ஊர்: மாறன்பாடி,இறையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதாகம்தீர்த்தபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅன்னபூரணி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்: பலா
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஞானசம்பந்தருக்கு முத்து சிவிகை- பல்லக்கு அளித்த தலம். அன்னபூரணி அன்னம் பரிபாலித்த தலம். திருஞான சம்பந்தர் இந்த தலம்வரை தன் தந்தையின் தோள்மீது அமர்ந்து தலங்களுக்குச் சென்று வந்தார். இதன்பின் தன் சொந்தக் கால்களால் தலங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். ஞானசம்பந்தருடன் வந்தவர்கள் இத்தலம் வந்த போது இரவு ஆனதால் ஞானசம்பந்தருடன் வந்த அனைவருக்கும் ஈசன் தாகம் தனித்தார்-தாகம் தீர்த்தபுரீஸ்வரர். அன்று இரவு அன்னை அன்னம் பரிபாலித்தமையாதலால்- அன்னபூரணி. தாமே நடந்து வந்த கலைப்பால் நீண்டபயணம் காரணமாக திருஞானசம்பந்தர் அயர்ந்து உறங்கினார். அவ்வூர் அந்தணர் கனவில் நம்மிடத்து வந்த சம்பந்தருக்கு முத்துசிவிகை, முத்துக்குடை, பொற்சினை அளிக்கச் சொன்னார். அடுத்தநாள் காலை அந்தனர்கள் அனைவரும் ஒரே மாதிரி கனவு கண்டதை அறிந்து கோவில் செல்ல அங்கு எல்லாம் தயாராக இருப்பது கண்டு ஆனந்தம் மேலிட சம்பந்தருக்கு அளித்தனர். தேவார வைப்புத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)