ஊர்:ஓரகாட்டுப்பேட்டை:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகுணம்தந்தநாதர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி,ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி,ஸ்ரீபைரவர்அரிநவவீரர்கள், ஸ்ரீநவகிரகங்கள்,
மரம்: சரக்கொன்றைமரம்
தீர்: அக்னி திர்த்தம்.
தி.நே-0700-1200,1630-1930
வரலாறு: தனக்கு ஞானம் வேண்டிய பார்வதி ஈசன் யோசனைப்படி பிரனேஷ் வனத்தில் தவமியற்றி வந்தாள். ஈசன் வில்வமரமாய் நிழல் தந்தார். அப்பக்கம் வந்துகொண்டிருந்த வணிகரை கொள்ளையர்கள் தாக்கி பெருளை அபகரித்துக் கொண்டனர். துக்கத்துடன் வந்த வணிகன் வில்வ மரத்தடியில் அமர்ந்து ஈசனே என்னிடம் வழிப்பரி செய்த கொள்ளையர்களுக்கு நல்ல புத்தி அருளி அவர்களே பொருளைதிருப்பிக் கொணர அருள்வாய் என வேண்டி நின்றான். சிவன் வேடராய் உருவெடுத்து வேடர்களை தக்க அவர்கள் காளிதேவியை வேண்டினர். திருடர்களை காணாத வேடன் வில்வ மரத்தடியில் கோபமாக நடனமாட அங்கு வந்த காளி அவருடன் போட்டியிட்டு தோற்றாள். அப்போதுதான் அது சிவன் என உணர்ந்து தன்னையும் வேடர்களையும் மன்னிக்கும்படி வேண்டினாள். சிவன் அவர்களை மன்னித்தருள திருடர்கள் மனம் திருந்தி தாங்கள் அபகரித்த பொருளைத் திருப்பிக் கொடுத்தனர். சிவன் உறைந்ததால் உறைக்காட்டுப் பேட்டை மருவி ஓரக்காட்டுப் பேட்டை என்றானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)