ஊர்:காங்ரா
மூலவர்:வஜ்ரேஸ்வரி-சதிதேவியினம்சம்,ஜ்வாலாமுகி
இறைவன்:
இறைவி:
தி.நே-0400-2300
தலவரலாறு- பக்தர்கள் ஜ்வாலஜி மாதா கி ஜே என்று சப்தமிட்டுச் செல்வதைக் கண்ட அக்பர் தியானுபக்த் என்ற பக்தரிடம் உங்கள் மாதா எதை வேண்டுமானாலும் தருவாளா என்றுக் கேட்டு அருகே இருந்த குதிரையின் தலையை வெட்டினார். பின்னர் இந்த தலையை ஒட்டவைக்கச் சொல் என்றார். பக்தர் ஒரு மாதகாலம் பத்திரமாக குதிரை தலையினை பாதுகாக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அன்று முழுவதும் தியானத்தில் இருந்தார்.. மறுநாள் குளித்து மீண்டும் பூஜை செய்து வேண்ட அம்மன் காட்சி கிடைக்கவில்லை, உடன் தன் வாளை எடுத்து தன் தலையை கொய்து அன்னை பாதங்களில் வைக்க அது மீண்டும் அவர் தலையுடன் ஒட்டிக் கொண்டது.. நாளை அந்தக் குதிரையும் தலை சேர்ந்து உயிர் பெறும் என்றது அசரீரி. அப்படி குதிரை உயிர் பெற்றும் அக்பர் அதை நம்பவில்லை.. ஜ்வாலை வரும் வழியை இரும்பு வாணொலிகள் செய்து ஜவாலை வரும் துவாரங்களில் அழுத்த அவை ஓட்டையாயின. 47கிலே கணமுள்ள தங்கக் குடை செய்து அதைக் கொண்டு அந்த ஜ்வாலையை அணைக்க முயற்சிக்க அது பின்னமாகி என்ன உலோகம் என்று அறியமுடியாத வண்ணம் நிறம் மாறியது. அப்போதுதான் அக்பருக்கு இந்து மதத்த்ன்மீது நம்பிக்கை ஏற்பட்டது. இந்த குடை இன்றும் கோவில் பிரகாரத்தில் காட்சிப் பொருளாக உள்ளது.
சக்திபீடங்கள்- 51ல்-ஒன்று. பாரதத்தில்-1/45. தேவியின் நாக்கு--விழுந்த இடம். மகரசங்கராந்தி யன்று 50கி.நெய்யை 100முறை கழுவி பாழும் பழங்களும் சேர்த்து மேனியில் சார்த்துகிறார்கள். வாரம்கழித்து பிரசாதம்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)