ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#^#^#^#^#
9.சாமுத்ரிகா ராஜலட்சணம்!
சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒரு ஆணுக்கு இருக்கும் முப்பத்திரண்டு லட்சணங்களாகும். அப்படி இருந்தால் அது ராஜ லட்சணம் எனப்படும். அரசர் குலத்தில் இவைகளைப் பார்ப்பதுண்டு.
1. தாமரை போன்ற திருவடி
2. திரண்ட நீண்ட சங்கினைப் போன்ற கணைக்கால்
3. எலும்பு தெரியாத சதைப்பற்றிள்ள முழங்கால்
4. யாணையின் துதிக்கை போன்ற தொடை
5. சிறுத்த வயிறு
6. ஆழ்ந்த உந்தி
7. கண்ணாடி போன்ற பரந்த மார்பு
8. வீணையைப் போன்ற முழந்தாள்-முழங்கால்முட்டி
9. முட்டியைத்தொடும் அளவிற்கு நீண்ட கைகள்
10. மேரு மலையையொத்த இரு தோள்கள்
11. வலம்புரிச்சங்கைப் போன்ற கண்டம்
12. செந்தாமரையை நிகர்த்த முகம்
13. வயிறு, தோள், நெற்றி, மூக்கினடி, மார்பு, கையடி உயர்ந்திருந்தல் சிறந்த செல்வம்
14. கண், கபாலம், மூக்கின்முனை, கை, மார்பு நீண்டிருத்தல் நன்மை
15. குடுமி, தோல், விரலின் கணு, நகம், பல் சிறுத்திருந்தால் ஆயுள் மிகும்
16. கோசம், கணைக்கால், நாக்கு, முதுகு குறுகி இருத்தல் செல்வப் பயன்
17. தலை நெற்றி அகன்று இருத்தல் நன்று
18. உள்ளங்கால், உள்ளங்கை, உதடு, கடைக்கண், நா மேல்வாய், நகம் சிவந்திருப்பது
நன்மையுடன் இன்பம் தரவல்லது
19. மார்பு, கழுத்து, கொப்பூழ் வலிமை
20. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஓசை ஏற்படுத்துதல்
21. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஆழம் பெற்றிருத்தல்
22. நீண்ட ஆயுள்
23. அழியாப் புகழ்
24. நீதி தவறாமை
25. நற்குணங்கள் நிறைந்து இருத்தல்
26. அன்புடைமை
27. பண்புடைமை
28. அமைதியுடைமை
29. அருள் பார்வை
30. ஈகை குணம்
31. கல்வி அறிவு
32. வெல்வதற்கு அரியவன்
#^#^#^#^#