ஊர்: ப்ராம்பானான்-லோராஜோங்க்ராங்
மூலவர்:
இறைவன்: சண்டி மஹாதேவா.-10' உயரச்சிலை
இறைவி: சண்டி
உ:
பிறசன்னதிகள்: பிள்ளையார், துர்க்கை, சந்திரன், சூரியன். மகிஷாசுரமர்த்தினி. அருகில் தனிக் கோவில்களாக சண்டி ப்ரம்மா, சண்டி விஷ்ணு
160'உயர கோபுரம். மரம்:
தீர்: கோமுக்
தி.நே-0700-1200,17-2000
சமவெளி பூராவும் கோவில்கள். மொத்தம்- 234 கோவில்கள். முக்கியமானது மும்மூர்த்திகள் கோவில். ஸ்ரீசக்ர வடிவத்தில் வருமாறு எல்லா கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள மகாமேரு மலை சீறும் எரிமலையாகும். சிவன் திருவடியில் தாமரை பீடத்தை நாகம் தாங்குவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டுங் என்ற இளவரசன் லோரோஜோங்க்ராங் என்ற இளவரசியை சபிக்க அவள் தான் மகிஷாசுரமர்த்தினியாக இருப்பதாக ஐதீகம். சுற்றுச் சுவர்களில் இராமாயனக் காட்சிகள். மற்ற கோவில்களில் தேவி பாகவதம், பாகவத புராணக் காட்சிகள், சிம்மங்கள், வானரங்கள், தேவர்கள் ரிஷிகள், கற்பக விருட்சம், காமதேனு, கின்னர்கள் சிற்பங்கள் சிறப்பு. இந்தோனிஷியாவை ஆண்ட இந்து வம்சாவளி மன்னர் ராக்காய் பிக்காத்தான் தென்னிந்தியாவை ஆண்ட மன்னர்கள் போல் கோவில் கட்டி சாதனை படைக்க எண்ணி கட்டிய கோவில்கள்.