ஊர்: தளிபரம்பு,திரிசம்பரம்+பெ
இறைவன்: ராஜராஜேஸ்வரர்,பெரும்திருக்கோவிலப்பன், பெரும் கொல்லூரப்பன்
இறைவி:
பிறசன்னதிகள்: விஷ்ணு.,பத்ரகாளி
தீர்: குளம் தி.நே-
திரேதாயுகத்தில் மாந்தாதா முனிவர் சிவனைக் குறித்து தவமிருக்க அவருக்கு ஒர் லிங்கம் தரும்படி பார்வதியிடம் சிவன் சொல்ல மரணம் ஏதும் நிகழ்ந்திராத சுடுகாடு காணப்படாத இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்ல தளிப்பரப்பில் உலோகத்தால் செய்யப்பட்ட வட்ட வடிவில் உள்ள இடமே சரியானது என இங்கு பிரதிஷ்டை செய்து வழிபாடு. அவர் இறந்ததும் அந்த லிங்கம் மறைந்தது. துவாபரயுகத்தில் முனிவரின் மகன் இரண்டாவது லிங்கத்தைப் பெற்று தந்தை பிரதிஷ்டை செய்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். ஒரு காலகட்டத்தில் இந்த லிங்கமும் மறைந்து விட்டது. துவாபரயுகத்தில் மூட்ஷக சதாசோமன் மன்னர் கடுந்தவம் செய்து மூன்றாவது லிங்கத்தைப் பெற்றார். பார்வதி தேவியின் அனுமதியில்லாமல் லிங்கம் பெற்றதால் பிரதிஷ்டை செய்வதில் சிக்கல்கள் ஏற்பட தேவியைக் குறித்து தவம் செய்து ஆசிபெற்று அகத்தியர் உதவியுடன் இதே இடத்தில் பிரதிஷ்டை.
3000 ஆண்டுகள் பழமை. இறைவனுக்கெதிரில் நந்தி கிடையாது. அர்ச்சனைக்கு தேங்காய், பழம், பூ விற்குப்பதில் நெய் மட்டும். அகத்தியர் பிரதிஷ்டை. பரசுராமர், நாரதர், ராமர் வழிபாடு. இருபக்கமும் அகத்தியரால் ஏற்றப்பட்ட அகல் விளக்கு இன்றுவரை அணையா விளாக்காக இருக்கின்றது. கோவிலில் சீட்டு வாங்கினால் நெய் தருகின்றார்கள். பகலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பார்வதி இல்லாமல் இராஜராஜேஸ்வரர் இருந்து இரவு 8 மணிக்குமேல் பார்வதியுடன் இருப்பதாக ஐதீகம். எனவே இறைவனும் இறைவியும் செர்ந்து தரிசனம் என்பதால் அதற்குமேல் பெண்கள் அனுமதி. பரசுராமர் வந்ததால் விஷ்ணு வந்தார்- எனவே முதலில் விஷ்ணுவை வழிபட்டு பின் ராஜராஜேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். மற்ற சிவலிங்கங்களைவிட மூன்று மடங்கு ஆற்றல் உள்ளவர். கருவறைக்கு எதிரில் உள்ள நமஸ்கார மண்டபத்தில் ராமர் அமர்ந்து தியானம் செய்ததால் ராமரது புனித பாதம் பட்ட இடத்தில் வேறு யாரையும் அனுமதிப்பதில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)