ஊர்: அரசர்கோவில் பாலாற்றங்கரை
மூலவர்:ஸ்ரீவரதராஜப்பெருமாள்.ஸ்ரீகமலவரதராஜர்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபெருந்தேவித்தாயார்,ஸ்ரீசுந்தரமகாலட்சுமி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅட்சயபாத்ர விநாயகர்,ஸ்ரீகருடாழ்வார்,ஸ்ரீஆஞ்சநேயர்,, ஸ்ரீஆண்டாள்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1100,1600-1900
பிரம்மன் வழிபட்டதலம். ஜனகர் வழிபட்டு புத்திர பாக்யமாக சீதா தேவியை அடைந்த தலம். ஜனகருக்கு சீதா பூமியிலிருந்து கிடைத்த இடம் அருகில் ஜானகிபுரம்.
வரலாறு: பூலோகத்திற்கு வந்த நாராயணன் இங்கு அரசமரத்தடியில் வாசம் செய்ய இதை அறிந்த ஜனகர் வாரிசு வேண்டி குறித்த நேரத்தில் பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவர் தாமதம் ஆக வந்தபோது ஏற்கனவே பூஜை செய்திருப்பது கண்டு வருந்த அங்கு தோன்றிய நாராயணன் குறித்த காலத்தில் பூஜை நடக்க வேண்டி நானே பூஜை செய்தேன் என்றார். அங்கு சென்ற மகாலட்சுமியை நீ இல்லாமல் என்னை தரிசிப்பதை குறையாக மக்கள் நினைக்கக்கூடாது என்பதால் நீ இங்கு மக்களுக்கு அருள்புரிவாய் என்றார். ஜனகருக்கு புத்ர பாக்கியம் அருளினார். அதற்கு நன்றியாக ஜனகர் இங்கு கோவில் கட்டினார்.
பாண்டிய மன்னன் சம்புவர்மன்,ராஜநாராயண சம்புவராயன்,கிருஷ்ணதேவராயர், கோவில் புனரமைப்பு செய்து நித்ய வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)