ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை!
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்.
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
#####
இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!
நற்பயன்கள்- கபாலத்தை தூய்மை ஆக்கும். நுரையீரலுக்கு போதிய பிராண சக்தியை தரும். அதிக உடல் எடை கணிசமாக குறையும். எப்போதும் தூக்கம் / தூக்கமின்மை போன்ற தூக்க பிரச்சனைகள் சரியாகும். கிட்னி பிரச்சனைகள், அஜீரணம், தோல் வியாதிகள், இரத்த அழுத்த பிரச்சனைகள், பார்வை கோளாறுகள் நிவர்த்தியாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வயிற்றை உள்ளே இழுத்து காற்றை வெளியே தள்ள வேண்டும். மூச்சு வெளியே வரும் போது அடுத்து மூச்சு உள்ளே செல்லும். அந்த இயக்கம் தெரியாதவாறு மூச்சு வெளிவிடுதல் மட்டும் தெரியுமாறு தொடர்ந்து செய்யவும். தோள்பட்டை குலுங்ககூடாது. தலை இடுப்பு ஆடக்கூடாது.
முதலில் தினமும் 120 முறை 1 நிமிடத்தில் செய்ய பழகவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
#####