ஊர்: கட்டில்# நந்தினி நதி நடுவில்
மூலவர்: ஸ்ரீதுர்காபரமேஸ்வரி-நின்ற கோலத்தில் சங்கு சக்ர தாரினியாக
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: பாறைவடிவில் ரத்தேஸ்வரி.ஸ்ரீகணபதி, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீசேத்ரபாலர், ஸ்ரீநாகர்
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0530-2100
# 05-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது (2)
தலபுராணம்- ஜடாதர்னின் அருள்பெற்ற ஜாபாலி முனிவர் வெளிச்சம் புக முடியாத குகையில் தவம் புரிந்து வந்தார். மழை பொய்த்ததால் மக்கள் பஞ்சத்தில் உழல அதை நீக்க யாகம் செய்ய காமதேனுவை கூட்டிவர செர்க்கம் சென்றார். அங்கு காமதேனு வாயு லோகத்திற்கு சென்றதால் அவள் மகளை நந்தினியை அழைத்துபோக இந்திரன் சொல்ல நந்தினி நீதியும் நேர்மையும் இல்லாத அதர்மம் நிறைந்த பூலோகம் வர மறுத்துவிட கோபம்கொண்ட ஜாபாலி பூலோகத்தில் நதியாகப் பிறந்து ஓட சாபம் கொடுத்தார். வருந்திய நந்தினி நதியாக மாறி ஜாபாலி ஆசிரமம் வழி சென்றது. அருணாகரன் என்ற அசுரன் தவமிருந்து பிரம்மனிடம் மனிதன் ,விலங்குகள், ஆண்,பெண் இவற்றால் மரணமில்லா வரம் பெற்றான். சரஸ்வதியிடம் காயத்ரி மந்திரம் ஜபிக்கும்வரை மரணமில்லை என்றும் வரம் பெற்றான்.
அசுரன் எல்லோரையும் துன்புறுத்த சிவனிடமிருந்து விஷ்ணுவிடமிருந்து பிரம்மனிடமிருந்து பிருகஸ்பதியிடம் செல்ல அவர் அசுரனை தன் வார்த்தையால் மாற்று எண்ணங்கொள்ளச் செய்தார். நீ அடையும் வெற்றிக்கு காரணம் உன் வலிமைதான். நீயே தலைவன். நீ எதற்கும் அடிமையில்லை எனக் கூறி அவனை அகந்தையின் பிடியில் சிக்கவைக்க அவன் காய்த்ரி ஓதுவதை விட்டான். அப்போது அவன் அமைச்சர்கள் சொன்ன நடன மாதின் அழகில் மயங்கி அவளை அடைய நினைத்தான். அவளே மகாசக்தி என்பதை அறியாதவன் அவளுடன் போர் புரிய தேவி தேனீ உருவெடுத்து தன் கொடுக்கால் அவன் மார்பில் குத்தி கொன்றாள்.
அவளின் கோபத்தை தணிக்க ஜாபாலி முனிவர் தேவிக்கு இளநீர் அபிஷேகம் செய்தார். தேவி லிங்க ரூபத்தில் எழுந்தருளினார். நந்தினி அவரைச் சுற்றி வந்து சாபவிமோசனம் பெற்றாள். அபிஷேகத்தின் போது லிங்க ரூபத்தை தரிசிக்கலாம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)