ஊர்:காஞ்சி#+சி:
மூலவர்:ஸ்ரீசித்ரகுப்தர்# +ஸ்ரீகர்ணகி அம்பாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீஜ்வரஹரேஸ்வர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீ துர்க்கை.ஸ்ரீநவகிரகங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0630-1200,1600-1800
#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
சித்ரகுப்தருக்கு உள்ள இரண்டு கோவில்களில் ஒன்று மற்றொன்று தேனிமாவட்டத்தில் உள்ள தீர்த்தத்தொட்டி. கேதுபகவானின் அதிதேவதை. கேது தோஷ நிவர்த்தி-வழிபடின் தீமைகள் அகலும். சித்ராபௌர்ணமி- அவதாரநாள்- சிறப்பு. கருணீகர் மரபைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர்கள்.
மக்களின் பாவ புண்ணியங்களைப் கணக்கெடுக்கும் பணியை யாருக்கு கொடுக்கலாம் என சிவன் யோசித்தபோது உமை ஓர் சித்திரம் வரைய அதற்கு உயிர் கொடுத்தார் சிவன். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்திர குப்தன் எனப்பட்டார். மக்களின் பாவ புண்ணியங்கள் பெருகி விட்டதாலும் அவற்றை வைத்து அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கவும், அடுத்த ஜென்மத்திற்கான பிறவியின் பலன்களைக் கொடுப்பதிலும் பிரமனுக்கு உதவியாகவும் இருக்க யமன் ஒரு நாள் தனக்கு கணக்கு பார்க்க ஓர் உதவியாளன் வேண்டும் என சிவனிடம் விண்ணப்பித்தார். சரி என சொல்லிய சிவன் சித்ரகுப்தனைக் கூப்பிட்டு தேவேந்திரன் பிள்ளைவரம் வேண்டி தவம் இருக்கின்றான். அவன் மாளிகையில் உள்ள காராம்பசு காமதேனுவாகும். அதன் கர்ப்பத்தில் மூன்றே முக்கால் நாழிகை தங்கியிருந்து பிறந்து வளர்ந்துவா! என்றார். அதிகாலையில் இந்திரன் மலராகமாற இந்திராணி ஏடும் எழுத்தாணியுமாக மாறி சுனை நீரில் கலக்க காமதேனு இவைகளை தன் வயிற்றினுள் வைத்து சில நாழிகை கழிந்தபின் வெளியில் அனுப்ப பத்து மாதங்களுக்குப் பின் காமதேனு ஒரு மகனைப் பெற்றது. சித்ரா பவுர்ணமியன்று பிறந்து சித்திரை புத்திரன் என வளர்ந்து வந்தார். உரிய காலம் வந்ததும் தன் பிறப்புபற்றி தேவேந்திரனிடம் கூறிவிட்டு ஈசனை வணங்கி யமனிடம் கணக்கராக அமர்ந்து தன் பணியை செவ்வனே செய்து வருகின்றார். பிறப்பு இரகசியங்களைக் காப்பதால் குப்தர் எனக் கூறப்பட்டு சித்ரகுப்தரானார்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)