ஊர்:திருவேங்கைவாசல்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேங்கைநாதன், ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர், ஸ்ரீமகிழாரண்யேஸ்வரர், ஸ்ரீவகுளாரண்யர்
இறைவி: ஸ்ரீபிரகதாம்பாள், ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசூடாமணிசதுரங்கன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீஞான தட்சினாமூர்த்தி-அருகில் விநாயகர் பத்ம பீடத்தில், ஸ்ரீஞான முருகன் ,சுப்ரமணி-வள்ளி,தெய்வானை, ஸ்ரீசப்தமாதர்கள், லிங்கோத்பவர் இடத்தில் மகாவிஷ்ணு. ஸ்ரீபைரவர், பூதம் காவல்
மரம்-மகிழ,
தீர்-குளம்
தி.நே-0600-1200,1600-2000
#-26-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
முதலாம் ராஜராஜன் காலத்துக் கோவில். 1008 சிவாலயங்களை பூசித்த பலன்.குடவரைக் கோயில். 1500ஆண்டுகள் பழமையானது. இந்திரன் அவைக்கு எல்லோரும் சரியான நேரத்தில் வர கேட்டதை அள்ளித் தருபவளாக இருக்கும் மமதை காமதேனுவிற்கு ஏற்பட தாமதமாக சிவபூஜைக்கு செல்ல, அதன் காரணங்களை கேட்க விரும்பாமல் காமதேனுமேல் கோபம் கொண்ட இந்திரன் பூலோகத்தில் சாதாரணப் காட்டுப் பசுவாகப் பிறக்க சாபம். அது வசிஷ்டரின் ஆசிரமத்தில் பிறந்து வளர்ந்தது. பேசும் ஆற்றல் உடையதாக இருந்தது. வசிஷ்டரிடம் சாப விமோசனத்திற்காக கேட்க அவர் கபிலமுனி தவம் இருக்கும் வகுளாராண்யத்திற்கு போகச் சொல்ல இங்கு வந்து கபிலமுனி ஆலோசனைப்படி கங்கை நீரைத் தன் காதுகளில் நிரப்பிக்கொண்டு வந்து ஈசனை வழிபட்டது. கன்று ஒன்றையும் ஈன்றது. ஈசன் காமதேனுவை சோதிக்க விரும்பி கங்கை நீர் கொண்டு வரும் வழியில் வேங்கையாய் மறிக்க பசு என் பூஜை முடிந்தபின் எனது இளங்கன்றுக்கு பால்வார்த்துவிட்டு வந்து உன் பசிக்கு இரையாகின்றேன் என்றது வேங்கை வழிவிட தன் கடமைகளைச் செய்துவிட்டு திரும்பிப் போய் வேங்கைமுன் நின்றது. சொன்ன சொல் தவறாத பசுவின் நேர்மையைப் பாராட்டி ஈசன் தோன்றி அருள்- காமதேனுவாக இந்திரலோகம் சென்றது. வேங்கையாக வந்து வழிமறித்ததால் திருவேங்கைவாசல்- வியாக்ரபுரீஸ்வரர் புரட்டாசி திங்கள் பௌர்ணமி- சந்தியாதாண்டவம் (பிரதோஷ தாண்டவம்)-சிறப்பு. தேவி- திருமேனி தட்டினால் சப்தஸ்வரங்கள் ஒலி- சந்திர காந்தக் கல்லால் ஆனது. 2சன்னதிகள் முதல் சிலையில் விரல் பின்னமாக இரண்டாவது சிலை செய்ய மன்னன் கனவில் தோன்றி உடல் ஊனமுள்ள குழந்தையை விட்டுவிடுவாயா எனக் கேட்க 2 அம்மன்கள் பிரதிஷ்டை. சிவவிஷ்னு அம்சமுருகன் சிறப்பு. யோக தட்சினாமூர்த்தி- அர்த்தநாரீஸ்வரர் வடிவம்- நின்று அமர்ந்த நிலை- முயகலனை வருடிக் கொடுக்கும் கை- ஒருமுக சிந்தனைக்கு உகந்த நிலை.. முதல் மரியாதை கம்பத்தடி கருப்பனுக்கு. தொண்டைமான்கள் திருப்பணி. வைகாசி10 நாள் பிரமோற்சவம். 8கோண கருவறை ஞானமுருகனுக்கு- வேலும் மயிலும் இல்லாமல்- தவக்கோலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)