ஊர்:மரக்காணம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூமிசுவரர்(சு)
இறைவி: ஸ்ரீகிரிகுஜாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகர்ண பூசண விநாயகர், ஸ்ரீலட்சுமி விநாயகர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீஆறுமுகசாமி, ஸ்ரீசப்த மாதாக்கள், ஸ்ரீசுப்ரமன்யர்-வள்ளி,தெய்வானை
2பிரகாரங்கள் மரம்:
தீர்:
நான்குகாலபூஜை தி.நே-0700-1200,1700-2000
1000 ஆண்டு பழமை. முதலாம் ராஜேந்திரசேழன் கட்டியது.
கன்வரிஷி, மன்மதன் வழி பட்டது.
கவிழ்த்து வைத்த மரக்கால்- சிவலிங்க திருமேனி- மரக்கால் காணோம்-மரக்காணம்.
தலவரலாறு: இந்த ஊருக்கு வந்த சிவனடியார்களுக்கு ஊர் மக்கள் பக்தி சிரத்தையுடன் விருந்து படைக்க ஏற்பாடு செய்தனர். அடியார்கள் சிவ தரிசனத்திற்குபின் உணவு என்ற நிலையில் கோவிலைப் பற்றி கேட்க அங்கு கோவில் இல்லை என்றறிந்து உணவு வேண்டாம் எனக்கூறி புறப்பட தயாரானார்கள். அப்போது அவ்வூர் பெரியவர் ஒருவர் உணவு தானியங்களை அளக்கும் மரக்கால் படியை கழுவி கவிழ்த்து வைத்து அதற்கு பட்டையிட்டு குங்குமம் வைத்து பூக்களை அதன்மேல் போட சிவனடியார்கள் ஆனந்ததுடன் வழிபட்டு உணவருந்தினர். நாளடைவில் அந்த மரக்கால் படியை மக்கள் மறந்தனர். அந்த இடம் புல் மண்டி புதரானது. நீண்ட காலத்திற்குப்பின் மரம் செடிகளை வெட்டி சுத்தம் செய்தபோது புற்றை அகற்றி சுயம்புலிங்கம் கண்டனர். அவ்விடத்திலேயே வழிபடத் தொடங்கினர். மாண் மூடிய இடத்தில் மரக்கால் படியைக் காணோம் எனப்பேசிய மக்கள் வழக்கத்தில் மருவி மரக்காணோம் என்று ஊரின் பெயராக அமைந்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)