ஊர்:மன்னார்குடி #
மூலவர்:ஸ்ரீவாசுதேவபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகலட்சுமிதாயார் தனிசன்னதி
உ: ஸ்ரீராஜகோபாலன்ருக்மணி,சத்யபாமா
பிறசன்னதிகள்: ஸ்ரீஹேமாப்ஜநாயகி, ஸ்ரீரக்தாப்ஜநாயகி, ஸ்ரீகஜலட்சுமி,ஸ்ரீவீரலட்சுமி. ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமி நாராயணன், ஸ்ரீஅனந்தபத்மநாபன், ஸ்ரீவெங்கடேசபெருமாள், ஸ்ரீசந்தானகோபாலன்
11நிலை154'ராஜகோபுரம்7பிரகாரங்கள்16கோபுரங்கள்-24சந்நிதிகள்
தீர்-ஹரித்ராநதி,துருவாச,திருபாற்கடல்,கோபிகா,ருக்மணி,அக்னிகுண்ட,கிருஷ்ண,சங்கு,சக்கர, பாமணிஆறு.
மரம்-புன்னை.
வி-18,அஷ்டாங்க
தேர்திருவிழா.
தி.நே-0600-1200,1700-2100
# 21-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04367-222267
1000 ஆண்டுகள் பழமை. 64-தீர்த்தங்கள்- தட்சிண துவாரகை.
குளநீராடல்- காசி இராமேஸ்வரத்திற்கு இணை.
கன்னன் 32 லீலைகள் திவ்ய காட்சிகளாக அருள். 32வது ருக்மணி, சத்யபாமா வுடன் மாடுமேய்க்கும் கோலம். ஆண்டுதோரும் திருவிழாவில் இக்காட்சிகள்.
1158' x 847' - ஹரித்ரா நதி குளம்-தெய்வீக தீர்த்தம்.
கிருத, திரேத, துவாபர, கலியுகம் என் 4 யுகங்களிலும் அருள்-சதுர்யுகம் கண்ட பெருமாள்.
54' கருடஸ்தம்பம் ஒரேகல்லில்.
மூன்றாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, மூன்றாம் ராஜேந்திர சோழன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர்களால் புதுப்பிக்கப்பட்டு, அச்சுத தேவராயன், விஜயநகர மன்னர்கள் திருப்பணி.
வரலாறு: இஞ்கிருந்த செண்பகவந்த்தில் தவமிருந்த தலை சிறந்த வாஹிமுனியின் புதல்வர்கள் கோபிலர், கோபிரளயர் இருவரும் ஸ்ரீமன்நாராயணனை நோக்கி தவமிருக்க காட்சியளித்து துவாரகைக்கு சென்று கண்னபிரானை தரிசித்தால் மோட்சம் என அருள். வழியில் உள்ள் புண்ணிய நதிகளில் நீராடி தரிசனம் செய்து சென்று கொண்டிருந்த அவர்களை வழியில் சந்தித்த நாரதர் கிருஷ்ணன் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு விண்ணுலகம் சென்று விட்டதாக சொல்லக்கேட்ட இருவரும் மூர்ச்சை ஆயினர். அவர்களின் பக்தியைக் கண்ட நாரதர் செண்பகாரண்யத்தில் உள்ள ஹரித்ரா நதியில் நீராடி தவம் செய்யச் சொன்னார். அவர்களுக்கு கிருஷ்ணராக கட்சி கொடுத்தபோது அவர்கள் விருபத்திற்கிணங்க அவரது 32 லீலைகளையும் நடத்திக் காட்டினார்.
கம்சனால் வாசுதேவரும் தேவகியும் சிறையில் அடைக்கப்பட்டப்போது அவர்களுக்குப் பிள்ளையாக பிறக்கப் போவதாக கூறியதே முதல் லீலை.32வது லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையன் கோலம். இதன் அடிப்படையில் இக்கோவிலின் மூலவர் வாசுதேவர் என்றும் உற்சவமூர்த்தி ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி அருள்.
இடது கையில் தந்தம் - கம்சன் ,கிருஷ்ணரையும், பலராமரையும் அடக்க ஏவிய யானையை அடக்கி அதன் தந்தத்தை ஒடித்தார். அதுவே அவர் கையில் உள்ளது.
யமுனையில் நீராடிய பின்னர் ஆடை ஆபரணஞ்களைச் சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்று கோபியர்களுக்கு போட்டிவைத்தார். போட்டி துவங்கியதும் ஒரு கோபியரின் காதணியை-தடாங்கத்தை எடுத்து தான் அணிந்து கொண்டார். குளித்து முடித்த கோபியர்கள் தங்கள் ஆடை அணிகலன்களை அணியும்போது ஒருவரது தடாங்கம் காணவில்லை என்றதும் மற்றவர்களும் தங்கள் ஆடை அணிகல்களை அணியாமல் காணமல் போன் ஒன்றை தேடுவதிலேயே கவனமாக இருந்தனர்.. அப்பொது அது கண்ணனின் காதில் இருப்பதை கண்டுபிடித்தவர்கள் அதன் அழகில் மயங்கி நின்றனர்.
கோபியர்களுடன் ஜலக்கிரீடை ஆடியதும் ஒரு லீலை. அப்போது கோபியர் பூசியிருந்த மஞ்சள் நதி நீரில் கலந்ததால் ஹரித்ரா-மஞ்சள் நதி என்று பயர் பெற்றது.
ஆண்டின் 12 மாதங்களிலும் உற்சவம். பங்குனி பிரமோற்சவம். கோவிலின் வட திசையில் அமைந்துள்ள தெப்பக்குளம்-23 ஏக்கர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய குளம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)