ஊர்:பத்துமலை
மூலவர்:பத்துமலைமுருகன்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
தீர்:பத்துஆறு தி.நே-0800-1300,1530-2030
பாதுக்குகைக் கோவில்கள். பத்துமலைக்குன்று-272 படிகள். தை பூச நன்னாளில் சுமார் 8லட்சம் பக்தர்கள் அலகு-சிறப்பு . 18,19 ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து பிழைப்புத் தேடி மலாயா சென்றவர்களுள் தம்புசாமிபிள்ளை சுண்ணாம்புக் குன்றுகள் இருந்த பத்துமலை குகையுனுள் ஓர் கோவிலை நிர்மானித்து சுப்ரமண்யசுவாமியையும் அவர்முன் வேலாயுதத்தையும் பிரதிஷ்டை செய்தார். ஆரம்பத்தில் ஒற்றையடிப் பாதையாக இருந்தது தற்போது ஏறுவதற்கு ஒருபாதை இறங்குவதற்கு ஒருபாதை காவடி எடுத்துச் செல்ல ஒருபாதை என மூன்று பாதைகளுடன் திகழ்கின்றது. கோவில் 1300' உயரத்தில் உள்ளது. கருவரையில் சுப்ரமணயசுவாமி இருந்தாலும் அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் வேல்வடிவில் காட்சி தரும் வேலாயுதசுவாமிக்கே. அங்கிருந்து 40 படிகள் சென்றால் சுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை தரிசனம் தனிச் சன்னதியில். குகையில் மேல்பகுதி திறந்த வெளி. சுற்றிலும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. தைப் பூசம் முக்கிய திருவிழா. அப்போது கணக்கிலடங்கா பால் காவடிகள் எடுத்து வருவது காணக்கிடைக்காத காட்சி. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இடைவெளியின்றி பால் அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு. தைப் பூசத்தன்று மலேசியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் ஐந்துக்கு தேசிய விடுமுறை. அடிவாரத்தில் 141' உயர முருகன் சிலை. 15 சிற்பிகளில் திருவாரூர் சிற்பி முதன்மையானவர். 1550 கனமீட்டர் கான்கிரீட் மற்றும் 250டன் எஃகு கம்பிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் மேல் 300 லிட்டர் தங்கக் கலவை தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்டு பூசப்பட்டுள்ளது. மகா மாரியம்மன் கோவில் கட்டிய தம்புசாமி பிள்ளையே முருகனை பிரதிஷ்டை செய்துள்ளார். தைப்பூசத்தின் ஆரம்பமாக மகா மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்ரமண்யர்- வள்ளி,தெய்வானைக்கு ஆரதனை செய்து வெள்ளைத்தேரில் ஊர்வலமாகச் செல்ல தொடர்ந்து காவடி பால்குடங்கள் வரும். அடிவாரத்தில் சுப்ரமண்யர் கோவிலை அடைந்ததும் ஆராதணைகள் முடிந்து தங்கவேல் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்கள் பூஜை முடிந்த பின் கீழே கொண்டுவரப்பட்டு மீண்டும் தேரில் மகாமாரியம்மன் கோவிலுக்கு வந்து சேரும்.