ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!
#*#*#*#*#
33.விரதங்கள்!
விரதம் இருப்பது நம்முடைய சிறந்த பண்பாடாக இருந்துள்ளது. மன ஒழுக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நன்மை அளிக்கும் விரதங்கள் சில:
சந்தாபண விரதம்- ஒருநாள் முழுவதும் பஞ்சகவ்யம் உட்கொண்டு அடுத்தநாள் முழுவதும் உண்ணாவிரதம் இருத்தல்.
மஹா சந்தாபண விரதம்- பஞ்சகவ்யத்தில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஆறு நாட்கள் உட்கொண்டு ஏழாம் நாள் முழு உபவாசம் இருத்தல்.
பிரிசமத்திய அல்லது கிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் 26 தேக்கரண்டி அளவு பகலில் மட்டும் உணவு உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் 22 தேக்கரண்டி அளவு இரவில் மட்டும் உணவு உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் 24 தேக்கரண்டி அளவு உணவு உட்கொண்டு பத்தாம் நாள் உபவாசம் இருத்தல்.
அதிகிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் பகலில் உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் மாலையில் உட்கொண்டு, அடுத்த மூன்று நாட்கள் ஒரு கையளவு மட்டும் பகலில் எப்பொழுதாவது உட்கொண்டு, இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் என பன்னிரண்டு நாட்கள் இருத்தல்.
பராக விரதம்- பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து உபவாசம் இருத்தல்.
தப்தகிரிச்சர விரதம்- முதல் மூன்று நாட்கள் நீர் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் பால் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் நெய் மட்டும் அருந்தி, இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் என பன்னிரண்டு நாட்கள் இருத்தல்.
பதகிரிச்சர விரதம்- முதல் நாள் ஒரு வேளை உணவு, இரண்டாம்நாள் உபவாசம், மூன்றாம் நாள் அளவில்லா உணவு, நான்காம் நாள் உபவாசம் இருத்தல்.
சாந்தா ராமண விரதம்- பௌர்ணமி முதல் நாள் 15 கையளவு உணவு, அடுத்தநாள் 14 கையளவு உணவு என ஆரம்பித்து அமாவாசைவரை உட்கொண்டு அமாவாசையன்று உபவாசம் இருக்கவேண்டும். அடுத்து பிரதமை முதல் நாள் ஒரு கையளவு என ஆரம்பித்து தினமும் ஒரு கையளவு அதிகமாகிக் கொண்டு பௌர்ணமி அன்று 15 கையளவு உண்டு விரதத்தை முடித்தல்.
சாதுர்மாஸ்ய விரதம்: சன்னியாசிகள் மேற்கொள்வது..ஆஷாட பௌர்ணமி-வியாச பௌர்ணமி அன்று அனுஷ்டிக்கப் படும். இதை குரு பௌர்ணமி என்றும் சொல்வர். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே இந்த வியாச பூஜையின் நோக்கம். ஆனிமாத பௌர்ணமியிலியிருந்து கார்த்திகை மாசம் பௌர்ணமி வரைக்கும் ஒரே இடத்தில் தங்கி வேத புராணங்களில் வித்வத்வம் உள்ளவர்களுடன் கலந்துரையாடி, சாஸ்திர சம்பிரதாயத்தையும், பக்தி மார்க்கத்தையும் மத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன், உணவையும் சில கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பர். கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத்பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திராவிடபஞ்சகம் என ஐந்து பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30பேர் பூஜை செய்ய துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் எடுத்துக்கொள்வர். வியாசர், அவரது சீடர்கள் பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து, ஆதிசங்கரர், அவரது சீடர்கள் பத்மபாதர், சீரேச்சுவரர், ஹஸ்தாமலகர், தோடகர், மௌனகுரு, அவரின் சீடர்கள் சனகர், சனந்தர், சதானர், ஸநத்குமார், நாரதர், சுகர், கௌடபாதர் ஆகிய குருமார்களும், சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்கிராமமும் பூஜிக்கப்படும். முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்கிராமமும் வைத்து எழுமிச்சை பழத்தை ஆங்காங்கே வைத்து முறைபடி குருபரம்பரை பூஜையாக நடைபெறும்.
இந்த பொதுவான விரதங்கள் தவிர பௌர்ணமி, அமாவாசை, திதிகள், மற்றும் விசேட தினங்களுக்குரிய விரதங்கள் என்று நிறைய உண்டு. www NAAVAAPALANIGOTRUST.COM web site-ல் விரதங்கள் பிரிவில் பார்த்து பயன் பெறவும்.
#*#*#*#*#