ஊர்: வெள்ளூர் #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருக்காமேஸ்வரர்,வைத்தியநாதர்.
இறைவி: ஸ்ரீசிவகாமசுந்தரி-நான்கு கரங்கள்,
உற்சவம்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசந்தனப் பிள்ளையார். ஸ்ரீகால,ஞான பைரவர்கள். ஸ்ரீஇராவணன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீமோட்சகணபதி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வாணை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீஐஸ்வர்யலட்சுமி-சிறப்பு
5நி.ராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0900-1100,1800-1900
# 07-09-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஆதிசேஷன், முசுகுந்தன், சூரியன் வழிபாடு.தன் கணவன் விஷ்ணு பெண் ரூப மெடுத்து சிவனுடன் கூடியதை அறிந்து அதிர்ச்சியும் கோபமும் கொண்டு சிவனிடம் தன் கோபத்தைக் காட்ட சிவனைத் தேடினாள். எங்கும் காணமுடியாததால் பூலோகத்திற்கு வந்தாள். தவமிருக்க ஆரம்பித்தாள். பல யுகங்கள் கடந்தன.வில்வ மர ரூபங்கொண்டு வில்வத்தை ஈசன்மேல் பொழிந்தாள். காலம் கனிய சிவன் காட்சி கொடுத்தார். ஐயப்பன் அவதாரம் நிகழவேண்டியிருந்த காரணத்தையும் அதற்காக நடந்த நிகழ்வுகள் அவை என் விளக்கி லட்சுமியை அமைதிப்படுத்தினார்.வில்வம் வர்ஷித்த லட்சுமியை ஐஸ்வர்ய லட்சுமியாய் திகழ வரம் அளித்தார். தன் அருளின் அடையாளமாக ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக உருவகம் செய்து எப்போதும் விஷ்ணு மார்பில் இருக்கச் செய்தார். சுக்கிரன் யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இங்கு வழிபட்டுதான். இராவணன் சிவனை வழிபட்டு ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலம். மன்மதனுக்கு அரூப அழகுடலை அளித்ததால்- திருக்காமேஸ்வரர்-மன்மதபாணம் அம்பிகைமீதுபட்டதால்- சிவகாமசுந்தரி, மன்மதனுக்கு வைத்தியம்-வைத்தியநாதர். போகர், பாம்பாட்டிசித்தர், புலிப்பாணிசித்தர் தவம் மேற்கொண்ட தலம்.
வலன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து தேவர்கள் மற்றும் தெய்வ சக்தியால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பெற்றதால் செருக்கடைந்து இந்திரன் மேல் படையெடுத்தான். இந்திரன் பிரம்மனை ஆலோசனை கேட்க வலனுக்கு மனிதர்களால் மட்டுமே மரணம் அதனால் சோழ மன்னன் முகுந்தனின் உதவியை நாடு.என்றார். வலனுடன் போரிடச் செல்லுமுன் முகுந்தன் தன்னுடைய மகுடத்தையும் போர்க்கருவியையும் வைத்து வழிபட்டு ஆற்றல் பெற்று வலனை வென்றான். அதனால் வெள்ளூர் எனப் பெயரானது. போகர் குகை. மண்டபத்தில் சிவபோத சக்கரம் சிறப்பு
சுக்கிரவாரம்-வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் காலை 0600-0700 ஐஸ்வரிய மகாலட்சுமிக்கு 16 வகையான அபிஷேகம் சேய்து 16 நெய் தீபங்கள் ஏற்றி அம்பாளை 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் 16 வகை செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசையன்று ஈசனுக்கு வில்வ அர்ச்சனை செய்து இருவரையும் வலம் வந்தால் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)