குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
அஷ்டாஷ்ட திரு உருவங்கள் (64)
ஓம்நமசிவய!
தீயின் மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியின் இரண்டாய் வதிந்தாய் போற்றி!
வெளியின் ஒன்றாய் விளங்கினாய் போற்றி!
உலகனைத்துமாய் ஒளிர்வாய் போற்றி!
உவந்தன் சரணம் அடைந்தோம் போற்றி!
செய்வினை முதலும் நீயே போற்றி!
கங்காதரர், கங்காதரமூர்த்தி!
கயிலையில் சிவபிரான் வீற்றிருக்கும்போது உமை விளையாட்டாக அவர் கண்களை மூட அனைத்துலகங்களுக்கும் பேரொளியாய் இருக்கும் பொருமானின் கண்கள் மூடப்பட்டதும் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உயிர்கள் என்ன நடந்தது எனப்புரியாமல் தத்தளிக்க உயிர்களின் துன்பத்தைப் போக்க இறைவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து உலகம் ஒளிபெறச் செய்தார். திங்கள் செஞ்சுடர், தீ முதலிய சுடர்களுக்கும் ஒளியூட்டினார். தன் விளையாட்டு செயலால் நடந்ததை உணர்ந்த உமை விழிகளை மூடிய கரங்களை எடுத்தார். இருந்தாலும் அந்த நிகழ்வால் அச்சம் ஏற்பட்டு அவரது உடம்பில் வியர்வைத் துளிகள் தோன்றி கங்கை நீராகப் பெருக்கெடுக்க அந்த வேகத்திலிருந்து உயிர்களைக் காக்க சிவன் அந்த கங்கை நீரை தனது தலைச் சடையின் நுனியில் தரிக்க உலக உயிர்கள் நிம்மதி அடைந்தன. உயிர்களுக்கு ஈடில்லாத ஆனந்தம் தருபவர். இவ்வாறு கங்கையின் நீர்பெருக்கை தன் சிகையில் தரித்து அடக்கிய வடிவம்- கங்காதர மூர்த்தி.
சிவன் தன் இடக்காலை வளைத்து வலக்காலை நேராகத் தரையில் ஊன்றி நிற்கும் நிலை. உமையை முன் இடக்கையால் அனைத்தபடி கன்னத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாவனை. பின் வலக்கை மழுவுடன் கங்கை பொருந்திய சடையைத் தொட்டவாறும், இடக்கை மானுடனும் இருக்கும். உமையின் வலக்கால் நளினமாக ஓரளவு வளைந்து இடக்கால் நிமிர்ந்தும் இடக்கை மலரேந்தியும் வலக்கை தொங்கியவாறு காணப்படும். காட்சி: சிவாலயங்களில் தேவகோட்டத்தில்.
#####
சண்டதாண்டவ மூர்த்தி-காளிகாதாண்டவ மூர்த்தி!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
அடியார் உள்ளக் கோயிலாய் போற்றி!
அறக் கருணை புரி அழகா போற்றி!
பொருள் நான்கினையும் தருவாய் போற்றி!
புகுந்தென் உள்ளம் பிரியாய் போற்றி!
மண்ணின் ஐங்குணம் ஆனாய் போற்றி!
நீரிடை நான்காய் நின்றாய் போற்றி!
சண்டதாண்டவ மூர்த்தி-காளிகாதாண்டவ மூர்த்தி!
நிசும்பன், சும்பன் அசுரர்களின் துன்பங்களைத் தாங்கமுடியாமல் தேவர்கள் பார்வதியை நோக்கித் தவமிருக்க, பார்வதி இறைவன் அனுமதியுடன் அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். அம்பிகையின் அழகைக் கேள்வியுற்ற நிசும்பன் தன்னை மணக்க தூதனுப்ப, என்னைப் போரில் வெல்பவரையே நான் மணக்க இயலும் என்று செய்தியை அனுப்ப, போர் நிகழ்ந்தது. சண்டன், முண்டன், நிசும்பன், சும்பன் அனைவரையும் அன்னை மாய்த்தாள். அப்போது போர் புரிந்த ரத்தபீசனன் உடலிருந்து எத்தனைச் சொட்டு இரத்தம் சிந்துகிறதோ அந்த அளவுக்குப் பல ரத்த பீசர்கள் உருவாகி போரிட்டனர். அவன் அழிந்தாலன்றி போர் முடிவுறாது என்பதை அறிந்த அன்னை சிவன் உதவியுடன் காளியைத் தோற்றுவித்தார்.
காளி ரத்தபீசனின் இரத்தம் பூமியில் விழுந்து உயிர் பெறுமுன்னரே அதைக் குடித்துவிட அன்னை அவனை வெட்டிச் சாய்த்தார். மகிழ்ந்த அம்பிகை காளிக்கு சண்டி எனப் பெயரிட்டு இறைவனுடன் நடனம் ஆடும் பேரினையும் அளித்தாள். அம்பிகை வரம் அளித்ததாலும் ரத்தபீசனின் இரத்தத்தைக் குடித்ததாலும் காளிக்கு ஆணவம் ஏற்பட்டு சினம் கொண்டு காண்போரை நடுங்க வைத்தாள். இச்செய்தி கேட்ட சிவன் காளியின் ஆணவப்போக்கினை அகற்ற காளி இருக்கும் திருவாலங்காட்டினை அடைந்தார்.
சிவனின் படைகளுடன் மோதிய காளியின் படைகள் அழிந்தன. காளி அவரை நடனப் போட்டிக்கு அழைத்தார். இருவரும் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது இறைவனுடைய திருச்செவியிலிருந்த குண்டலமானது நடன வேகத்தில் விழ அதை நடனமாடியபடியே காலினால் எடுத்து காதிலே அணிந்தார் இறைவன். இந்தகைய ஆட்டத்தை காளியினால் ஆடமுடியவில்லை. அதனால் தோல்வி அடைந்தாள்.
சிவனின் ஐந்தாவது செயலாகிய அருளல் செயலை குறிக்கும் வடிவம். மிகவேகமாகச் சுழன்று ஆடியதால் சண்ட தாண்டவம் எனப்பட்டது. ஒரு காலை தலைவரையில் மேலே தூக்கி ஆடுவதாகையால் ஊர்த்துவ தாண்டவம், வீடு பேற்றினைத் தருவதாகிய அனுக்கிரகத்தின் பொருட்டுச் செய்ததாகையால் அனுக்கிரக தாண்டவம் எனப்பட்டது. காளியின் செருக்கை அடக்க மிக வேகமாக விரைவான கதியில் ஆடிய நடனம். நிகழ்வு நடைபெற்றத் தலம்: திருவாலங்காடு.
#####
ஓம்நமசிவய!
கருணை முதிர் இளங்கன்றே போற்றி!
கரகம் கவிழ்த்த கரியே போற்றி!
கயமா முகனைக் கடிந்தாய் போற்றி!
விக்ன விநாயகா விமலா போற்றி!
எனை நினைந்தடிமை கொள்வாய் போற்றி!
உனை நான் நினைய அருள்வாய் போற்றி!
சதா நிருத்த மூர்த்தி!
எல்லா உயிர்க்கும் அவரவர் நிலைக்கேற்ப ஆணவமல இருளைப் போக்கி வினைகளை அகற்றி பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய முத்தி அருளுதற் பொருட்டு பஞ்சாட்சரமே திருமேனியாகக் கொண்டு ஐந்தொழில்களையும் ஒருசேர இயற்றும் பஞ்சகிருத்திய திருநடனத்தை எஞ்ஞான்றும் இயற்றும் அருள் வடிவே சதா நிருத்த வடிவமாகும். இந்த தாண்டவமே உலகம் படிக்கவும், வினைப்போகம் உள்ளவும் காக்கவும், பின்னர் ஒடுக்கவும், வினைகளை மறைத்தல் தொழிலால் நுகர்விக்கவும் பின் அருளவும் பயன் படுகின்றது.
சிவனின் கையிலுள்ள துடி படைத்தலைக் காட்டும்- துடியைக் கொட்டுவதால் ஆன்மாக்களின் மாயையை உதறுகின்றான்., அபயகரம் காத்தலைக் காட்டும்- உயிர்களை இன்பக் கடலில் திளைக்கச் செய்கின்றான்., கையிலுள்ள நெருப்பு அழித்தலைக் காட்டும்- அதனால் கன்ம மலத்தினைச் சுடுகின்றான்.. முயலகன் மீது ஊன்றிய பாதம் மறைத்தலைக் காட்டும்-ஆணவ மலத்தை அழுத்தித் தேய்விக்கின்றான். தூக்கிய திருவடி அருளலைக் காட்டும்-உயிர்களைப் பிறவிக் கடலிலிருந்து எடுக்கின்றான். இதையே பஞ்ச கிருத்தியம் என்பர். மலங்களை நீக்கி ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தும் அம்பலத்தானின் திருக்கோலத்திற்கேற்ப இவ்வுலகம் இயங்குகின்றது.
ஐந்தொழிலால் உலகைத் தொழிற்படுத்தற் பொருட்டாகக் கொள்வதை ஊன நடனம் என்றும் இவ்வகைத் தொழிலால் அருள் செய்வதை ஞான நடனம் என்று கூறலாம் நான்கு கரங்களும் மூன்று கண்களும், பரந்த சடையும், பொன்னிறமும் கூடியவராய் மயில் தோகை சூடிய முடியின் வலப்பக்கம் பிறையும் ஊமத்த மலரும், வலச்சடையின் நுனியில் கங்கையையும் புனைந்து வலக்காதில் மகரகுண்டலம், இடக்காதில் இலையும் பூண்டு, அணிகள் பல அணிந்து புலித்தோல் உடுத்தி பின் வலக்கையில் உடுக்கை பின் இடக்கையில் தீயகலும், முன் வலக்கையில் அபயமும், முன் இடக்கையை நீட்டி ஆடும் தாண்டவம். வலது காலை முயலகன் மீதும் இடது காலை வலப்பாகமாக நீட்டி ஆடுகின்றார். பஞ்சகிருத்திய நடனத்தை ஏஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம்..காட்சி: தில்லை
#####
ஓம்நமசிவய!
பரமன் ஆகிய கணேசா போற்றி!
பாரதம் எழுதி பரூஉக்கர போற்றி!
மாரத அச்சொடி மதவலி போற்றி!
சித்தி யானை தன் பொற்பதம் போற்றி!
சச்சிதானந்த போகமே போற்றி!
காரணனே எம் கணபதி போற்றி!
சந்தியா தாண்டவ மூர்த்தி!
சிவபெருமானைக் கலந்து ஆலோசிக்காமல் அசுர்ர்களும், தேவர்களும், பிரம்மனும், திருமாலும் ஒன்/றுகூடி அமுத்த்தைப் பெற திருப்பாற்கடலைக் கடைவதென்று முடிவெடுத்து மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி, பாம்பின் தலைப் பகுதியை அசுர்ர்களும் வால்பகுதியை தேவர்களும் பிடித்து கடையத் தொடங்கினர். மந்தார மலை உறுதியாய் நிற்காமல் நிலை பிறழ, திருமால் ஆமை வடிவம் கொண்டு அதனைத் தாங்கிப் பிடித்தார். வேகமாகக் கடைய வாசுகி வலியால் துடித்து ஆலகால நஞ்சைக் கக்கியது. திருமால் அதனால் கருகினார். தேவர்களும் அசுரர்களும் இப்போதிருக்கும் வாழ்நாளையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது சிவன் ஞாபகம் வர அனைவரும் ஒன்று சேர்ந்து அபயக் குரலில் அழைக்க வந்த சிவன் நிலையறிந்து அந்த நஞ்சினை சுந்தரர் எடுத்து தர விழுங்கினார். சிவன் சிறிது நேரம் கண்ணயர உமை உபசரிக்க அமரர் சிவனை அர்ச்சித்தனர். தேவர்கள் இரவு முழுவதும் கண்விழித்திருந்தனர். அந்த இரவே ஏகாதசி எனப்படும். இறைவனின் திருப்பெயரை அன்று இரவு முழுவதும் மற்றும் அடுத்த நாளும் போற்றிக் கொண்டாடினர். அந்நாளை நாம் துவாதசி என்கின்றோம். அதற்கு அடுத்த நாளான திரயோதசியில் சிவன் எல்லோரும் காண சூலத்தைச் சுழற்றி தாருகமேந்தி ஒரு ஜாமப்பொழுது ஆடினார். அக்காலத்தை வேத ஆகமங்கள் பிரதோசம் என்கின்றன.
நித்ய பிரதோசமான மாலையும் இரவும் கலக்கும் பொழுதில் திருக்கயிலையில் சிவன் நடனமாடுவார். அம்பிகை அருகிலிருந்து காண நடனம் செய்யும் கோலத்தில் இருக்கும் வடிவமே மாலைநேர நடன வடிவம். இத்திருக்கோலத்தை காண்பவர்கள் தங்களது பாவங்கள் தோலைந்து புதிய வாழ்வினைப் பெறுவார்கள்.
பிரதோச காலமும், மாலைநேர நடனக் கோலமும் உணர்த்துவது என்ன வென்றால் அனைத்திற்கும் மூலமான சிவனாரின் அனுமதியின்றி செய்யப்படும் எந்தக் காரியமும் நிறைவடையாது. இதனை கௌரி தாண்டவம், இலக்குமி தாண்டவம், ரட்ச தாண்டவம், சந்தியா தாண்டவம் என்பர்.
இறவனுக்கு எட்டு அல்லது நான்கு கைகள். வலக்கைகள் இரண்டில் துடியும், அபய முத்திரை / மயிலிறகு இஅக்கைகள் இரண்டில் பாம்பும், கஜ அஸ்தம் இருக்கும். இடப்புறத்தில் நந்தி மற்றும் கௌரி / திருமால் இருப்பர்.
இன்பக்காத்தல் செயலைக் குறிக்கும் மாலைநேர நடனமான சந்திய தாண்டவம். காட்சி: கூரம் (காஞ்சி), திருமழபாடி, திருப்பரங்குன்றம், எல்லோராக் குகை.
#####
ஓம்நமசிவய!
பரில சேடம் அளிப்பாய் போற்றி!
எண்ணிய எண்ணியாங்கு ஈவாய் போற்றி!
தண்கடமாமுகத் தலைவா போற்றி!
முக்கட் செம்மேனியெனே போற்றி!
முக்கட் பரமாம் முதல்வா போற்றி!
வரம் எல்லாம் தரு வள்ளல் போற்றி!
புஜங்கத்திராச மூர்த்தி,!
பாம்புகளை அடக்கிய துன்பக் காத்தல் செயல்- உயிர்கள் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப துன்பங்களைக் கொடுத்து அவற்றின் வினைகளை அழித்து காத்தல் துன்பக்காத்தல் எனப்படும்.
தவத்தில் சிறந்த தருகாவன முனிவர்கள் தவமே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற ஆணவத்தால் சிவத்தை மறந்தனர். அவரின் மனைவியர் கற்பில் சிறந்து விளங்கினாலும் கற்பே சிறந்தது என்று அவர்களும் சிவனை மறந்தனர். ஊழ்வினை காரணமாக இவ்வாறு மறந்த அவர்களின் கருத்தை மாற்ற இறைவன் திருவுளம் கொண்டு திருமாலை மோகினி உருவமெடுத்துவரச் செய்து பெருமான் அழகிற் சிறந்த ஆணுருக் கொண்டார். நிருவாண உருவுடன் சூலம், பிச்சைப் பாத்திரம், ஆகியவற்றுடன் மோகினி உடன்வர தாருகாவனம் அடைந்தார்.
மோகினியின் அழகைக் கண்ட தாருகாவன முனிவர்கள் மனவலிமை குன்றி அவள் பின் சென்றனர். சிவனின் நிருவாண வடிவம் கண்ட முனிவர்களின் மனைவியர் கற்பினை இழந்தனர். அவர்மீது ஆசைக்கொண்டு அவர்பின் சென்றனர். உண்மையறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி நடத்தி அதில் தோன்றிய புலி, மழு, மான் கன்று ஆகியவற்றை ஏவினர். அவற்றைவையெல்லாம் உடை, பாதச்சிலம்பு, ஆயுதம், சிரோமாலை, சேனை ஆகியவையாக மாற்றினார். யாகத்திலிருந்து கொடிய நாகங்கள் இறைவன்மீது ஏவப்பட அவைகள் தங்களிடமுள்ள காளி, காளாஸ்திரி, யமன், யமதூதன் ஆகிய நான்கு நச்சுப் பற்களால் அண்ணலை அணுக ஆதிநாளில் கருடனுக்கு அஞ்சி தம்பால் சரணடைந்த பாம்புகளை உடலில் தாங்கிருந்தவர், அவைகளுடன் இப்பாம்புகளையும் ஏற்று ‘உமது குலத்தாருடன் ஒன்றுகூடி வாழுங்கள் என்று அவைகளை திருக்கரம், திருவடி, அரை முதலிய இடங்களில் கங்கணம், காலனி, அரைநாண் முதலியவனவாக அணிந்தார். எந்த நாகங்களுக்கும் கெடுதல் செய்யாமல் தாமும் தம் பகைவர்களைச் சீறிப் பயமுறுத்தவேண்டும் ஆனால் தீங்கிழைக்கலாகாது என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தும் வடிவம் புஜங்கதிராச மூர்த்தியாகும்.
சிவனின் மறக்கருனையாகிய துன்பக் காத்தல் செயலைக் குறிக்கும் நடனம் புஜங்கத்திராச நடனம் எனப்படும். நிகழ்வு நடந்த தலம்: திருப்புத்தூர்
#####
ஓம்நமசிவய!
மதிப்பவர் மனத்துறு மணியே போற்றி!
நெடும்பொறிற் சரணம் அடைந்தோம் போற்றி!
நெஞ்சத்து ஒடுங்கும் நீரினாய் போற்றி!
ஆரண நுண்பொருள் ஆனாய் போற்றி!
ஆட்கொண்டருளும் அரனே போற்றி!
பக்தர் சித்தத்தை அறியுமானாய் போற்றி!
புஜங்கலளித மூர்த்தி!
பயன்களை உயிர்களுக்கு கொடுத்து அருளும் இன்பக்காத்தல்- என்ற இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல், துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த தன்வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக்கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். இன்பக்காத்தல் தொழிலைக் குறிக்கும் நடனம் புஜங்கலளித நடனம் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.
காசிப முனிவரின் மனைவியருள். கத்துரு, வினதை இருவருக்கும் தங்களுள் யார் சிறந்த அழகி எனப் போட்டி வர இருவரும் கணவரிடம் சென்று கேட்க காசிபர் கத்ருவே அழகில் சிறந்தவள் எனக்கூறிவிட்டதால் இருவரின் நிபந்தனைப்படி தோற்ற வினதை கத்ருவிற்கு அடிமையாக இருத்தல் வேண்டும். வினதை தன் இளய மகன் கருடனிடம் இதுபற்றிக்கூற அவன் தன் பெரியம்மாவிடம் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க கத்துரு தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டுவந்தால் விடுவிக்கின்றேன் எனக்கூறினாள்.
கருடன் தேவலோகத்தில் அமிர்த கலசத்தை காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு வென்று அமுத கலசத்தை கைப்பற்ற திருமால் அவனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால் உனக்கு வேண்டும் வரம் கேள் எனக்கூற கருடன் சிரிப்புடன் நீ யார் எனக்கு வரம் தருவதற்கு நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள் என ஆணவத்துடன் கூற சரியான சந்தர்ப்பம் என்று திருமால், பாம்புகளுக்கு அமுது ஊட்டலாகாது. நீ எனக்கு வாகனமாக வேண்டும் என்று இரு வரம் கேட்க உண்மையைப் புரிந்த கருடன் அகந்தை அழிந்து பாம்புகளுக்கு எதிரியாகவும் திருமாலுக்கு வாகனமாகவும் மாறினான். அமுத கலசத்தை கொண்டுவந்து தன் தாயை விடுவித்து அமிர்தத்தை தர்ப்பைமேல் ஊற்றினான்.
திருமாலின் வாகனமான கருடனைக் கண்டு பாம்புகள் அஞ்சின. அவைகள் ஒரு லிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தன. காட்சி கொடுத்த சிவனிடம் தங்களிடம் அருள் பெற்றதாலும், திருமாலின் வாகனமானதாலும், மாற்றான் தாய் மகனானதாலும் கருடன் எங்களை கொல்வதால் அவனால் எங்களுக்கு இறவா வரம் அளிக்க வேண்டின. அவைகளுக்கு அருள் புரிந்து அவைகளைத் தனது மேனியில் ஆபரணங்களாக அணிந்துகொண்ட வடிவமே புஜங்கலளித மூர்த்தி. புஜங்கம்- பாம்பு, லளிதம்- அழகு செய்தல். நிகழ்வு நடந்த தலம்-திருப்புத்தூர்.
#####
ஓம்நமசிவய!
வேழமுகத்துக் கடவுளே போற்றி!
பேழைபெரு வயிறுடையாய் போற்றி!
இருகையுடைய எந்தாய் போற்றி!
ஒருகை லிங்கம் எந்தினாய் போற்றி!
மணம்விரி மலர்த்தொடை சூடினாய் போற்றி!
மாமதச் சிந்தூரக் களபமே போற்றி!
இடபாந்திகர்!
2000 சதுர்யுகங்களை கொண்டகாலம் நான்முகனின் ஒருநாள். அத்தகைய நாட்களையுடைய ஆண்டுகள் நூறு கொண்டது அவரின் ஆயுள். அது திருமாலின் ஒரு நாள். அப்படி நாட்களைக் கொண்ட நூறு ஆண்டுகள் கழிந்தால் உலகின் எல்லா ஆன்மாக்களும் அழியும். இது பேரூழிக்காலத்தின் நிலையாகும். அப்போது பரம்பொருளாகிய சிவன் உமா காண ஊழித்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். அனைத்து உயிர்களும் அந்தப் பிரளயத்தில் ஒடுங்கிக் கொண்டிருந்தது. அப்போது தருமதேவதை தானும் அவ்வாறு ஒடுங்க வேண்டி வருமென அஞ்சி இடப வடிவம் கொண்டு சிவனிடம் தஞ்சமடைந்தது. அதற்கு அஞ்சேல் எனக்கூறி கிருதாயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களுடனும், கலியுகத்தில் ஒரு காலுடனும் இடபமாக இருக்க அருள். ஒவ்வொரு யுகத்திலும் தருமம் வீழ்ச்சியடைந்து அதன் நிலை மாறுபடும் என்பதை உணர்த்தவே இவ்வாறு அருள் புரிந்துள்ளார். எல்லாம் அழியக் கூடிய ஊழிக்காலத்தில் தர்மதேவதையாகிய வெள்ளிடையை ஆதரித்த காரணத்தால் சிவபெருமான் இடபாந்திகர் எனப்பட்டார்.
இடபமாகமாறிய தர்மதேவதை-அறத்திற்கு உயிர் கொடுத்த தயாநிதி. காளையின் மீது சாய்ந்தபடி அதன் கொம்புகளுக்கு இடையில் தனது கரத்தினை வைத்த தோற்றம் இடபாந்திகர் வடிவமாம். காட்சி: திருவாவடுதுறை
#####
ஓம்நமசிவய!
ஓம் எனும் பொருளே ஒப்பிலாப் போற்றி!
உயர்வற உயர்நலப் புகலே போற்றி!
எண்தோனவனின் செல்வா போற்றி!
இமயச் செல்விமகனே போற்றி!
காங்கேயன் மகிழ் தமையா போற்றி!
கற்பக மூர்த்தியாம் கடவுளே போற்றி!
மகாசதாசிவம்!
ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகத்தில் ஒவ்வொன்றுக்கும் ஐந்து முகங்கள் என 25 மகேஸ்வர வடிவ முகங்களுடன் சிவனின் அளவிலா ஆற்றலை உணர்த்துதல். துய்மையின் சிகரமாக விளங்கும் மகாசதாசிவர் 25 முகங்கள் 50 திருக்கைகள் கொண்ட போக, அதிகாரம் அடங்கிய மூர்த்தியாவார். கயிலையில் மலர்ந்த தாமரைமேல் எண்ணற்ற சூரியர்களிடத்தில் காணப்படும் பேரொளியை உடையவராய், வெண்ணீறு பூசி, பாம்பு பூணூல் அணிந்து, ஒவ்வொரு முகத்திலும் முக்கண்ணுடன் அமர்ந்திருப்பார். கயிலையிலிருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவர். அவரது 25 வலது கைகளில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், பரசு, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சுரிகை(சிறுகத்தி), கொடி, தண்டம், வச்சிரம், குந்தம், அஸ்திகம் ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் ஆகியனவும் 25 இடது கைகளில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், கோடாரி, முத்தகம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்தரிக்கோல், உலக்கை, மயில்தோகை ஆகியனவும் வைத்திருப்பார். காட்சி: கோபுரங்களில் சுதைவடிவில்-மதுரை, காஞ்சிபுரம், வைத்தீஸ்வரன்கோவில், தில்லை.
#####
ஓம்நமசிவய!
வரத விநாயகா போற்றி!
ஜோதி விநாயகா போற்றி!
விஜய விநாயகா போற்றி!
வினைதீர் விநாயகா போற்றி!
சதாசிவம்!
உச்சியில் ஈசானம் சுத்த பளிங்கு நிறத்துடனும், கிழக்கில் தத்புருடம் கோங்கின் பூ நிறத்துடனும், தெற்கில் அகோரம் கருநிறத்துடன் அவிழ்த்த தாடியுடனும், வடக்கில் வாமதேவம் செம்பவள நிறத்துடன் பெண்முகத் தோற்றத்திலும், மேற்கில் சத்யோசாதம் பால் நிறத்துடன் குழந்தை முகத்தோற்றத்திலும் வெளிப்படையாக ஐந்து முகங்களைக் கொண்டு முகங்கள் தோறும் மூன்று கண்களுடனும் 10திருக்கரங்களுடன் சிவ ஆகமத்தை உபதேசிப்பவர்.
திருமுடிகளில் கொன்றை மாலையையும், பிறைச்சந்திரனையும் சூடி கழுத்தின் கீழ் சுத்த பளிங்கின் நிறத் திருமேனியும் வலப்பக்க ஐந்து கைகளில் அபயம், சூலம், வேல், மாத்திரைக்கோல், தமருகம் ஆகியனவும், இடப்பக்க ஐந்து கைகளில் வரதம், மாதுளம்பழம், நாகம், செபமாலை, நீலோத்பலம் ஆகியவற்றுடன் இரு திருவடிகள் கொண்டு பதுமாசனத்தில் எழுந்தருளியிருப்பார்.
சிவ வடிவத்தில் சதாசிவ வடிவமே எல்லா வடிவங்களுக்கும் பிறப்பிடமகும். ஆகமம் என்பதில் ‘ஆ’ என்பது ஞானமும், ‘க’ என்பது மோட்சமும், ‘ம’ என்பது ஆணவ நாசமும் ஆகும். உலக உயிர்களின் ஆணவத்தை நாசம் செய்து அனைத்து உயிர்களையும் உய்விப்பதற்காக தொன்றியவையே ஆகமங்கள். ஆகமங்களை அருள தோன்றிய வடிவம் சதாசிவம். அவரிடமிருந்துதான் 28 சைவ ஆகமங்கள் தோன்றின. அவைகள் காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூட்சமம், சகஸ்ரம், அம்சுமத், சுப்ரபேதம், விசயம், நிச்வாசம், வாயம்புவம், அனலம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோத்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனப்படும்.
மேலும் அவரிடமிருந்துதான் நான்மறை வேதங்களும் தோன்றின. வேதமும் ஆகமங்களும் சதாசிவபெருமானால் அருளப்பட்டதால் அவை தம்முள் சிறிதும் பேதமின்றி இயங்கும் தன்மையுடையவை. காட்சி: மதுரை, சுதைவடிவில்- மதுரை, திருவிடை மருதூர், தஞ்சை.
#####
ஓம்நமசிவய!
வெற்றி விநாயகா போற்றி!
வேத விநாயகா போற்றி!
வீர கணபதியே போற்றி!
வைர விநாயகா போற்றி!
முகலிங்கம்!
உருவ வழிபாட்டில் மூர்த்தங்களின் வழி எளிதாக இறைவனை அறிந்து பயன்பெற ஒன்று முதல். ஐந்து வரை பூசாபாகத்தில் முகம்- அமைதல் மரபு. அவை 4வகை. 1.ஆட்யம்- லிங்கத்தின் சிவ பாகத்தில் 1000 முகங்களுடன் இருப்பது. 2.அநாட்யம்- முகம் எதுவும் இல்லாதது. 3.சுரேட்யம்- பூசா பாகத்தில் 108 முகம் உடையது. 4.சர்வசம்- இது முழு உறுப்புகளுடன் ஒருமுக (கிழக்கு நோக்கிய தத்புருட முகம்) இரண்டுமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், மேற்கு நோக்கிய சத்யோசாதம்), மூன்றுமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம்), நான்குமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம், மேற்கு சத்யோசாதம்), ஐந்துமுக (கிழக்கு நோக்கிய தத்புருடம், தெற்கு நோக்கிய அகோரம், வடக்கு நோக்கிய வாமதேவம், மேற்கு சத்யோசாதம் உச்சியில் ஈசானம்) என்ற ஐந்து வகை முகங்களுடையது.
இவ்வகை லிங்கங்களை கருவரையில் வைக்கும்போது 4கோபுரங்களை உடைய கோவிலில் 4/5 முகலிங்கங்களையும், 3கோபுரங்களை உடைய கோவிலில் 3 முகலிங்கங்களையும், 2கோபுரங்களை உடைய கோவிலில் 2 முகலிங்கங்களையும், 1கோபுரத்தை உடைய கோவிலில் 1 முகலிங்கத்தையும் அமைக்க வேண்டும்.
8- முகம் அஷ்டதார
16- முகம் சந்திரதாரா
32- முகம் தர்மதாரா
64- முகம் சகுசஷ்டி- சிவலீலா சம்த்த லிங்கம்
#####
More...
ஓம்நமசிவய!
விக்னேஸ்வரா போற்றி!
வினை தீர்க்கும் விநாயகா போற்றி!
விஷ்னு விநாயகா போற்றி!
வீம விநாயகா போற்றி!
சிவலிங்கம்!
இலிங்கத் திருவடிவம்- குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனை வழிபாடும் பொருட்டு ஒரு குறியின்கண் (அடையாளமாக) வைத்து வணங்குவது இலிங்கவடிவம் ஆகும். ஒன்றும் புலப்படாத அருவுருவிற்கும், புலப்படும் ஓர் அண்ட வடிவமான பிழம்புருவானது பற்றி உருவமும் கை, கால் முதலிய உருப்புகள் எவையும் புலப்படாமை பற்றி அருவமும் ஒன்றாக காணப்படுவதால் சிவலிங்கம் ‘அருவுருவத் திருமேணி எனப்படும்.
ஆக்கமும் அறிவுமாகிய சம்சாரமானது லயத்தை அடையும்போது பூதாசலங்கள் யாவும் சிருஷ்டி காலத்தில் எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே லயத்தை அடைகின்றன. சிவலிங்கம் அவற்றை படைக்கும் தன்மை வாய்ந்ததால் லிங்கம் எனப்பட்டது. நிட்களமாயும் சாந்தமாயும், மனதிற்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டதுமான அது சம்சாரசாகரத்தில் உழலும் சகல பூதாசலங்களுக்கும் முக்தியைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. எல்லாவற்றிலும் வியாபித்து அவற்றுள் மறைந்து தன் செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது. சிவலிங்கத்திலிருந்து சாந்தி தத்துவமும் அதிலிருந்து சக்தி தத்துவமும் அதிலிருந்து நாதமும் தோன்றியது. லிங்கம், சாந்தி, சக்தி மூன்றும் நிட்களம் எனப்படும் உருவமற்றவையாகும்.
சிவலிங்கம் சகலம்-எல்லாம் எனப்பட்டால் நாதம் பிந்து இரண்டும் மிச்சரம் எனப்படும். நாதம் லிங்க- சிவ வடிவமென்றால் பிந்துவே பீடம்- சக்தி வடிவம். லிங்கமும் பீடமும் ஒன்று சேர்ந்து இருப்பதால் எப்படி நெருப்பும் அதனுடே வெப்பமும் இருப்பதுபோலச் சிவமும் அதனுள்ளே சக்தியும் இருக்கின்றது.
"லிம்’ என்பது லயத்தையும் (ஒடுங்குவது) ‘கம்’ என்பது வெளிவருதலையும் குறிக்கும். எனவே லிங்கம் என்றால் சித்தரித்தல் எனப் பொருள்படும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களாலும் பிரபஞ்சத்தை சிவன் சித்தரிக்கின்றபடியால் சிவலிங்கம் எனப்பெயர். உலகத்தே தோன்றிய அனைத்துப் பொருள்களும் சிவ வடிவக்கூறுகளே என்பது அருளாளர்களின் கருத்து. அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே என்பதுபோல பஞ்ச பூதங்களைத் தன்னுருவாக கொண்ட சகுணப் பர சிவத்தை உலக நன்மைக்காக இலிங்க வடிவமாக்கினர்.
இலிங்கத்தின் அடிப்பாகம் நாற்கோணவடிவமாய் நிலத்திற்குத் தலைவனான படைப்புக் கடவுள் பிரம பாகத்தை உணர்த்துவதாகும். மத்திய பாகம் எட்டுப் பட்டைகளையுடைய எண்கோண வடிவமாய், வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவீகரணி, பலப்பிரதமனி, சர்வப்பூததமனி, என்ற திருமாலின் எட்டு சக்திகளுடன் மனோன்மணி சக்தியும் சேர்ந்து உணர்த்தும் விதமாக அடிப்பாகத்தினோடு பொருத்தப்படும். நீருக்கு அதிபதியான காத்தல் ஸ்திதித் தலைவன் விஷ்ணுபாகம்- ஆவுடை எனப்படும். மேலுள்ள பாகம் நெருப்பிற்கு தலைவனின் சிவபாகமாகும். நிலம்-பூமிக்குள் மறைந்து ஒடுங்கியும்,, நீர்- அபிசேட நீரைத் தாங்கி விரிந்து நின்றும், நெருப்பு-மேலோங்கி சோதிபோல் ஒளியுடனிருக்கும். இந்த மூன்றும் சேர்ந்த அருவமும் உருவமும் அற்ற ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி வடிவம் சிவலிங்கம். எனவே ஒரு லிங்க வடிவம் என்பது பிரம்மன், விஷ்ணு, சிவன் -மகா உருத்திரன் ஆகிய மூவரின் ஒட்டு மொத்தமான ஓர் உருவமாகும்.லிங்காபரணத்தில் சிவனுடன் உமாதேவியும் –உமையொரு பங்கனாக சேர்ந்தே உள்ளார்.
பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.
அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.
பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.
சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.
ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..
ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.
சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.
1. சலலிங்கம் (சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை.
2. அசலலிங்கம் (அசலம்- புடை பெயராதது) ஒன்பது வகைப்படும். 1.சுயம்பு லிங்கம்.-தான்தோன்றி லிங்கம். எவராலும் தோற்றுவிக்கப் பெறாமல் இயற்கையாகத் தாமே தோன்றிய லிங்கங்கள். 2.தைவீகலிங்கம்- திருமால், நான்முகன் ஆகியோர்களால் நிறுவப்பட்டு வழிப்படப்படும் லிங்கங்கள். 3.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை. 4.மானுடலிங்கம்- மானிடர்களால் நிறுவப்பட்டு வழிப்படப்படும் லிங்கங்கள். இவை அட்டோத்திரலிங்கம் (108சிவலிங்கங்களை உடையது), சகஸ்ரலிங்கம்(1008 வரைகோடுகளில் காண்பது), தாராலிங்கம் (பூசா பாகத்தில் 64 பட்டைகளுடன் தீட்டிய நிலை, முகலிங்கம் (உருவ வழிபாட்டின் மூர்த்தங்களின் வழி இறைவனை அறிந்து பயன் பெறமுன்னோடி) என 4வகைப்படும். 5.ஆரிடலிங்கம்- முனிவர்களால் நிறுவப்பெற்று வழிபடப் படுபவை. 6.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை. 7.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது. 8.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம். 9.சணிகலிங்கம்- மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், நாணல், மலர்மாலை, சர்க்கரை, அரிசிமாவு, திருநீறு, பழம், தண்ணீர், தயிர் ஆகிய 16 பொருள்களால் செய்து நிறுவப்பட்டுபூசை செய்ததும் கைவிடப்படுபவை.
லிங்க பூஜை பலன்கள்!
மண்லிங்கம் -பூஜை விருப்பங்கள் நிறைவேறும்.மலர்களால் அர்ச்சனை-சித்தி
ரத்தினலிங்கம் -பூஜை லட்சுமிகடாட்சம்.
பவழலிங்கம் -பூஜை நிலையான செல்வங்கள்.
உலோகலிங்கம்-பூஜை தர்மம் செய்தபலன்கள்.
சிவலிங்க பிரதிஷ்டை செய்தவர்கள் முக்தி
சிவலிங்க பிரதிஷ்டையைப் பார்த்து தானும் அவ்வாறு சிவலிங்க பிரதிஷ்டை செய்ய நினைத்தால் அவர்களின் பாவங்கள் அக்கணமே மறையும்.
சிவனுக்கு கோயில் எழுப்புவர்கள் தங்களது நூறு தலைமுறையில் உள்ள பிதுர்களுக்கு சிவபதி அடையும் பாக்கியம்.
கருங்கல்லால் கோயில் எழுப்புவர்கள் அத்தனை ஆயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் இருக்கும்பேறு என ஆகமங்கள் பகர்கின்றன
சகஸ்ரலிங்கம்!-
உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தவம் புரிந்த ஆயிரம் முனிவர்களுக்கு காட்சியளித்து தன்னிடமிருந்த சிவ ஆகமங்களை தந்து தான் திரும்பி வரும் வரை பாதுகாக்கும்படி சொல்லி மறைந்தார். குழந்தை வடிவில் தன்னை தரிசிக்க விரும்பி தவமிருந்த மண்டோதரிக்கு அருள்புரிய இலங்கை சென்று காட்சி அருளியபோது வந்திருப்பது யார் என்பதை அறிந்த மண்டோதரி ஆனந்தப்பட்டு சிவ குழந்தையை எடுத்துக் கொஞ்ச அங்கு வந்த சிவநேசனான இராவணன் உண்மையறிந்து - குழந்தையை எடுக்க முற்படும்போது இறைவன் மேனியை இலங்கேஸ்வரன் தீண்டிய உடன் மறைந்து இங்குத் தீர்த்தக் குளத்தில் தீப்பிழம்பாக தோன்ற ஒரு முனிவர் நீங்கலாக 1000 முனிவர்கள் பரவசமடைந்து குளத்தில் குதிக்க, அந்த முனிவர் இறைவனின் ஆகமங்களைக் காப்பது தன் கடமை என அப்படியே அமர்திருந்தார். அவர்க்கு ரிஷிபாரூடராக காட்சி. அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்ய அருள் - அவரே மாணிக்கவாசகர். குளத்தில் குதித்த முனிவர்கள் லிங்கங்களாய் மாற அவர்களின் நடுவே தானும் லிங்கமாய் வீற்று சகஸ்ரலிங்கமாய் காட்சி அருள்.
ஜோதிர்லிங்கங்கள்!
குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு திகழ்ந்திருப்பது சிவலிங்கமாகும். சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, முக்தி, மங்களம், செம்மை, உயர்வு, களிப்பு, அருவுருவ நிலை எனப் பலப்பொருள் கூறலாம். செம்மையும், நன்மையும், மங்கலமும் உடையான் என்பதற்காகச் சிவனைச் சிவம் என அழைத்தனர். எண் குணத்தானாகிய சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன் ஆவான். நான்முகனும் திருமாலும் அடிமுடி காணாதவாறு அனைத்து அண்ட உலகங்களையும் அளந்து நின்ற அரும் பெரும் ஜோதிதான் லிங்கம்! சோதி வடிவினனாகச் பரஞ்சோதியாய் சிவன் தோன்றிக் காட்சி கொடுத்த தலங்களே ஜோதிர்லிங்கத் தலங்கள். அவை திரியம்பகம், குசுமேசுவரம், நாகேசுவரம், வைத்தியநாதம், பீம்சங்கரம், மகாகாளம், ஓங்காரேசுவரம், கேதாரம், விசுவேசம், சோமநாதம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
வக்கிர துண்ட விநாயகா போற்றி!
வாதாபி கணபதியே போற்றி!
விகட கணபதியே போற்றி!
விக்கின விநாயகா போற்றி!
சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்!
நான்முகனின் மகன் தக்கன்-தட்சன். தன் 27 நட்சத்திரப் புதல்வியரை சந்திரனுக்கு மணம் முடிக்க சந்திரன் அந்த 27-வரில் ரோகினி, கார்த்திகை ஆகிய இருவரிடம் மட்டும் காதல் கொண்டிருந்தான். மற்ற பெண்கள் இதனை தன் தந்தையிடம் சொல்ல அவன் சந்திரனுக்கு தேய்ந்துபோக சாபமிட்டான். சந்திரன் சிவனிடம் சரணடைந்தான். எத்தனை பாவங்கள் செய்தாலும் மன்னிப்பு வேண்டினால் மன்னித்து அருளும் சிவன் காலில் விழுந்த சந்திரனை தன் தலையில் சூடிக்கொண்டார்.
இந்த வடிவம் 1.கேவல சந்திரசேகரர், 2.உமாசகித சந்திர சேகரர், 3.ஆலிங்கன சந்திரசேகரர் என மூவகைப்படும்.
1.கேவல சந்திரசேகரர்- உமை அருகில் இன்றி சிவன் மட்டும் பிறைசூடிய நிலை இதுவாகும். கேவல என்றால் தனித்து நிற்றல் என்பதாகும். நான்கு கரங்கள். வலக்கரங்கள் இரண்டிலும் டங்கமும், அபயமும் கொண்டிருப்பார். இடக்கரங்களில் மானும், வரதமும் விளங்கும். வலப்புறம் / இடப்புறம் தலையில் பிறை திகழும்.
2.உமாசகித சந்திர சேகரர்- நின்றகோலத்தில் பின் இருகரங்களில் மான் மழு ஏந்தி, முன் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகள் திகழக் காட்சி. இடப்பக்கம் உமா நின்ற கோலத்தில் வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இடக்கரத்தை தொங்கவிட்டவாறு காட்சி.
3.ஆலிங்கன சந்திரசேகரர்- 1.சந்திர சேகரரின் இடது கை தேவியின் இடது மார்பகத்தின் அருகில் தழுவியபடியும், தேவியின் வலது கையில் சிவந்த தாமரை மலர் இருக்கும். 2.தேவியின் வலக்கரம் சிவனின் வலது மார்பகப்பகுதியை தழுவியபடியும் இடது கரம் தமரை மலருடனும் அல்லது 3.சிவன் உமை இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடியும் மூன்று நிலைகளில் இருக்கும். எல்லா நிலைகளிலும் இறைவன் பிறை சூடி இருப்பார்.
பொருந்திருவிழாக்களில் காலையில் சந்திர சேகரரும் இரவில் சோமாஸ்கந்த மூர்த்தியும் உலா வருவார். கொடியேற்றம் இல்லாத விழாக்களில் சந்திரசேகர் வலம் வருவார். முன்வினை அற்றுப்போகச் செய்பவர் சந்திர சேகரர். காட்சி: மதுரை, திருவாவடுதுறை, மருதாந்த நல்லூர், கோயிலூர்
&&&&&
ஓம்நமசிவய!
லம்போதர கணபதியேபோற்றி!
வல்லபை விநாயகா போற்றி!
வரசக்தி விநாயகா போற்றி!
வன்னி விநாயகா போற்றி!
கல்யாணசுந்தரர்-மணவழகர்!
ஞானமே வடிவாக விளங்கும் இறைவியைச் சத்தியமே வடிவான இறைவன் கூடுவதையே- சத்ய ஞான இனைப்பே இறைவன் திருமணம். எங்கு சத்தியமும் ஞானமும் இனைகிறதோ அங்கு ஆனந்தம் கிட்டும். அருள் சத்தியோடு உலகம் இன்புற்றிருக்க ஞானசிவன் கொண்ட இனைப்பின் ஆனந்த வடிவம் கல்யாணசுந்தரர். திருமணத்தடை விலக அருள்.
இறைவனும் உமாதேவியும் கிழக்கு நோக்கி இருப்பர். கன்னிகாதானம் செய்துதர சகோதரன் திருமால் தன் இரு மனைவியருடன் எழுந்தருளியிருப்பர். மணமக்கள் அழகுக்கு அழகு செய்தாற்போல் அலங்கரிக்கப்பட்டிருப்பர். திருமால் தங்க கலசத்தில் நீருடன் தாரைவார்த்துக் கொடுக்க காத்திருப்பர். உமாதேவியர்க்கு இருபுறமும் சேடியர்களாக திருமகளும் மணமகளும் நிற்க நான்முகன் திருமணவேள்வி செய்வார். சுற்றிலும் அட்ட வித்தியேசுவரர், எண்திசைக் காவலர், சித்தர்கள், யட்சர்கள், முனிவர்கள், கந்தருவர், சப்தமாதர் மற்றும் உள்ள தேவருலகினர் மகிழ்ச்சியுடன் காத்திருப்பர். சிவபெருமான் தனது வலக்கரம் நீட்டி உமையின் திருக்கரம் பற்ற ஆயத்தமாக நிற்பர். அவரது இடக்கரம் வரத முத்திரை கொண்டிருக்கும். பின் கரங்களில் மானும் மழுவும் விளங்கும். தலையில் சடாமகுடமும், பிறைசூடி, மாலை, கேயூரம், பூனூல், பாம்புகுண்டலம் அணிந்து அழகுடன் இருப்பர். பாம்பு தட்சனை அரையிலும் புட்கரனை மாலையாகவும் அணிந்திருப்பார். அன்னை தனது வலக்கரத்தை நீட்டி பெருமானுடைய கரம் பற்ற ஆயத்தமாக இருப்பார். இடக்கரம் நீலோற்பல மலரை ஏந்தியிருக்கும்.
இல்லறமாகிய நல்லறத்தை மானிடர்களுக்கு உணர்த்த தத்துவப் பொருளாய் மணவழகராகத் திருமேனி கொண்டு பல்வேறு திருத்தலங்களில் அருள் புரிந்தவர் சிவபெருமான். காட்சி:கள்ளழகர் நீர் வார்க்க சுந்தரர் மீனாட்சி கலியாணம்- மதுரை, காந்திமதி அம்மையார் திருமணம்-திருநெல்வேலி, அல்லியங்கோதை திருமணம்-திருவாரூர், யாழைப்பழித்த இன்மொழியாள் திருமணம்- திருமறைக்காடு, அறம்வளர்த்த நாயகி திருமணம்-திருவையாறு, பெருநலமுலையம்மை திருமணம்-திருவிடை மருதூர், காமாட்சி திருமணம்-காஞ்சி, மங்களநாயகி திருமணம்- குடந்தை ஆகியன சிறப்புடையவை.
#####
இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
மோதக விநாயகா போற்றி!
யாணை முகத்தனே போற்றி!
ரத்தின விநாயகா போற்றி!
ராஜகணபதியே போற்றி!
இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!
முப்புரங்களை அழிக்க சிவபெருமான் நினைத்தபோது விண்ணோர் அனைவரும் தங்களுடைய ஆற்றல்களுக்கு ஏற்ப உதவியாய் நின்றனர். சூரியனும் சந்திரனும் சக்கரங்களாய், பூமி தேராகவும், மேரு வில்லாகவும், கொண்டு போருக்குச் செல்லும்போது விநாயகர் வழிபாடு செய்யாததால் தேரின் அச்சு முறிந்தது. இந்நிலையில் திருமால் காளை (இடபம், விடை) வடிவங்கொண்டு சிவனைத் தாங்கி நின்றார். இந்நிலையே விடையேறுச் செல்வர் திருவடிவமாகும்.
சிவன் நின்றகோலத்தில் வலக்கால் நேராகவும் இடக்கால் சற்று வளைந்தும், வலக்கரத்தில் ஒரு விரல் தடிப்புள்ள மூன்று வளைவுகள் கொண்ட வச்சிரதண்டாயுதமும் பின்வலக்கரத்தில் உடுக்கை, இடக்கரத்தில் மானும் மழுவும், தலையில் சடாமகுடமும் அருகிலுள்ள தேவியின் வலக்கரத்தில் நீலோற்பல மலரும் இடக்கரம் தொங்கிய வாறும் இருக்கும். இந்தக் கோலவடிவமே சிவன் அடியார்களுக்கு காட்சி அருளி கருணையுடன் பாதுகாப்பு அளிப்பார். அம்மையும் அப்பனும் தருமத்திற்கே எந்தக் காலகட்டத்திலும் வெற்றியினை அருள்வார்கள் என்பதை நமக்கு நினைவு படுத்தும் வடிவம்-இடபாரூடர்-ரிஷபாரூடர், விருஷபவாகனன்,!. விடையேறிய விமலர் காட்சி: மதுரை, திருவாவடுதுறை,விராதனூர்(மதுரை)
&&&&&
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.