ஊர்:திருவலம்புரம்.தி.த-161.மேலப்பெரும்பள்ளம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவலம்புரநாதர்(பி)
இறைவி: ஸ்ரீவடுவகிர்கண்ணி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிசுவநாதர், ஸ்ரீவலம்புரிஉடையார். ஸ்ரீதடங்கண்நாச்சியார். ஸ்ரீஇராமநாதர், ஸ்ரீகஜலட்சுமி.
மாடக்கோயில்
மரம்-பனை.
தீர்-பிரம்,லட்சுமி
தி.நே-0700-1200,1700-2000
#-17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
திருமால் வலப்புரிச்சங்கினை பெற்ற தலம்.
ஆதிசேடன் பாதாளத்திலிருந்து பூலோகத்திற்கு வந்த துவாரத்தின் வழி காவிரி நீர் கீழே புக, கவலையடைந்த சோழ மன்னன் அந்த பிலத்துவாரத்தில் வீழ அத்துவாரம் அடைபட எர கண்டமுனி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி இங்கு கரையேறி வழிபாடு.
வேட்டைக்கு சென்ற மன்னன் தான் இறந்ததாக அனுப்பிய பொய் செய்திகேட்ட அரசி இறக்க பழிதீர தினமும் 1000 பேருக்கு உணவழிக்க பட்டினத்தார் உணவருந்தி மணி ஒலித்து பாவம் தீர்ந்தது.
பிட்சாடனார்-வட்டணை நாயகர் சிறப்பு. பழயவினைகள் தீவினைகள் அகலும்.
கிரக மண்டலத்தில் சஞ்சரிக்கும் நேரத்தை கூட்டியும் குறைத்தும் தவறாக நடந்த பிழைக்கு பொருத்தருள வேண்டி சூரியன் வழிபட்டு அயண புண்ணியகாலமென தெரிய அருள் பெற்ற தலம்.
நந்தியும், காமதேனுவும் நந்தியாவர்த்த மலரால் அர்சித்த தலம்.
சிவபெருமானிடம் தவமிருந்து சக்கரம், கதைபெற்றபின் அம்பாளிடம்வேண்டி வலம்புரிச்சங்கையும் பத்மத்தையும் பெற மேலும் இரு கைகள் வேண்டி பெற்ற தலம்.
பாற்கடலை கடையும்போது மந்தாரமலையின் சுழற்சியால் வருந்தி உயிர்விட்ட சங்குக் கூட்டங்களைக் காப்பாற்ற உமை சிவனிடம் வேண்ட அவைகளுக்கு உயிர் கொடுத்து வாழும்படி திருவுள்ளத்தில் நினைத்தவுடன் அச்சங்குகள் வாழ்வதற்கு ஏற்ற பெரும்பள்ளம் கண்டு மகிழ்ந்த உமை வழிபட்ட தலம்.
திருபாற்கடலை வாசுகியைக் கயிறாகக் கொண்டு கடைந்த வேதனையால் வருந்தி இறையை வழிபட அதை அரைநானாக ஏற்றுக் கொண்ட தலம்.
கிருதவீரியன் முன்னாள் இறந்த பிதுர் தெய்வங்களுக்கு பிண்டமிட்டு குறை நீக்க வழிபட திறமைவாய்ந்த அறிவுள்ள கார்த்தவீரியனை மகனாகப் பெற தவம் செய்த தலம்.
திருநாவுக்கரசர் திருக்கடவூரில் தரிசனம் செய்தபின் ஆக்கூர் செல்ல பயணப்பட்டபோது அவருடன் வேதியர்போல வந்து வழிகாட்டுவதாகச் சொல்லி வலம்புரம் அழைத்து வந்து வாயில் அனைவரையும் நிறுத்திவிட்டு உள்ளே சென்று மறைந்துவிட , உள்ளே சென்றவர் வரவில்லை என நினைக்கையில் நவுக்கரச்ரும் ஊர்மக்கள் அனைவரும் அது பெருமான் என நினைத்து வழிபட்டனர்.
பூம்புகார் பட்டிணத்திற்கு காவிரி புகுந்து செல்வதற்காக வழிவிட்டு காவிரிக்கு வலப்பக்கம் இத்தலம் அமைந்ததால் வலப்புரம்.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.