ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
####
பெரியதிருவடி! கருடாழ்வார்!
கருடன் எப்படி வாகனமானது!
விநதையும் கத்ருவும் சகோதரிகள். காஸ்யப முனிவரின் மனைவியான விநதை காஸ்யபரிடம் வரம் கேட்க சக்திவாய்ந்த அருணன், கருடனும் பிறந்தனர். கருவில் குறைபாடு ஏற்பட்டதால் ஊனமான அருணன் அதற்கு தன் தாயே காரணம் என நினைத்து பல ஆண்டு காலம் கத்ருவின் அடிமையாக இருக்க தாய்க்குச் சாபமிட்டு இரண்டாவது முழுமையான கருவினால் இந்த சாபம் நீங்கும் என விமோசனம் அளித்தான். அருணன் தவமிருந்து சூரியனின் தேரோட்டியானான் இன்னொரு மனைவி கத்ரு காஸ்யபரிடம் வரம் பெற்று ஆயிரம் பாம்புகளைப் பெற்றாள்.
சகோதரிகள் இருவரும் உலா வரும்போது உச்சைச்வரசுவைப் பார்த்த இரு சகோதரிகள் அதன் வாலின் நிறம் வெண்மையா, கருப்பா என நடந்த போட்டியில் வெற்றிபெற கத்ரு தன் பாம்புக் குழந்தைகளை அழைத்து குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ள சொல்ல அது சரியில்லை, பாம்புகளின் தர்மம் அதுவல்ல என சில பாம்புகள் மறுக்க அவைகளை பாண்டுவின் வம்சத்தில் ஒருவன் செய்யும் சர்ப்ப யாகத்தில் அழியும்படி சபித்தாள்.
தாயின் சாபத்தினால் கலக்கமுற்ற மற்ற பாம்புகள் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களது சகோதரியை ஜரத்காரு என்பவருக்கு மணமுடிக்க அவருக்குப் பிறந்த ஆஸ்திக மகரிஷி ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை பாதியில் நிறுத்தினதால் மீதி பாம்புகள் தப்பின.
விநதைக்கு மகன் அருணனின் சாபம் இருந்ததால் பந்தயத்தில் தோற்று கத்ருவுக்கு அடிமையானாள். விநதைக்கு கருடன் பிறந்ததும் அவனுக்கு பாம்புகள் உணவாகும் என பிரம்மா வரம் அளித்தார். பாம்புகளின் மீது பகைகொண்டு கொன்று புசித்த கருடனிடம் தலைமை பாம்பான வாசுகி நியாயம் கேட்க தொடர்ச்சியாக கொல்லவில்லை, ஆனால் தினமும் ஒரு பாம்பு தனக்கு இறையாக வர ஒப்புக்கொண்டான் கருடன். அதன்படி தினமும் ஒவ்வொன்றாக பாம்புகள் கருடன் குறிப்பிட்ட பாறைமீது சென்று கருடனுக்கு இறையாகின.
அப்பகுதியை ஆண்ட மன்னன் ஜீமூதவாகனன் பதேர்வாவுக்கு வந்து வாசுகியுடன் நண்பரானார். ஜீமூதவாகனன் செல்வம் துறந்து காட்டிற்குச் சென்றபோது நாக கன்னிகையின் அழுகுரல் கேட்டு அவளை விசாரிக்க ஒவ்வொரு நாளும் பட்சி ராஜாவுக்கு ஒரு பாம்பு இறையாக கட்டளை உள்ளது. அதன்படி இன்று என் மகன் சங்க சூடன் முறை என்பதால் துயரம் தாங்க முடியவில்லை என்றதைக் கேட்ட ஜீமூதவாகனன் அந்த பாம்பிற்குப் பதிலாக தானே சென்று பாறை மீது படுக்க, மன்னனின் தியாக உணர்வைப் பாராட்டி கருடன் அன்றிலிருந்து பாம்புகளை கொல்வதை கைவிடுவதாகக்கூறி இதுவரை தனக்கு இறையான பாம்புகளின் எழும்புக் கூட்டிலிருந்து அந்த பாம்புகளை உயிர்ப்பித்துக் கொடுத்தான். எனவே பாம்புகள் தொடர்ந்து அழிக்கப்படுவதை தடுத்த வாசுகி மற்றும் ஜீமூதவாகனன் இருவரும் இங்கு கருவரையில் மூலவர்களாக அருள். மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் வாசுகி கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி. பனிக்காலத்தில் மூடப்பட்டு பைசாகியன்று (தமிழ் புத்தாண்டு) திறக்கப்படும். பதேர்வா வாசுகிநாக் ஆலயம். காஷ்மீர்மாநிலம்-தோடா மாவட்டம்-தோடாவிலிருந்து33கி.மீ.
நாகபஞ்சமிக்கு அடுத்துவரும் ஆடிமாத வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமியாக கொண்டாப்படுகின்றது. பெரிய திருவடி எனப்படும் கருடன் அவதரித்த சுவாதி நடசத்திரம் பஞ்சமி திதியே கருடபஞ்சமி. ஆடி மாதத்தில் நாகருக்கும் கருடனுக்கும் பூஜை செய்து நல்ல பலன்கள் பலவும், நீண்ட ஆயுளையும் செல்வ செழிப்பையும் பெற்று நல்வாழ்வு வாழ்க!-குருஸ்ரீ பகோரா
கருடன் தன் தாயின் அடிமைத்தளை போக்க இந்திரலோகம் சென்று இந்திரனை வென்று அமிர்தம் கொண்டுவரும்போது அவனின் செயல் சரியில்லை என விஷ்ணுகூற இருவருக்கும் இருபத்தியோறு நாட்கள் போர். இறுதியில் பெருமாள் அவனிடம் நாகங்களுக்கு அமிர்தம் கொடுப்பது தர்மமாகாது. அதற்குப் பதிலாக என்ன வரம் வேண்டும் என்று கேட்க, நீ யார் எனக்கு வரம் தருவது, உங்களுக்கு நான் வரம் தருகிறேன், என் தாய் மீது சத்யம், கேளுங்கள்! என கருடன் அகங்காரத்துடன் சொல்ல, நீ எனக்கு வாகனமாக பணிபுரியும் வரத்தை தா என பெருமாள் கேட்டார். இதனால் கருடனின் கர்வம் அழிந்து விஷ்ணுவை வணங்கி வாகனமானான். விநதையின் மகனானதால் கருடனுக்கு வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது.
தன் வாகனமாகிய கருடனுக்கு அருள்புரிய நினைத்த விஷ்ணு அவனை கலசகுடத்துடன் அனுப்பிவைத்தார். கருடன் கலசத்தை தர்ப்ப புல்லின்மேல் வைக்க, வாயுவிற்கு விஷ்ணு சைகை செய்ய அவர் தன் அசைவால் கலசத்தை தட்டிவிட அமிர்தம் கீழே சிந்தி கற்பூரமாய் கரைந்தது. அப்போது அங்கிருந்த பாம்புகள் அந்த தர்ப்பையை நக்க அவைகளின் நாக்குகள் பிளவு அடைந்தன. பாம்புகளின் நாக்குகள் பிளவுபட்டிருக்க இதுவே காரணம் என்கிறது புராணம். விநதையின் மகனானதால் வைநேயன் என கருடன் அழைக்கப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாளுக்கு இடையறாது தொண்டு செய்பவர்கள் நித்திய சூரிகள் எனப்படுவர். அவர்களுள் முக்கியமானவர் கருத்மான் –பெரிய திருவடி- கருடாழ்வார் என அழைக்கப்படும் கருடனே! பறவைகளில் இவர் இராஜாவாக கருதப்படுவதால் பட்சிராஜன் எனப்படுபவர். எந்த ஒரு நற்செயலைச் செய்யத் தொடங்கும்போது கருட சகுனம் கிடைப்பது உயர்வாகச் சொல்லப்பட்டுள்ளது. கருடப் பத்து என்ற செய்யுட்கோவையை ஜபம் செய்தால் விஷ சந்துக்களால் நேரக்கூடிய அபாயம் விலகும்.
பெரியாழ்வார் கருடபகவான் அம்சமாகத் இதே சுவாதி நட்சத்திரத்தில் தோன்றியவர். அவரது மகளே ஆண்டாள். பெரியாழ்வார் மாமனார் ஸ்தானத்தில் அமைந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்கமன்னார்- ஆண்டாளுடன் கருடபகவானும் ஒரே ஆசனத்தில் இந்த அமைப்பு சிறப்பு இங்கு மட்டும்தான்.
#####