ஊர்:பூவனூர்.தி.த-220.திருப்பூவனூர்.புஷ்பவனம்.பாமணியாற்றின்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபுஷ்பவனநாதர், ஸ்ரீசதுரங்கவல்லபநாதர், ஸ்ரீபூவனூர் புனிதன்,
இறைவி: ஸ்ரீகற்பகவல்லி, ஸ்ரீராஜராஜேஸ்வரி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீலட்சுமிநாராயணர்,ஸ்ரீகாசிவிஸ்வநாதர்,ஸ்ரீபசுபதீஸ்வரர், ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீ சூரியன், ஸ்ரீ சந்திரன், ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீநடராசர், ஸ்ரீசோமாஸ்கந்தர்.ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீமகாலட்சுமி,
5நிலைராஜகோபுரம்.
6காலவழிபாடு.
தீர்-ஷீரபுஷ்கரணி,கிருஷ்ண,குஷ்டஹர,பாமணி,பாற்குளம்
மரம்-பலா.
தி.நே-0700-1200, 1600-2000
#08.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
1000 ஆண்டுகள் பழமை. சாமுண்டீஸ்வரி- (மைசூருக்கு அடுத்து) விஷக்கடிக்கு பிரார்த்தனை சன்னதி. சுகப்பிரம்மரிஷி வழிபட்டது. 2 குளங்கள் பிணி தீர்க்கும் சிறப்பு. சிவன் சித்தராக வந்து ராஜராஜேஸ்வரி அம்பாளை சதுரங்கத்தில் வென்று மணந்த தலம். சிவனோடு வந்த கற்பகவல்லி, மன்னன் மகளாகத் தோன்றி மகேசனை மணந்த ராஜராஜேஸ்வரி, அரசன் மகளை வளர்த்த சாமுண்டீஸ்வரி என 3அம்பாள் சன்னதிகள். வைகாசி, சித்திரை திருவிழா. அப்பர் -பாடல் பெற்ற தலம்.
தென் பாண்டிய நாட்டின் அரசன் வசுசேனன்- கந்திமதி தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள் நீராடும்பொழுது தாமரை மலரில் சங்கு இருப்பதைப் பார்த்து அதை கையில் எடுக்க அது பெண் குழந்தையாக மாறக்கண்ட அரசன் இராஜேஸ்வரி எனப் பெயரிட்டு வளர்த்தான், சதுரங்கத்தில் சிறந்து விளங்கினாள். திருமணப் பருவத்தில் திருமணம் முடிக்க முடியாமல் வருத்தப்பட்ட மன்னன் மகளுடன் தீர்த்த யாத்திரை சென்றான். திருப்பூவனூர் என்ற இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு தன் மனபாரத்தினை சொல்லி கவலையை விட்டொழித்தான். மறுநாள் வயோதிகர் ஒருவர் அரன்மனைக்கு வந்து ராஜராஜேஸ்வரியிடம் என்னுடன் சதுரங்கம் ஆட முடியுமா என்றார். முதன் முறையாக அப்பெரியவரிடம் தோற்றுப் போனாள். திருப்பூவனூர் தலத்து இறைவனே சொக்கட்டான் ஆட்டத்தில் தன் மகளை வெண்ரது என அரிந்த மன்னன் மனம் மகிழ்ந்தான். திருமணம் நடந்தது. சதுரங்கவல்லவநாதர் மருவி சதுரங்க வல்லப நாதர் ஆனது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)