ஓம்நமசிவய!
லம்போதர கணபதியேபோற்றி!
வல்லபை விநாயகா போற்றி!
வரசக்தி விநாயகா போற்றி!
வன்னி விநாயகா போற்றி!
கல்யாணசுந்தரர்-மணவழகர்!
ஞானமே வடிவாக விளங்கும் இறைவியைச் சத்தியமே வடிவான இறைவன் கூடுவதையே- சத்ய ஞான இனைப்பே இறைவன் திருமணம். எங்கு சத்தியமும் ஞானமும் இனைகிறதோ அங்கு ஆனந்தம் கிட்டும். அருள் சத்தியோடு உலகம் இன்புற்றிருக்க ஞானசிவன் கொண்ட இனைப்பின் ஆனந்த வடிவம் கல்யாணசுந்தரர். திருமணத்தடை விலக அருள்.
இறைவனும் உமாதேவியும் கிழக்கு நோக்கி இருப்பர். கன்னிகாதானம் செய்துதர சகோதரன் திருமால் தன் இரு மனைவியருடன் எழுந்தருளியிருப்பர். மணமக்கள் அழகுக்கு அழகு செய்தாற்போல் அலங்கரிக்கப்பட்டிருப்பர். திருமால் தங்க கலசத்தில் நீருடன் தாரைவார்த்துக் கொடுக்க காத்திருப்பர். உமாதேவியர்க்கு இருபுறமும் சேடியர்களாக திருமகளும் மணமகளும் நிற்க நான்முகன் திருமணவேள்வி செய்வார். சுற்றிலும் அட்ட வித்தியேசுவரர், எண்திசைக் காவலர், சித்தர்கள், யட்சர்கள், முனிவர்கள், கந்தருவர், சப்தமாதர் மற்றும் உள்ள தேவருலகினர் மகிழ்ச்சியுடன் காத்திருப்பர். சிவபெருமான் தனது வலக்கரம் நீட்டி உமையின் திருக்கரம் பற்ற ஆயத்தமாக நிற்பர். அவரது இடக்கரம் வரத முத்திரை கொண்டிருக்கும். பின் கரங்களில் மானும் மழுவும் விளங்கும். தலையில் சடாமகுடமும், பிறைசூடி, மாலை, கேயூரம், பூனூல், பாம்புகுண்டலம் அணிந்து அழகுடன் இருப்பர். பாம்பு தட்சனை அரையிலும் புட்கரனை மாலையாகவும் அணிந்திருப்பார். அன்னை தனது வலக்கரத்தை நீட்டி பெருமானுடைய கரம் பற்ற ஆயத்தமாக இருப்பார். இடக்கரம் நீலோற்பல மலரை ஏந்தியிருக்கும்.
இல்லறமாகிய நல்லறத்தை மானிடர்களுக்கு உணர்த்த தத்துவப் பொருளாய் மணவழகராகத் திருமேனி கொண்டு பல்வேறு திருத்தலங்களில் அருள் புரிந்தவர் சிவபெருமான். காட்சி:கள்ளழகர் நீர் வார்க்க சுந்தரர் மீனாட்சி கலியாணம்- மதுரை, காந்திமதி அம்மையார் திருமணம்-திருநெல்வேலி, அல்லியங்கோதை திருமணம்-திருவாரூர், யாழைப்பழித்த இன்மொழியாள் திருமணம்- திருமறைக்காடு, அறம்வளர்த்த நாயகி திருமணம்-திருவையாறு, பெருநலமுலையம்மை திருமணம்-திருவிடை மருதூர், காமாட்சி திருமணம்-காஞ்சி, மங்களநாயகி திருமணம்- குடந்தை ஆகியன சிறப்புடையவை.
#####