒத்துப் போகமுடியாது. எப்போதும் ரத்த உறவுகளால் அவமானமும் வேதனையும் தினசரி நடக்க வாய்ப்புண்டு.
சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக் கொள்வதாலும் சகோதர்களைக் கொடுமைப் படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம். இதனால் ஏற்படும் புத்திர தோஷம்.
சொத்துப் பிரச்சனையில் தாய் மாமனை அவமானப்படுத்தியும், சண்டை போட்டும் தாய் மாமன் சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம். இதனால் தாய்வழிப் பகையும், புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும். பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும் விவாகரத்து ஆவதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.
சாதுக்கள், மகான்கள், சிவனடியார்களை அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராமண சாபம். இதனால் ஊனமுற்ற குழந்தை பிறப்பது மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது ஊமை, குருடு, செவிடு போன்ற குறையுள்ள குழைந்தைகள் பிறப்பதும் கடுமையான புத்திர தோஷம்.
மனைவியை கொடுமை படுத்துவதாலும் குடும்பத்தைவிட்டு வைப்பாட்டி வீடே கதி என்று இருந்து பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி இருப்பதும் குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதும் மனைவி சாபத்தால் ஏற்படும் பத்தினி சாபம். இதனால் மனைவி மக்களால் அவமானப்படுத்தப்பட்டு பண்டாரம், பரதேசியாக பிச்சை எடுத்து கடைசிக் காலத்தில் தன்னை கவனிக்க ஆளில்லை என வருந்தி அனாதையாக இறந்து போவது ஆகும்.
மாந்தீரிகர்களைத் தேடிப்போய் தனக்கு வேண்டாதர்களுக்கு பில்லி சூன்யம் வைப்பதும் குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருந்து இந்த சாபத்திற்கு ஆளாகியதனால் மருத்துவத்திற்கு புலப்படாத நோய்கள் உருவாகி சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழித்து குடும்ப விருத்தியில்லாமல் தொழில் அமையாமல் தொழிலில் நட்டமடைந்து, பிள்ளைகள் ஊதாரித்தனமாக நடந்து துஷ்ட பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சந்தித்து வேதனை அடைவர்.
இந்த தோஷங்கள் நீங்க பரிகாரமாக குருபகவானுக்கு வியாழன் அர்ச்சனை செய்து முடிந்தவரை அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புத்திக் காலத்தில் அந்த கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு அன்னதானம் செய்யலாம். பௌர்ணமி / ஜன்ம நட்சத்திரத்தன்று குலதெய்வம் கோவிலில் வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.
#*#*#*#*#