
ஊர்:பாபநாசம்,#விக்ரமசிங்கபுரம்,பொருநையாற்றங்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபவநாசர்(சு), ஸ்ரீமுக்களாலிங்கர். ஸ்ரீவயிராசலிங்கர், பரஞ்சோதிலிங்கர்,ஸ்ரீ பழமறைநாயகர், ஸ்ரீபாபவிநாசர், ஸ்ரீமுட்களாமூர்த்தி, ஸ்ரீவைராசலிங்கர்,
இறைவி: ஸ்ரீஉலகம்மை, ஸ்ரீஉலகநாயகி, ஸ்ரீவிமலைஸ்ரீ
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஸ்தல விநாயகர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீசப்த மாதர்கள், ஸ்ரீகல்யாணசுந்தரர், ஸ்ரீஉலகம்மை, ஸ்ரீபூதலவிநாயகர், ஸ்ரீகன்னி விநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி,தெய்வானை, ஸ்ரீபழமறைநாதர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசோமலிங்கம், ஸ்ரீஆறுமுக நயினார்.
7நி.ராஜகோபுரம்-100'
2பிரகாரங்கள்
தீர்-அகத்தியர், தாமிரபரணி, மலை உச்சியில் கல்யாண் (அகத்தியர்), பைரவ
மரம்-முக்காள/கிளுவை
தி.நே-0630-1200,1700-2000
#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04634-293757, பட்டர்-94423 17827
கருணாகரப் பாண்டியன் கட்டியது. அவர் மகன் இராஜராஜ பாண்டியன் திருப்பணி. யோகபீடம். 1500ஆண்டுகள் பழமை. உளிபடாத சுயம்புமேனி-பவநாசர். விக்ரமசிங்கபுரம் நமசிவாயரின் பாடல் கேட்டுக் கொண்டிருந்த அம்பிகை, அவர் தாம்பூல எச்சிலைத் துப்ப வெளியில்வர அம்மையும் பின்னால் வர நமச்சிவாயத்தின் தாம்பூழம் சேலையில் பதிந்தது. அடுத்தநாள் காளை தாம்பூலக் கறை அம்மையின் சேலையில் இருக்க கண்ட அர்ச்சகர் மன்னரிடம் கூற இதைச் செய்தவருக்கு தக்க தண்டனை என அறிவித்தான். அன்று இரவில் நடந்ததை அம்மன் மன்னன் கனவில் தெரியப்படுத்தி, அவன் பாட்டைக் கேட்டுப்பார் உன்மை உனக்கு புரியும் எனக் கூற, அடுத்தநாள் அம்மையின் புடவையில் தாம்பூலம் துப்பியது ஏன் என்ற மன்னரின் கேள்விக்கு மௌனமாக நின்ற நமசிவாயரை, கலித்துறை அந்தாதி பாடி அம்மன் கையில் உள்ள பூச்செண்டு அவர் கையில் வரவழைத்த தலம். மகளாக வந்து உணவு பரிமாரியதலம். ருக், யஜுர், சாமம் ஆகிய மறைகள் முக்களாமரங்களாகி அதர்வன ஆகாயமாக வழிபாடு-தலவிருட்சம்-3கிளைகள். ஈசன்- உமை திருமணத்திற்கு தேவர்களெல்லாம் வடக்கில் குவிய பாரம் தாங்காமல் வடக்குத் தாழ, ஈசன் அகத்தியரை தெற்கில் அனுப்ப, தான் இறைவனது திருமணத்தைக் காணமுடியாமல் போய்விடுமே என வருந்திய அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுதிரைக்கும் ரிஷிபரூடராக கல்யாணசுந்தரர் காட்சி. அகத்தியர் தமிழ்ச் சங்கம் நடத்திய இடம். அனுமன் சீதையைத் தேடி செல்லும்போது அகத்தியர் நடத்தும் தமிழ்சங்கம் பக்கம் போக வேண்டாம் என்றும், அப்படி நீ சென்று அங்கு பாடப்படும் பாடல்களைக் கேட்டால் அதன் இனிமை உன்னை அங்கிருந்து நகர வைக்காது. எனவே உன் தேடும் பணி கெட்டுவிடும் என இராமர் அனுமனிடம் கூறியுள்ளார். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தமிழ்ச்சங்கம் அகத்தியரால் இங்கு நடைபெற்றது. ஒரே கல்லிலானது- திருமணத் தடைநீக்கும் பரிகாரத் தலம் பங்குனி-சித்திரை தேர், தெப்பத் திருவிழா. அம்மன் சன்னதி எதிரில் உரல்- மஞ்சள் இடித்து நெற்றியில்யிட அருள். மார்கழி-கங்கை வந்து நீராடல்-அனனத்து பாவங்களும் நீங்கும். நவகைலாயங்கள்-1/9. சூரியன் பரிகாரத் தலம். உடல் உஷ்ணம், தீராத காய்ச்சல், வயிற்றுவலிநீங்க வழிபாடு.
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது.
கல்யாண தீர்த்தத்தில் அகத்தியருக்கு கோவில். பாபநாசத்திலிருந்து 1கி.மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பழைய பாபநாசத்திலிருந்து அகத்தியர் அழைத்து வரப்பட்டு அதன் பின்னர்தான் இங்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்திரன் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை கொன்று விட அந்த பிரமஹத்தி தோஷம் நீங்க இங்கு வழிபட்டான்.-பாபநாசநாதர்-இந்திரகீழ் சேக்ஷ்திரம். விராடபுருடன் வழிபட்டதால் -வயிராசர். ரிக், யஜூர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் களாமரங்களாக வழிபட்டதால் பழமறைநாதர்.,முக்களாமூர்த்தி. அதர்வன வேதம் ஆகாயமாக இருந்து வழிபட்டது. மேலான சோதிவடிவமாக விளங்குவதால் பரஞ்சோதி. தன்னை அடைந்தவரது பாவங்களை நீக்குவதால் பவநாசர்.
கருவறையைச் சுற்றிலும் காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், நிருத்த கணபதி, திரிபுரசம்ஹாரர், மகாவிஷ்ணு, ஏகபாத மூர்த்தி சிற்பங்கள். கருவறைக்குப் பின்புறம் கல்யாண கோலத்தில் பெருமானும் அருகில் அகத்தியரும் அவர்மனைவி லோபாமுத்திரையும் கல்யாண காட்சியை வணங்கிய நிலையில். அம்பாள் உலகம்மை சந்நிதி முன்பு உள்ள உரலில் விரலி மஞ்சள் இடிக்கப்பட்டு அதை அபிஷேகத்திற்கு பயன் படுத்துகின்றனர். இந்த நீரை அருந்தினால் திருமண புத்திர பாக்கியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். ஆனந்த தாண்டவ கோலத்தில் இருக்கும் நடராஜரை ” புனுகு சபாபதி “ என்பர். திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
