குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஆறாம் தந்திரம்! (12)
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#####
பக்குவன்!
1690. வழிபாடு செய்யும் இயல்புடைய மாணவர் வேத ஆகமமுறையை உணர்ந்து குற்றம் இல்லாத மேலான குருவை நாடி அறிவர். இத்தகையவர் முத்தியை விரும்பும் அறிவுடையவர். முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழியும் வழியைத்தான் அறிவர்.
1691. இறைவா உன்னை விரும்பி என் பரபரப்பைக் கைவிட்டேன். உலக வாழ்வில் அலுத்துப் போனேன். இனி நான் எவருடனும் சேரமாட்டேன். எளியோனின் வினையைக் கெடுத்து என் கவலை நீங்கும்படி மாற்றி என்னை உடையாய் மகிழ்வுடன் என்னை ஆட்கொள்வாயாக.
1692. மாண்வன் பரபரப்புடன் இருக்கின்றபோதே மேலான ஞானத்தை அளிக்கின்ற ஒளியை ஆசாரியன் சகசிரதளத்தில் பொருந்தித் தியானைத்துச் சிதறும் மாணவனின் சிந்தையை நிலை பொறுத்தி தன்னுடன் பொருந்தும் மாணவனுக்கு உபதேசத்தை அளிக்கலாம்.
1693. நீ அடைந்தால் நல்ல குருவை அடைக. அவரிடம் உன் உடைமையாய் உள்ள பொருளையும் உடன் உடலையும் உயிரையும் காணிக்கையாகத் தருக. எவ்வளவு காலமும் இடையீடு இல்லாது அவர் காட்டிய வழியில் நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே உண்டாகும்.
1694. சுவாதி நட்சத்திரம் விசாக நட்சத்திரம் ஆகிய இரண்டும் விருச்சிக கடகமும் ஆகிய இரு ஓசைகளும் உபதேசத்திற்குரியதாக்ச் சொல்லப்பட்ட நாட்கள் அக்காலத்தில் குருமுகமாய் உபதேசத்திற்குரியவனை என்ற முறைமையை உணர்வதன்றி இதற்குரிய காரணமும் முதலும் அறிய இயலாது.
1695. நல்ல குருவினது உபதேசத்தைப் பெற்ற பெரிய மணியை போன்ர தூய சிந்தனையில் ஒளியுடைய இறைவன் எழுந்தருளிய போதே விருப்பம் உடையவரின் வலிமை மிக்க வினையானது நீங்க இறைவனின் திருவடி எனும் நாத உணர்வு அருளைப் பெறலாம்.
1696. சத்துவ குணம் உடையவனாய்ச் சிவத்தை தியானித்து ஆத்திகர்களால் ஏற்கப்பட்ட ஏதேனும் ஒரு துவைத நெறியைப் பின்பற்றியவனாய் வினையால் தொடரப்பட்ட பிறவிக்கு அஞ்சி மேன்மையுடைய அறநெறியை ஏற்பவன் நல்ல பக்குவம் வாய்ந்த மாணவன்.
1697. உலகில் நிலை பெற்றவனாய் அழியாத பொருள் எவை நிலையற்றதாய் உள்ளது எது என சிந்தித்து உணர்ந்து சிவத்தையே சிந்தித்து சிவத்தின் சத்தி பதியப் பெற்று சிவத்தை உணர்ந்த நிலையான பொருளான சிவத்திடம் சிவஞானத்தைப் பெற்றுப் பணிந்து ஆனந்த வடிவமான சிவசத்தியினது விருப்பத்துக்கு ஏற்றபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்பவனே நல்ல மாணவன்.
1698. குருநாதன் சிவபெருமான் இன்று அருள்வான் என குருவின் வடிவைத் சிரசின்மீது தியானிக்க வஞ்சமுடைய பிறவியைக் சினக்கும் அருட்சத்தியால் அருளை அடைந்த ஞானம் உடையவனே குற்றம் இல்லாத மாணவன் ஆவான்.
1699. மாணவன் சிறப்புடைய அனுபவ ஞானத்தில் விருப்பம் கொண்டு இதுவரை உணர்ந்து அறியாத காதல் குருபரனான சிவனிடம் ஏற்பட இதுவரை அமையப்பெறாத ஒழுக்கம் நோன்பு செறிவு அறிவு ஆகிய நான்கும் தன்னிடம் அமையப் பெற்றவன் திருவடி தீட்சைக்குப்பின் ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.
1700. மாணவனுக்கு உணர்த்துவது சத்தி நிபாதம் உடைய வாக்கே ஆகும். பசுக்களுக்கு உதவும் பராசத்தியை நினைத்து ஒன்றோடும் பற்றில்லாத பராபரமான சிவத்தின் எல்லைக்கு மாணவனைக் கொண்டு போய் கிழக்கு தெ’ற்கு வடக்கு மேற்கு என்ற இடங்களில் உள்ள ஐந்து முகங்களை விழிப்படையச் செய்யுங்கள்.
1701. குருவின் திருவடிகளை வணங்கி ஐந்து வகையான வணக்கங்களைச் செய்து ஆன்மாவின் குறையைச் சொல்லி அழியாத குணத்தை அளித்திடும்படி வேண்ட சிறைப்பட்ட உடலையே உண்மை என்று நம்பியிருக்கின்றவன் அகண்ட சிவம் ஆவான். என்பதை உணர்ந்து சில அறிவுடன் ஆன்ம அறிவும் ஒன்றாக்கும் வழியை அறிவிப்பவர்களே சன்மார்க்க உபதேச குரு ஆவார்.
1702. ஆசையை விடும் நெறியே வேதாந்த நெறி ஆதலால் உ;லக வாழ்க்கைக்கு ஏற்றபடி புலன் வழிச் செல்லும் பொறிகளை மாற்றி சித்தாந்த நெறியிலேபோய் விருப்பத்தை விடும் சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்கும் தலையை உடையவனே நன்கு பக்குவம் பெற்ற மாணவன்.
1703. சத்துவ குணம் உண்மை அருள் ஆராய்ச்சி அறிவு தாழ்வு குருவின் திருவடியை நீங்காமை உண்மையான் பரஞானத்தை சிந்தித்து தெளிந்து அறிதல் அற்புதம் உண்டாதல் ஆகிய தகுதியுடைவனே பக்குவம் உடையவன்.
####
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
அபக்குவன்!
1680. அறிவால் அறியாமையைப் போக்கும் குருவை ஏற்றுக் கொள்ளார். அறியாமையை நீக்காத குருவை ஏற்பர். இது எத்தகையது என்றால் குருடன் ஒருவன் மற்ற குருடனுடன் சேர்ந்து குருட்டுத்தனமான ஆட்டம் ஆடி இருவரும் அறியாமை குழியில் வீழ்வதைப் போன்றதாகும்.
1681. மானிடர் நினைப்பவை எல்லாவற்றையும் பிரதிபலித்துக் கொண்டிருப்பது காரண உடல். எண்ணங்கள் நிறைந்த மனம் உடையவர் காரண உடலின் நிழலைக் கூட அணுகமாட்டார். எண்ணங்க:ளால் உண்டாகிய வினைப் பயன்களை மாற்றவும் அறியார். அறியாமையால் மீண்டும் காமவழியை விரும்பிபோய் எண்ணங்களைப் பெருக்கி கொள்கின்றனர்.
1682. மக்கள் ஏய் எனக் கூப்பிட்டால் என்ன என்று கூட விடை கூறமாட்டார். உலகத்தின் இயல்பு இது. குழந்தையின் வாயில் தாயின் மார்பகத்தை வைக்கப் பால் சுரக்கும். தாயின் மார்பில் எவ்வாறு பல் சுரக்கின்றது என்பதை நம்மவர் அறிவதில்லை. அமுதம் ஊனில் அளித்து உயிரை நிலைக்கச் செய்பவன் உருவம் இல்லாத சிவனே ஆகும்.
1683. உறுதியும் பெருந்தன்மையும் உடையவளே. வாய் ஒன்றைச் சொல்ல மனம் வேறொன்றை எண்ண நீ பிறிது ஒன்றைச் செய்யாதே. முக்கரணத் தூய்மையுடன் இருந்தால் நீ சிவாக்கினியைப் பெற்றவள் ஆவாய் என்பேன், அவ்வாறு தெளிந்தபின்பு என் சொல் பித்தனின் சொல் என யாரும் சொல்லமாட்டார்.
1684. ஐம்பெரும் பாவங்களைச் செய்பவரை அஞ்சும்படி தக்க சமயத்தில் அறிந்து ஒரு மன்னன் மிக்க தண்டனை தந்து நாட்டினின்று கடத்தாவிட்டால் நாடானது வறுமைக்குள் சிக்கி முற்றிலும் பாழாகும்.
1685. தவத்தை மேற்கொண்டவர் தாம் அனுபவிக்கும் கன்மம் சிவத்தினால் அனுபவித்துக் கழிப்பதற்காக அமைக்கப்பட்டது. தேவரும் இதை அறியமாட்டார். தவத்தில் நிலையாய் நின்று அறியாதவர் எல்லாம் பிறவித் துன்பத்தில் அகப்பட்டு வருந்துவர்.
1686. பிறரிடம் சினம் கொள்ளுதல், எதையாவது சிந்தித்தல், செயல்களைச் செய்தல், தின்னுதல், சுவைத்தல், மற்றவர்க்குத் தீமை செய்தல், குறைவு, நிறைவு படுதல், தன் பெருமையைச் சொல்லுதல் இந்த ஒன்பதும் இறைவனிடம் அன்பு கொண்டவர்க்குகு கூடாதவையாம்.
1687. அபக்குவிகள் தங்களுக்கு அனுகூலமானதை அறியமாட்டார். பரமாகாயத்தை காணமாட்டர். தமக்கு அனுகூலமான பர வெளியில் தம் பார்வையைச் செலுத்த மாட்டார். பக்குவம் அற்றவர்களே காவலோடு உள்ள கண் இமைகளை வெளி நோக்கிலிருந்து தடுத்து நிறுத்துங்கள். அக நோக்கத்தை நோக்குங்கள். தொடர்ந்து வரும் இடையற்ற தவிர்க்கும் ஒளியாய் சிவம் உங்களுக்கு இருக்கும்.
1688. அனாதி காலம் முதல் ஆன்மாவுடன் கட்டப் பெற்றது ஆணவ மலம். அதை மாற்றும் வழியை உண்டாக்கி மலக்குற்றம் நீங்க முத்தியில் விருப்பம் உடையவனாகி உலக இயலில் மாறுபட்டு உண்மையான பொருளை நாடி மேன்மையை அடையாதபடி மனஉறுதி இல்லாதவனுக்கு ஞானத்தை தரக்கூடாது.
1689. ஆணவம் முதலிய ஐந்து மலங்களையும் நீக்கும் வகையை ஆராய மாட்டான். பொய்கலந்து பேசுபவன் பிறப்பு இறப்புகளுக்கு அஞ்சாதவன். இந்த இயல்பினன் மாணவனாய் ஏற்க்கத் தக்கவன். அல்லன் என்று விலக்கத் தக்கவன் ஆவான்.
#####
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
ஞான வேடம்!
1668. உண்மையான சிவஞானம் இல்லாதவர் உண்மையான சிவ ஞானியரைப்போல் கோலம் தாங்கினால் நாதத்தை அடைவர். உண்மையான சிவஞானம் உடையவர் சிவஞானியர்க்குரிய கோலத்தைக் கொள்ளாது இருப்பினும் நல்ல முத்தர் ஆவார். சிவஞானப்பேறு உண்டாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் சிவபெருமானிடம் என்றும் நீங்காத பேரொளியை உடையவராய் இருப்பர்.
1669. இழிவான ஞானம் உடையவர் கோலத்தை தாங்கியும் அதனால் பயன் ஏதுமிலை. நல்ல ஞானம் உடையவர் இறையருளில் தோய்ந்து கோலம் ஏற்பதில் கருத்தின்றி இருப்பர். திரிபு உனர்வு கொண்டவர் சமய் காழ்ப்பு கொண்டவர் ஆகியோரிடம் பின் அனுபவ ஞானம் உடைய ஜானியர் வாதிட விரும்பமாட்டார்.
1670. ஆராயின் சிவஞானியர்க்கும் சிவயோகியர்க்கும் பயனில்லாத புறச்சாதனைகள் தேவையற்றவை. அவர்க்கு திருநீறு உருத்திராட்சம், சடைமுடி, ஐந்தெழுத்து எனும் நான்கு புறச் சாதனங்களும் வீணே. உவமை கூற இயலாத பொருளை உள்ளே பொருத்தி வாழ்வர்.
1671. செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கின்ற நாய்போல் சுற்றித் திரிவார்கள். கழுகு போல் ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள் சிவஞானியரோ ஐம்பொறிகளும் உடம்பு அனுபவத்திற்கு ஏற்றவையாக இருந்தும் இன்பங்களை விரும்பாமல் இறந்தவரைப் போல் திரிவர்.
1672. திருவருளால் முனைப்பின்றி அதன்வழி இயங்கும் சிவமெய்யுணர்வு உடையவர் உண்மை அடியார். அத்தகுதி அற்றவர் அடியவர் ஆகார். அவர் அடைந்த சிவக்கோலமும் சிறந்த சிவக்கோலம் ஆகாது. திருவடி ஞானம் பெற்றோரே உண்மை அடியார். அடியார் தன்மையில்லாதவர் ஒருபோதும் மெய்யடியார் ஆகார்.
1673. சிவ ஞானியர்க்கு அழகிய கோலமும் நல்லனவையாகும். தான் கொண்ட கோலத்தின் உட்கருத்தை உணர்ந்து அதன்படி இருந்தால் அதுவே சிவயோகம். அவ்வேடம் ஞானத்தை அளிக்கும் சாதனம் ஆகும். ஞான சாதனம் என்று உணராதவனுக்கு கோலம் மட்டும் பொருந்தும்.
1674. திருவடி உணர்வால் ஞான உ/ணர்வால் சிவன் நிலை அடைபவன் சிவஞானியாவான். நடமாடும் கோயிலினுள் ஒப்ப்பற்ற கோவில் ஆவான். வீணாய் உரையாடாது மோனம் உடையவன். வீடுபெற்ற முத்தன் ஆவான். திருவடிப்பேறு அடைந்த சித்தனும் ஆவான். உண்மைக்கோலம் அற்ற மற்ற தவத்தவர் இவனைப் பேசிட தகுதியற்றவர் ஆவர்.
1675. தன் அறிவு அற்ற தன்மையும் தான் சிவமே ஆகி விளங்குதலும் உலகில் உள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறிகின்றா ஆற்றலும் பக்குவம் வாய்ந்தவர்க்கு பார்வையினாலே அல்லது பரிசத்தினாலே ஞானத்தை வழங்குதலும் பிரண்வ சித்தியும் சிவபதவி அடைந்தவர்க்கு உரியவை ஆகும்.
#####
சிவவேடம்!
1676. சிவனது திருவருளால் அவனுக்கு அடிமையாகிய பொருளான தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்ஒளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிவான அடிமைபூண்ட சிவவேடத்தார் ஆவர்.
1677. உடலில் கொண்ட புறக்கோலங்கள் ஒளிமயமான உயிருக்குப் பயன்படாது. உடலை விட்டு உயிர் பிரிந்தபோது உடலைச் சார்ந்த அறிவற்ற சாதனங்களும் பிரிந்து நீங்கி விடும். உடல் அசத்துப் பொருள். உயிர் சத்துப் பொருள் என அறியாதவர் கடலில் சிக்கிய மரக்கட்டையைபோல் துன்புறுவர்.
1678. ஆணவ மலத்தின் காரியமாவது மயக்கம். அதைவிட்டு அதன் விளைவான இருளையும் அகற்றி உண்மையுள்ள மனம் எண்ணுவதை விட்டு கயல் மீன்போன்ற கண்ணையுடைய பெண்டிரின் கையால் தழுவப் பெறுதலையும் நீக்கி மயக்கம் இல்லாதவருடன் இணங்கித் தமக்கு எனச்செயல் அற்று இருப்பவர் சிவவேடத்தவர் ஆவார்.
1679. மானிடரே பிராண வடிவமாய் உங்களிடம் ஓடுக்கொண்டிருக்கும் குதிரையை கடிவாளம் கைபிடித்து நிறுத்துங்கள்.. கோலம் மட்டும் கொண்டு என செய்வீர். வீண் கோலத்தை கைவிட்டு தலைவனான நந்தி தங்கியுள்ள குருமண்டலத்தில் மனத்தை வையுங்கள். நீங்கள் தேடும் இன்பப் பொருளான சிவத்தை அடையலாம்.
#####
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
தவவேடம்!
1661. தவத்தில் சிறந்து விளங்குபவரே முதன்மையான கோலம் கொண்டவர். பொய்யான கோலத்தைப் பூண்டவர் கொடுமையான கொலை செய்யும் கொடியவர் ஆவார். கீழான செயலையுடையவர் அக்கோலத்திற்குப் பொருத்தம் இல்லாதவர். அக்கோலம் தவத்தால் சிறந்தவர்களின்றிப் பொருந்தாது.
1662. சிவக்கோலம் கொள்வதற்கு உரிய வற்றில் சிறந்தது திருநீறு. காதில் அணிவது தாமிரத்தால் ஆன குண்டலம். கழுத்தில் அணிவது உருத்திராக்க மாலை. இவை வேத ஆகமங்கள் அறிந்தார்க்கு உடைய அடையாளாங்கள்.
1663. சிவயோகிக்கு உரியவை உள்ளாடை கைப்பை, மயில் இறகால் ஆன குல்லா.
சுற்றிய சடை. உடல் முழுவதும் அணியும் திருநீறும் கையில் மண்டையோடு. கையில் பிடிக்கும் கோல் ஆகிய கோலத்திற்குரியன ஆகும்.
1664 .செவியணியான குண்டலம், கழுத்தில் அணியும் உருத்திராட்சம், சிவசிவ என்ற ஒலி, ஊதும் வெண்மையான சங்கு, ஆறுகட்டி, மண்டையான சட்டி, குற்றம் இல்லாத பாதக்குறடு. சிவயோகத்திற்குரிய இருக்கை, குற்றமில்லாத யோகப் பட்டம், யோக தண்டம் என்ற பத்தும் சிவயோகியர்க்குரியவை.
#####
திருநீறு!
1665. பூண்நூல் சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அவற்றின் உண்மை இயல்பை மூடர்கள் அறியமாட்டார். பூண்நூல் என்பது வேதாந்தத்தை உணர்த்துவது. நுண்மையான குடுமி என்பது வேதாந்த் ஞானத்தை புலப்படுத்துவது. சிவபெருமானிடம் ஒன்றிய தனமை உடையவர் பரமும் உயிரும் ஒன்றாகும் என்று இருப்பர். ஒன்றாகாமல் நின்றவர் ஓ காரம் உச்சரித்தால் ஒன்றாவர்.
1666. எலும்பு மாலை அணிந்த சிவன் பூசும் கவசத் திருநீற்றை அதன் ஒலியானது கெடாமல் பூசி மகிழ்சி அடைந்தால் முன் வினைகளும் உங்களிடம் தங்காது. சிவகதியும் உங்களை வந்து அடையும் ஆனந்த மயனான திருவடியை அடையலாம்.
1667. அரச மரம், ஆலமரம், அத்தி மரம் ஆகியவற்றின் சமித்துகள் வேள்வித் தீயில் பொருந்தி உருவம் மாறித் திருநீறாகும். மலம் அற்றவனான சிவத்தின் திருவடியை உணர்ந்து அணுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் உருவமும் மாற்றம் அடைந்து இறைவன் தியானத்தால் உய்ர் குலத்தவர் ஆவர்.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
அவவேடம்!
1655. ஆடமபரத்துடன் சோறு உண்பதையே பயனாகப் பயனில்லாத கோலங்களைப் பூண்டு உலக உயிர்களை மயக்கும் அறிவற்றவர்களே! பொய்யான கோலங்களை கைவிட்டுச் சிவனை நினைத்து ஆடி பாடி ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்வுடன் பிதற்றி சிவபெருமானின் திருவடிகளைத் தேடிக் காணுங்கள்.
1656. சிவஞானமில்லாதார் தவத்தை மேற்கொண்டு இந்த நாட்டில் இழிவான செய்கைகளைச் செய்து பிச்சை ஏற்று உயிருடன் வாழ்ந்தாலும் அந்த நாடானது பெருமை குன்றும். இழிவுடைய அவரது கோலத்தை அகற்றுவது இன்பம் தரும்.
1657. இன்பம் துன்பம் என்ற இரண்டும் நாட்டு மக்கள் செய்த நல்வினை தீவினையால் அந்நாட்டிற்கு தகும் என சொல்லுவர். மன்னன் இதனை ஆரய்ந்து நாள்தோறும் நாட்டில் பொய்க்கோலம் கொண்டவரை வழிப்படுத்தினால் நாடு நலம் அடையும்.
1658. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் மேனமை அடையும் பொருட்டு கோலம் கொள்வர் வழிவழி அடிமை செய்யும் குலத்தவர் தெய்வநிலை எய்துவதன் பொருட்டு கோலம் கொள்வர். பழிக்கக்கூடிய செயலைச் செய்யும் குலத்தே தோன்றி பாழான சண்டாளர் கோலம் பூண்டால் கழிக்கக்கூடிய குலத்தவர் ஆவர். இத்தகையவர் நீக்கத்தக்கவர் ஆவர்.
1659. பொய்யான கோலத்தைப் பூண்டு தவம் செய்பவர் நரகத்திற்குப் போவர். பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகமாட்டார். பொய்யான தவமானது மெய்த்தவத்தைப் போன்று உலக இன்பங்களை அளிக்க வல்லது. ஆயினும் உண்மை ஞானத்தினால் மட்டுமே தவத்தின் பயன் கைகூடும்.
1660. வயிறு நிறைய உண்பது ஒன்றையே எண்ணிப் பொய்யாய் தவம் பூணுவர். உண்மையாய் தவ வேடம் பூண்டவர் உயிர் உடலை விட்டு நீங்காமல் இருக்கப் பிச்சை ஏற்பர். பொய்யான் கோலத்தை மெய்யான கோலம்போல் கொண்டாலும் கோலத்தில் உண்மை மேன்மையானவற்றால் அதுவே அவருய்ய பெருவதற்குரிய கோலமாகும்.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
அருளுடைமையின் ஞானம் வருதல்!
1645. சிவபெருமானின் அருளானது உண்டாகுமானால் நல்ல செல்வம் உண்டாகும். சிவபெருமானின் அருள் உண்டானால் நல்ல ஞானம் உண்டாகும். சிவபெருமான் அருளில் பெருந்தன்மையுண்டாகும் அவர் பெருந்த்ய்வம் ஆகும்.
1646. சரியை வழி நிற்பவர் தமிழ்நாடும் அதைச் சுற்றியுள்ள கன்னடம் மலையாளம், துளுவம் தெலுங்கு ஆகிய மண்டலங்களில் உள்ள பதிகளை அடைந்து வழிபடின் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என் எண்ணி அலைந்து திரிவர். இந்த உண்மையை தம் உடலில் உணர்ந்து ஒரு பொருளான சிவமே பலசக்திகளாக இருக்கின்றது என அறிந்து எங்கும் போகாமல் இருந்த இடத்திலேயே சிறந்த வழிபாட்டை ஆற்றிப் பெரும் பய்னை அடைவர்.
1647. உலகில் புண்ணியம் பாவம் என இரண்டு உள்ளன. அவை வினை காரணமாக இன்ப துன்பமாய் பொருந்துகின்றன் என்று உணர்வார் சிவஞானியர். உணர்ந்து இவற்றுக்குக் கார்ணமான வினை வேரினை அறுத்து அண்ணலை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
1648. வினைகள் முடியும் காலத்தில் சிவம் தன் சத்தியை ப்திப்பித்து ஆள்வான். அந்த நிலை வராத இடைக்காலத்தில் உயிர்க்கு உயிராய் நின்?று வினைகளை தூய்க்கச் செய்யும். உயிர்க்குப் பின் நின்று பிறவியை நீக்கும், அவன் முன் தோன்றி வீடு பேற்றை அளிப்பான்.
1649 சிவத்தின் அருள் பதிவதால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சில்லர் அவன் அருளால் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் வினை சேராது. சிவனருள் பற்றிச் சொன்னால் சொன்ன மூவரும் சிவவுலகத்தார் ஆவர்.
1650. புண்ணியத்தின் பயன் ஆனவனும் என் தந்தையுமாகிய சிவத்தின் விந்து நாதமாகிய இரு திருவடிகளைப் பொருந்திய போது விளக்கொளிபோல் ஞானம் விளங்கும். ஞானியர் ஆவதும் விண்ணுலகில் தேவ வடிவில் விளங்குவதும் அண்ணலான சிவனது அருளைப் பெற்றபோதே ஆகும்.
1651. உடல் என்ற தேரில் ஏறி மனம் என்ற பாகன் இயக்க அழியும் தத்துவ உணர்வுகளில் தலைப்பட்டு மயங்கும் உயிர்கள் உணர்வில் விளங்கும் ஒலி மண்டலத்தில் அமர்ந்து மலம் அற்ற சதாசிவ குருவின் அருளைப் பெற்றால் அடியவ்ர் கூட்டத்தில் ஒருவனாகி சிவ வடிவு அடையலாம்.
1652. சீவன் உலக ஞானத்துடன் பிறந்தால் எடுத்த உடலிலேயே சிவவுலகு சேரும் அரிய தவத்தை நாடுவர். சிவவுலகத்தில் சிவன் அடியை அடைவர். சிவ உலகத்தில் சிவ சத்தியின் ஆற்றலை அடைவர்.
1653. பகலவனைக் கண்ட சூரிய காந்தக்கல் தீயின் வடிவம் ஆகும். திங்களைக் கண்ட சந்திரக் காந்தக்கல் முத்தினைப் போன்ற நீரின் வடிவம் ஆகும். சக்கியுடன் மோதும் முக்கியைக் கொண்ட சக்கி முக்கித் தீயை உண்டாக்கும் தீயின் வடிவம் ஆகும். அக்னிமண்டலத்தை தன்னகத்தே கொண்ட சிவன் அக்கினித் தன்மையை விட்டு அழகிய சந்திரன் ஒளிமயமாய் இருப்பான்.
1654. நான் தேடும் உறவாய் குருநாதனான சிவத்தை பொருந்தி தேடுவேன். சிவபெருமான் என்று கூடுவேன். கூடி ஒலிக்கும் திருவடிக்குச் செல்வதற்கு உடலை விட்டு உயிரைப் பிரிந்து அறிகின்ற வரையிலே விடமாட்டேன்.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
தவதூடணம்!
1633. உயிர்க்கு உயிரான பொருளை உள்ளே கண்டபின்பு கற்று அறிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. உண்மைப் பொருளான சிவத்தை உடலில் கண்டால் அன்பு செலுத்த வேண்டியதில்லை. தன்னை மறந்த சமாதி நிலை கிட்டிய பின் இறப்பதும் வேண்டியதில்லை. உள்ளத்தைப் புலன் வழிப் போகாது தடுத்து நிலை நிறுத்தும் ஆற்றல் உடையவர்க்கு மற்ற இடங்கள் சென்று தவம் செய்ய வேண்டியதில்லை.
1634. மெய்ப் பொருளை உணர்த்து, நூல்களின் கருத்துக்களை உணர்ந்து அடங்கினால் கற்க வேண்டிய தேவை இல்லை. மெய்ப்பொருளை அறிந்து சிவத்துடன் கூடினால் நாத சம்மீயமும் வேண்டியதில்லை. இப்படி நிற்பவர் உள்ளம் அசுத்தம் இல்லாமையால் தூய்மை செய்யும் செயல் வேண்டா. சித்தம் எண்ணுவதை விட்டபோதே சித்தமும் வேண்டியதில்லை.
1635. தவத்தின் பயனை அறிபவரே உண்மையான தவத்தைச் செய்பவர்கள் ஆவார்கள். இத்தன்மை வாய்ந்தவர்களே உண்மையை அறிந்து மாணவனுக்கு எடுத்துச் சொல்லும் உண்மையான குரு ஆவார்கள். விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சிறந்தவர்கள்.
1636. திருவருளுடன் கூடி நிற்கும் தவத்தைச் செய்து ஒலிக்கும் நாத வடிவான திருவடியை கண்டேன். நீண்டகாலம் அந்நிலையிலிருந்து தேடிச் சிவசத்தியை அடைந்தேன். பொறிகளை தன்வழிப்படுத்தி ஒடுங்கி நிற்பதே தவம். மாறுபட்டு பொறிகள் வழி மயங்கிய் உயிர்கள் எத்தகைய தவம் உடையவர்.
1637. உள்ளத்தில் சங்கற்பத்தால் ஆன பெரிய கடலாய் உள்ள ஏழினையும் கடந்து தவத்தவர் வழி சார்ந்து அவரோடு இணங்கியிருப்பவர் பிறப்புக்கு வரமாட்டர். அத்தவம் உடையவர் ஏவலைக் கேட்டு நடந்தால் சிவத்தை தன் முகத்தின் முன் கண்டு சிவப்பேறு அடையக்கூடும்.
1638. உள்ளம் என்ற உறைக்குள் உள்ள ஞான் வாளை உருவி செருக்கு சினம் முதலியவற்றை அறுத்து உலகியலை விட்டுச் சிவத்துடன் வேறுபாடின்றிப் பொருந்தி ஞானேந்திரியங்கள் ஐந்தும் வெளிச் செல்வதை தடுத்தால் தவத்தில் காணும் சிவ ஒளி தன் ஒளியாகும்.
1639. சீவர்களின் அறிவில் பொருந்தி இருப்பவனை உணர்வது சிவபத்தியை ஏற்படுத்தும். அடியவர் நாள்தோறும் தொழுவதால் வீடுபேறும் கிட்டும். உலகியல் நோக்கை வெறுப்பவன் என்று சொல்லை உண்மையாக்குவதே தவம்.
1640. இலைகளை எடுத்து மலரைப் பறித்தும் இறைவனுக்கு ஆகும் என எண்ணி மாலை கட்டிக்கொண்டிருந்தேன். வான் கங்கையான ஒளியைக் காணவில்லை. மூலாதாரத்திலிருந்து சிரசுவரை செல்லும் சுழுமுனை நாடியைப் பார்த்து எனது உள்ளம் அடங்கியது. சிரசில் சந்திரக்கலை இருக்குமாறு செய்து தவத்தின் பொருளை உணர்ந்தேன்.
1641. இறைவன் படர்ந்த ஒளிக்கிரணத்தையுடைய அன்பர்க்கு துன்பம் வராத வண்ணம் காத்தருள்வான். துன்பம் வராதபடி செய்தவரின் தவத்தை ஆராய்ந்து உடலை மீண்டும் பெருமை சேர்ப்பது அவரது மன ஒருமைப்பாட்டால் ஆகும்.
1642. நூலைக் கற்று அறியாமல் பொறுமையுடன் தவம் செய்யாதவர் வயிற்ற்குக்கு உணவு தேடி வருந்தி அலைவது ஆற்றில் உள்ள முதலைக்கு அஞ்சி ஓடி அண்மையில் குட்டியான கரடிக்கு முன் அடைந்து வருந்துவதைப் போன்றதாகும்.
1643. சிவயோகத்தால் சிவக்கனி பழுக்குமாறும் அதை உண்ணுமாறும் உயிர் பலமுறை உலவுகின்ற உடம்பில் உயிர்காற்றை சுழுமுனையில் நிறுத்த வல்லார்க்கு மூச்சு இயங்கும் தன்மை கெட்டு மேல் முகமாக இருக்கும் சகசிரதளத்தில் ஒன்றி நின்றுவிடும்.
1644. சித்தம் இடைவிடாமல் சிவத்தை நினைத்து சிவமாவர்க்குச் செய்ய வேண்இய தவம் ஒன்றும் இல்லை. சித்தம் சிவமாகியவர் உறவு உண்டானால் அவர்களின் சித்தம் சிவமாய் சித்தியும் முத்தியும் உண்டாகும். சித்தம் சிவமாவது முன் தவத்தின் பயனாகும்.
#####
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
தவம்!
1624. சிவத்திடம் உள்ளத்தை வைத்து நிலைபெற்ற உத்தமர்களின் உள்ளமானது உலகத்தில் உள்ள எந்த துன்பத்தைக் கண்டும் நடுங்குவதில்லை. அன்னார்க்குத் துன்பமும் இல்லை. இரவு பகல் என்ற வேறுபாடும் இல்லை. பிற பொருள் மேல் பற்று விட்டவர்க்கு விளையும் பயன் வேறு ஒன்றுமில்லை..
1625. அரிய உடலோடு சேர்ப்பதன் பிறப்பும் அது உடம்புடன் கூடி அனுபவிப்பதற்கு இடமான உலகப் படைப்பும் சிறப்பான தவத்தின் மேன்மையும் சிவபெருமானின் அருள் பெற்றவர்க்கு அல்லாமல் பெருந்தவத்தில் நன்மை அடைய மாட்டார்.
1626. பலவகையில் பொருளைமட்டும் முயற்சியின்றி பிச்சை எடுக்கும் மனிதர்கள் பிறப்பின் நோக்கத்தை அறிய வில்லை. இறைவனை மறவாமல் பெருந்தவத்தைச் செய்பவர் இப்பிறப்பில் சிறப்பான செல்வத்தை பெறுவர். மேலும் பிறப்பை நீக்கும் பெருமையையும் அடைவர்.
1627. தனியாய் இருந்து சிவப்பேற்றை அடைய அரிதில் முயன்று தவத்தை செய்யும் உள்ள உறுதி உடையவர் உள்ளத்தை மாற்ற வேண்டும் என்று இந்திரனோ மற்ற தேவர் யார் வந்தாலும் மயங்காமல் தம் மனத்தை சிவத்திடம் உறுதியாக வைத்திருப்பர்.
1628. பக்குவம் பெற்ற ஆன்மாக்களால் விரைவாக தொழிற்படும் வெண்மையான மதியில் விளங்குபவன் தவம் அற்றவர்க்கு மறைந்தும் தவம் உடையவர்க்கு வெளிப்பட்டும் இருப்பான். அகக் கண்ணுக்கு அல்லாது புறக் கண்ணுக்கு தோன்றுவான். பரவிய ஒளித்திரை உடையவன். பசிய பொன் போன்ற நிறம் உடையவன். அரிய தவம் உடையவர்க்கு அல்லாது மற்றவர் அனுகமுடியாதவன்.
1629. உயிர்கள் பின்னால் அடைய வேண்டிய இன்பப் பிறப்பை முன்னே நியதியாய் வைத்த முதல்வன் இறைவனை உயிர் தன்னை அறியப் போகும்போது தானே வந்து சேரும். உயிர்க்குத் தலைவனை அடையச் செய்வது மன உறுதி ஆகும்.
1630. த்ன்னையும் தலைவனையும் கண்ட தவத்தவர், அமைச்சும், யானைக் கூட்டமும் அரசும் பகைத்து எழும் போரின் நடுவிலும் திருவருளில் அமைந்த ஞானமும் அதனால் பெற வேண்டிய அன்புப் பொருளான சிவத்தையும் நோக்கி இமைக்காமல் நிலைபெற்றிருப்பர்.
1631. சாத்திரம் படித்துக் கொண்டு பெருமை அடைவதை விட்டு ஒருக் கணப்போதாவது புறத்தே போகும் உள்ளத்தை தடுத்து உள்ளத்தே நோக்குங்கள். உள்முகப் பார்வையானது பசுமையான மரத்தில் அடித்த ஆணிபோல் பிணித்த பிறவியானது தனது பிணிப்பினின்று நீங்கிப் போய்விடும்.
1632. ஞானம்பெற தவம் தேவை. ஞான சமாதி கூடியபின்பு அதற்குரிய சாதனை வேண்டியதில்லை. இல்லறத்திலிருந்து யோகம் செய்பவர்க்கு சமாதி பெறுவதற்குரிய தவம் தேவையில்லை. நான் தவம் வேண்டா எனச் சொல்லும் உண்மையை உலகத்தார் அறியார்.
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
துறவு!
1614. சிவன் பிறப்பு இறப்பு என்ற தன்மைகள் நீக்கி உலகத்து இன்பங்களை இயல்பாகத் துறக்கின்ற தவத்தை அருளிச் செய்த ஒளிவடிவானவனை மறவாதவராய் தினமும் நாத வழிபாடு செய்பவர்க்கு சிவவுலகம் அருள்வான்.
1615. வினையின்படி பிறந்தும் வினை நீக்கிய வழி இறந்தும் பலவகைப்பட்ட அறியாமையால் செய்வன் விலக்குவன மறந்து அறியாமை நீங்க அறியாமையில் மறைந்து அறிவில் சிறந்த சத்திபாதம் உண்டான காலத்துப் பற்றுகளைத் துறந்து உயிர்க்குச் சோதியாய் இருக்கும்.
1616. நியதியை உடையவன் அநாதியானவன் அதனால் தனியன் அவன் தங்குமிடம் எல்லாத் தத்துவங்களும் சுட்டெரிக்கும் இடம். அவன் என்பது சிவபேதம். அவன் துறவி என்பதை அரிந்து கொள்ளுங்கள். பற்றுகள் நீத்தவனையும் பிறவியை ஒழிக்கும் பித்தர் ஆவார் என்பதையும் தெரிந்து கொளக.
1617. அநாதியான இறைவன் உயிர்கள் அடைய வேண்டிய நெறியையும் நெறிஞ்சில் முள் போன்ற ஒதுக்கித் தள்ள வேண்டிய செயலையும் படைத்திருக்கின்றான். அறவழியில் நில்லாமல் தவறுமாயின் நெஞ்சில் முள் குத்துவதைப் போல் துன்பத்தை அடைவர். ஆனால் அறநெறி தவறாது நடக்க வல்லார்க்கு வழியிலே உள்ள் நெஞ்சில்முள் குத்துவது போன்று துனபங்கள் ஏற்படாது.
1618. நான் அசைந்தாச்டிக் கொண்டிருக்கும் ஒளி மண்டலத்தில் இறைவனின் விந்து நாதமான திருவடிகளை என்றும் பிரியாமல் கூடும் தவம் செய்த கொள்கையுடையவன். ஆகவே அறத்தால் வரும் கேட்டையும் அறத்தால் செய்யும் கடமையையும் உணர்ந்திருப்பதால் ஐம்புல ஆசையால் விளையும் பயனுக்கு ஆட்பட்டவன் அல்ல.
1619. ஞானப் பயிற்சி மேற்கொண்டவன் மேலும் மேலும் சாதனையை விரும்பிச் செய்ய வானமண்டலம் இருக்க அதில் ஞான சாதனையால் பொருந்திய நீலோற்பல ஒளி கண்டு ஞானசாதனை செய்தவன் இது அருள் ச்த்தியின் ஒளி என்று உண்ர்ந்து மேலும் சாதனையற்று அருளில் நாட்டம் கொண்டு இருப்பான்.
1620. இயல்பாகவே பற்றும் வெறுப்பும் அற்றவன். காலத்தை கடந்தவருக்கு அவன் நண்பன். அவன் எல்லாவற்றையும் உடையவன் ஆதலால் ஆசையில்லாதவன். அஞ்ஞானமான இருளைவிட்டு ஓளி பெறுபவர்க்கு தன் நெற்றி விழியினால் அருள்பவன். பூமி தத்துவம் என்கின்ற பால் உணர்ச்சியை துறந்தவர்க்கே தன் திருவடியை அளித்தருள்வான்.
1621. பாம்பு ஒன்று அதற்கு படம் ஐந்து அது அனுபவிக்கிற போகம் நான்கு. அது புற்றுக்குள் பொருந்தி நிறைந்திருக்கின்றது. அதற்கு உரிய இரண்டு உடல்களிலும் படம் விரித்து ஆடுவதை விட்டு ஒரே படமாய் செய்து உடலை இட்மாய் கொண்டு கிடக்கும்.
1622. ஆதியை உடைய சிவன் உறவு மேற்கொண்டவர்க்கு முதல்வன் துறவு ஆகாதவரைப் பிறவியில் விடுபவன். இவன் என சுட்டி அறியும் எளிமை உடையவன் அல்லன். சிவந்து திருவருளே பக்குவத்துக்கு ஏற்ப பலப்பல உயிர்களிலும் நிறையும். அவன் செய்யும் நன்மைகள் வரும் வழி நம்மால் அறிய இயலாது.
1623. உடலைக் கடந்தபோது கண் முதலான் ஒன்பது வயில்களால் வரும் அறிவு விடுபடும். சந்திர மண்டல்த்தில் அமைந்த தொனியில் சம்மியம் செய்த போது உடலான சட்டையின் அனுபவம் முடிந்தது. உலகம் இனிமையான நிலையினின்று மாறிக் கசந்தது. உடலைச் செலுத்திய ஆன்மா சிரசில் தலைவன் வாழும் மேல் முகமாய் இருக்கும் சகசிரதளத்தில் இருக்கும்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
ஞாதுரு ஞானஞேயம்!
1605.. என்றும் நீங்காத சிவானந்தம் ஆன சிவத்திடம் பொருந்தியிருங்கள். ஆணவ் மலம் அறிவை மறைக்காது. மறைப்பினும் தன் முனைப்பு நீங்கி சிவானந்த நிலையில் நிற்க எப்போதும் தன்னைவிட்டு நீங்காத பேரின்பமான அமுதத்தில் நிலை பெறலாம்.
1606. அறியப்படும் பொருள் சிவம் என்று துணீந்து அந்த நெறியில் நிற்ப்பவர்க்கு ஞானத்திற்குரிய எல்லாம் பொருந்தி இருக்கும். அறியப்படும் பொருளான சிவத்தை ஆன்மா அறிந்து அதுவாகவே அமைவது வீடு ஆகும். நேயப் பொருளான சிவத்தைப் பிரியாத சத்தியை உண்ர்ந்தவர் இதனால் ஏற்பட்ட மெய்ஞான அறிவை அறிந்தவர் ஆவார்,
1607. உண்மைப் பொருள் தான் என ஆன்மாவும் அவன் என்ற சிவமும் ஆகியவை இரண்டு உளது.. தன்னையும் அவனையும் தன் ஒளியில் கண்டு தானாக இருக்கும் சகசிரதள உண்ர்வை அவன் இருக்கும் நிமிர்ந்த சகசிர தளத்திற்கு மாற்ரினால் நான் எனவும் அவன் எனவும் வேறுபடுத்திக் கானும் உணர்வு மாறி நானே அவன் எனச் சொல்வது நல்லது.
1608. குருநாதன் தனக்கு உபகாரமாக வைத்த முப்பதாறு தத்துவங்களின் தொழிலையும் மாற்றி என்னை நிலைபெறுமாறு செய்து உலகத்தார் பாராட்டும் வண்ணம் சிவனின் பரப்புள் இருத்தினான். அந்த அனுபவத்தில் நிலை நிறுத்தி சிவமாக்கி ஆட்கொண்டான்.
1609. நந்தி குருநாதன் சிவ தீட்சைக்கு முன் அகண்டத்தை அறியாத அம்மூடரைப் போல் சிவதீட்சைக்குப்பின் சுட்டியறியும் அறியாமையை மாற்றினான். தான் என்/ற ஆன்மாவைப் பரம் என்று ஆக்கித் தத் என்ற பொருளான இயல்பை எனக்கு அறிவித்தான்.
1610. கண் என்ற பொறியால் கானாத காட்சியுடன் செவியாகிய பொறியால் கேளாத கேள்வியும் மறுபடாத சிவானந்தமும் கூடிப் பிரியாத சேர்க்கையும் நாணம் இல்லாத பற்றும் நாதாந்தத்தின் இருக்கும் அறிவும் என்பனவற்றைச் சிவபெருமான் காண்பாயாக் எனக் காட்டியருளினான்.
1611. பிரண்வ யோகத்தை பழகி வந்தவர்க்கு முத்தி கிட்டும். அவர்க்குப் பெருஞ் சித்திகளும் அவர் முன்னின்று தொழில் செய்யும் அன்னார்க்குப் பேசா அனுபூதி பிறந்து சிவபாவனையில் பொருந்தியிருக்கக் கூடும். இந்நிலை பெற்றவர் படைப்பு முதலிய் ஐந்தொழில்களையும் செய்வர்.
1612. சாம்பவி, கேசரி, பைரவி ஆகிய முத்திரையின் காரியம் காண்பவன் காட்சி காட்சிப்பொருள் என்ற மூன்றின் வேறுபாடு அற்றபோது முடிந்தது. அமைந்த இடைகலை பிங்கலை வழியாய்ச் செல்லும் காற்றை உள்நாக்கின் வழி நான்கு விரற்கடை பகுதில் உலவும்படி மாற்றி ஒளிமயமான குருவின் திருவடியில் பொருந்தித் தளைகளை விட்டவர் மீண்டும் பிறந்து இறக்கமாட்டார்.
1613. தவத்திரு பேதங்களில் மேலான விந்து நாதம் சதாக்கியம் ஆகிய மூன்றும் மிக்க சத்தி இருக்கும் அடையாளம் அதுவே முதல் நிலையாகும். இதைப் பற்றியுள்ள பரம ஞானி ஒலிக்கின்ற நடனமே சிவத்துடன் கலந்து தன் நிலைகெட்ட மூலமான பரன் எனக் கூறப்பட்ட காண்பவன் ஆவான்.
#####
More...
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
திருவடிப்பேறு!
1590. மனத்தில் பொருந்தி எழும் அன்பின் வழியே அந்த அனபை ஆதாரமாகக் கொண்டு வெளிப்படும் இறைவன் இறவாத அன்பில் பற்ற சிவந்த ஒளியானது மேல் நோக்கி எழுந்து சிரசில்பட விரும்பிய திருவடி என் உள்ளத்தில் இன்பமாக இருந்தது.
1591. சிவன் திருவருளை அளித்தபோதே பொறி புலன்களுக்கு அடிமையாய் இருந்த எனக்கு ஞானத்தை தந்தான் அவன். ஞானவாளினை எனக்குத்தந்து வீட்டுலகத்தை அளவற்ற காலம் ஆள்வயாக என அருளினான். சுவாதிட்டானத்தில் வந்து அருட்சத்தியை இன்பமாய் என் சிரசில் பொருத்தினான்.
1592. சிவம் வந்து ஆட்கொண்டடு அவனாகச் செய்தபோது நான் சிவ வடிவாய் ஆனேன்.. முன்பு சிவமாய் இருந்த நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் என்ற நான்கு வடிவங்களும் என்னை விட்டு நீங்கின. மற்ற அடையாளங்களான சதாசிவர் விந்து நாதம் சத்தி என்பன என்னிடம் நன்கு இருக்குமாறு செய்து தன் திருவருளை நான் முன்பே அடைந்தவன் என்பதை நிரூபித்தான்.
1593. இன்பத்தை அனுபவிக்கும்போது பேச்சின்றி உணர்வு அழிந்து நான் என்ற் நிலை அறியாமல் தெளிந்த நீரைப் போல் அசைவு இல்லாமல் இருக்கும் சிவமான தன்மையும் கெட்டு நுண்மை முதலிய நான்கு வக்கினால் தோன்றும் நாதத்தை கடந்து எல்லையற்ற தன் வடிவுடன் ஒன்று சேர்த்தான். பிறப்பு இறப்பிற்கு எல்லையான பிரணவத்தை கடந்து விட்டேன்.
1594. தீட்சை அளிக்க வந்த குரு மாணவனின் பரு நுண் காரண உடல்களில் உள்ள தடைகளை நீக்கி உயிரைக் குருவிடம் பொருந்த்ச் செய்து எல்லோருக்கும் தலைவனான சிவத்துடன் மௌனயோகத்தில் பொருந்தச் செய்து ஆட்கொண்டான்.
1595. முன் நிலையில் பொருந்திய குரு மௌனமான பேரானந்தத்தில் என் பசு கரணங்களை அழித்து என்னிடம் அகண்ட அறிவாகிய சிவத்தைப் பதிப்பித்து என்னை நான் அறிந்து கொள்ளாமல் செய்து வெப்பம் இல்லாத சந்திர மண்டல ஒளியில் மனம் வாக்கு காயம் மூன்றையும் கைக்கொண்டு அவற்றால் உண்டான பெருமைகளை அழித்து திருவடிகளைச் சூட்டி என்னுள்ளே நிலை பெற்றான்.
1596. என் ஆன்மாவிலும் பார்வையிலும் என் சிரசிலும் திருவருளைப் பதிப்பித்த குரு கீழ்முகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை மேல் நோக்கி இருப்பதாய் அமைத்தருளினான். விந்து நாதங்களை உணர்த்தி அவை எம்முறையில் தொழிற்படுமோ அம்முறையில் உணர்த்தியருளினார். இடஹி எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல முடியாது.
1597. என் தலைமீது திருவடியைச் சூட்டி அருளுடன் பார்த்து எங்கும் இருக்கும் பெருவுருவத்தை தந்த சிவன் குருவடிவில் வந்த தலைவன் என் மன்னனை பிறவியானது உண்டகும் வழி உலர்ந்து போக அறிந்து கொண்டேன்.
1598. திருவடி ஞானம் என்பது சிவமயமாகும். திருவடி ஞானம் சிவ உலகத்தில் சேர்க்கும். திருவடி ஞானம் உயிரைச் சிறைப்படுத்தியிருந்த மலத்தினின்று விலக்கும். திருவடி ஞானம் அணிமா இலகிமா முதலிய சித்திகளையும் முத்தி பேற்றையும் தரும்.
1599. அமர்ந்த குருநாதன் கீழ்நோக்கும் தன்மையுடைய குண்டலினி சத்தியை மேல் நோக்கும்படி செய்யுமாறு உபாயம் அமைக்காவிடில் பழைய வினைகள் அறியாமையால் மயங்கிய உள்ளத்தை மாயையின் வழிச் செலுத்திவிடும். பால் போன்ற் வெண்மையான ஒளியாய் இருக்கும் மதிமண்டல்த்தில் இருக்கும் சதாசிவம் தன் திருவடியை பதிப்பித்து தன்னைவிட்டு அகலாது நிலைபெற்று இருந்தான்.
1600. கழலை அணிந்த தாமரையில் இருக்கும் திருவடி நிழலை அடைந்தேன். திருமாலும் அறியமாட்டா வெப்பமுடைய அக்கினி மண்டலத்தில் உள்ள உருத்திரனும் உடல் பற்றை அழித்து சுழுமுனை உச்சியில் ஒளியுடைய் சிவமாய் இருந்தது.
1601. முடிமன்னர் என்றால் மூவுலகையும் ஆள்பவர். சிவனடியாரான மன்னர் பெறும் இன்பத்திற்கு அளவே இல்லை. முடிமன்னரான தேவர்களும் இறைவனுக்கு வழிவழி செய்கின்ற குடிமன்னர் ஆயின் குற்றம் நீங்கி நின்றவர் ஆவார்.
1602. நான் என் மன் மண்டலத்தில் இறைவன் திருவடிகளான விந்து நாதங்களை பதிய வைத்துக் கொண்டேன். அதனால் பொய்யை மெய் போல் காட்டி அக்கினியைத் தூண்டி செலுத்தும் புலன்வழி செல்லாமல் உள்ளத்தை மீட்டு நான் படும் இருவினைத் துனப்த்தை மாற்றி மறையின் முடிவான் ஞானானந்தத்தை அடைந்தேன்.
1603. இறைவன் திருவருளைப் பெறலாம். சிவகுருவின் இரண்டு திருவடிகளையும் முனிவர் முடிவில் அறிந்து கொண்டனர். படி முறையிலே அடைந்த பேரின்ப வெள்ளத்தில் குடியாகக் கொண்ட வழியில்கூடி நிற்பவரின் கொள்கை இது.
1604. நினைப்பவனைக் காக்கும் மந்திரமாவதும் பிறவி நோய்க்கு மருந்தாவதும் திருவருளைப் பெறக்கூடிய செயலாவதும் அடைந்தவர் பெறும் புண்ணியத் தலங்களால் ஆவனவும் அழகாவதும் வீடுபேற்றை அளிக்கும் மேன்மையான நெறியாவதும் சிவபெருமானின் இரு திருவடடிகளே.
#####
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
ஆறாம் தந்திரம்!
சிவகுரு தரிசனம்!
1573. பத்தியை ஏற்படுத்தி இறைவனடியை வணங்கச் செய்து பிரணவ உபதேசத்தால் குற்றங்கள் நீங்கும்படி செய்து சித்து அசித்து சதசத்துமான பொருள்களின் உண்மையான இயல்புகளை உள்ளே நின்று உணர்த்தியதால் உள்ளத்தில் உள்ள இறைவனே குருவாவான்.
1574. ஆண்வத்தால் மறைந்து நின்ற் சீவனை மாயாமலத்தைக் கூட்டி ஆணவத்தை நீக்கி உடம்பே நான் என இருந்த ஆசையைப் போக்கி நெருக்கு நேர் நிலை குலையாத முத்தியின் கூட்டுவதற்கு உபகாரப்படுவது உபகாரனின் ஒளிமண்டலத்தில் உருவம் கொண்டிருக்கும் குருவாகும்.
1575. அணிமா மகிமா முதலிய சித்திகள் எட்டுடன் பயிற்சியாளரை சிவம் ஆக்கிய பக்குவ நிலையும் வாமை முதலிய எண்சக்திகளால் கட்டுப்படுத்தாத தூய்மையும் யோகத்தால் ஏற்படும் ஆற்றலும் மந்திரங்களைத் தியானம் செய்வதால் உண்டாகும் ஞானமும் இறைவனிடம் உ/ண்டாகும் அன்பும் ஆகிய அனைத்தும் சிவகுருவின் அருளால் நிகழும்.
1576. எல்லா உலகங்களுக்கும் அப்பால் இருப்பவன் இவ்வுலகத்திலும் இருப்பவனாய் நல்லார் உள்ளத்தில் இருந்து அருளுவதாலும் யாவரும் உய்யுமாறு அருளுவதாலும் அனைவரும் உய்யும்படி இவ்வுலகிலேயே அருள்வதாலும் பிரணவ வடிவாய் உள்ள நல்ல குரு சிவமே ஆகும்.
1577. தேவனும் துய குருவாகவும் இருக்கும் சிவன் நூலகளில் பதி பசு பாசம் என மூன்றாக இருப்பதும் அறிந்து உபதேசத்தால் அழிவில்லாத சிவனின் பாசத்தை நீக்கி குருபரன் அன்பு கொண்டு முத்தியில் யாவையும் அருளவான்.
1578. சிவனே சீவர்களிடம் அருள் கொண்டு குருவாக இருந்து மலக் குற்றத்தை போக்கி அருள்வதை அறியாத அறிவிலிகள் பொய் மிக்க உலக் இன்பங்களிடையே பொருளாய் கண்டறியும் பாசம் பற்றியவர் குருவை நம்மவர் என்று தம்முடன் நிகராக வைத்து எண்ணுவர். ஞானியர் இவன் சிவனே என வணங்குவர்.
1579. ஞானத்தால் பொய்மை நீங்குவதும் பிருதுவி தத்துவத்தின் வன்மையும் சிவமான அப்பொருளின் உதவியும் அறுபத்தி நான்கு கலைகளால் உண்டாகும் மய்க்க அறிவும் அண்ணலின் சக்தியன்றி யார் அறிவார்.
1580. சிவமே சிவஞானியாய் உள்ளான். ஆதலால் தன்க்கு உபதேசம் செய்யும் குருவைச் சிவன் என நினைத்து திருவடியை அடைபவர்க்கு சிவத்தினது நட்பும் நல்ல முத்தியும் அமையும். பிறப்பில்லாமல் மேலான சிவ உலகை அடைவர்.
1581. என் குருமண்டலத்தில் இருக்கும் நந்தி குருவே சிவம் என்றான். குருமண்டலமே சிவனாய் உயிர்க்குத் தலைவனாய் இருக்கின்றது. குரு மண்டலமே வாக்கு உணர்வைக் கடந்து விளங்கும் மன்னன். பெருமை கொண்ட குருமண்டலத்தில் சிவம் உள்ளே இருப்பதை எளியவர் அறியாதவராய் இருக்கின்றனர்.
1582. அன்பர்களிடம் உள்ள சித்த மண்டலம் தன் அறிவிற்கேற்ப எல்லாவற்றையும் நினைக்கும். அருள் சத்தி பதிவு உடையவர்க்கு செம்பொருளே உண்ர்த்துவதாகும். அந்நெறியே சித்தம் முழுமையும் வேறு பொருளுக்கு இடம் இல்லாது சிவத்துக்கு மட்டு இடம் தந்தால் சிவன் அங்கிருப்பான்.
1583. சிவமான தானே இருக்கும் குருமண்டலத்தில் பொருந்துவதால் உண்டாகும் பெருமையை வைத்த நந்தியெம்பெருமானின் குறிப்பை உணர்பவர் இல்லை.. குருமண்டலத்தில் திகழ்பவன் என்று மகிழ்ந்திருப்பவர்க்கு அக்கினி மண்டலத்தில் தான் இருக்கும் மன்னனே ஒப்புயர்வற்ற சிவசூரியன் ஆவான்.
1584. ஞானம் என்ற பேறும் அதன் விளைவான முத்தியும் அதில் மயங்காத அருளும் அஞ்ஞானம் நீங்கும் உண்மைப் பொருளான வேதாந்த ஞானமும் இறைவனின் வடிவாய் அருளாவிட்டால் குருநாதன் மனித உடல் தாங்கி வராவிட்டால் அறிய இயலாதாய் இருக்கும்.
1585. சிவனிடத்து பத்தியும் அதனால் ஞானம் பெறவேண்டும் என்ற வைராக்கியமும் வீடுபேறு அடையச் சாதனங்கள் ஆகும். அவற்றால் சிவமே தான் என்ற எண்ணம் முதிர்ந்து வீடுபேற்றுக்கு காரணமான ஞானம் உண்டாகி அந்த பயிர் சத்தியின் அருளால் எளிதாய் வளர்ந்து முத்தி உண்டாகும்.
1586. உலகத்தில் வீடுபேற்றை அடைவதற்காக உண்டாக்கப்பட்ட இன்பப் பிறவியை முன்பு உதவிய முதல்வனான இறைவனை ஞானத்தால் அடையும் போது அப்பெருமான் என்னிடம் வெளிப்படுவான். என் தலைவனை அடைய துணையானது என் உள்ளமே.
1587. அகண்ட சிவஞானம் தெளியவே நல்ல சித்திகள் உண்டாகும். சிவஞானத்தில் சிறந்து மேலும் தெளிய நல்ல முத்தி கிட்டும். சிவமான ஞானத்தால் சிவம் ஆன்மாவில் நிலைபெறச் சிவமான ஞானத்தால் சிவானந்தம் உண்டாகும்.
1588. நூல்கள் அறிவாலும் அனுபவத்தாலும் இந்த பரந்த உலகங்களை எல்லாம் கண்டேன். சிவத்துடன் பொருந்தி தியானம் செய்து சிவத்தினது அருளைப் பெற்றேன். அறிவற்றவர் கூட்டத்தை விட்டு விலகினேன். அதன் காரணமாய் இப்பிறவியை நீங்கினேன்.
1589. வினை காரணமாகப் பெற்ற உடல் முதலியவற்றைச் சுமக்கின்ற உயிர்களுக்கெல்லாம் தலைவானாவன் இறைவன், எப்படிச் சீவனிடம் பொருந்தியிருக்கின்றான் என்பதை பலர் அறியார். உயிர்கள் அறியாவகையில் தடைகளை விலக்கி எல்லா உயிர்களையும் தன் கருவில் கொண்ட அச்சிவனை நான் அறிவேன்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.