ஊர்: ஆங்கரை-
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமருதாந்த நாதேஸ்வரர்
இறைவி :ஸ்ரீசுந்தரகாஞ்சனி அம்பாள்-4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதண்டபணி, ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீகஜலட்சுமி,ஸ்ரீநவகிரகங்கள்.
மரம்:
தீர்:
நான்கு கால பூஜைகள். தி.நே-0900-1000,1800-2000
1000 ஆண்டுகள் பழமை.
ககோளர் சிறந்த சிவபக்தர். சாஸ்திரங்களை கற்றவர். அவர் மனைவி லீலாவதி அவர்களுக்கு மகன் மருதாந்தன். தன் ஞானதிருஷ்டியால் நடக்கப் போவதை அறிந்து திடுக்கிட்டார். ககோளர். அவர் மனைவி லீலாவதி சிறந்த அழகி பணம் மற்றும் மகிழ்வு மீது மோகம் கொண்டு மாற அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டு மகனை தானே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வளர்த்தார். தந்தயிடம் கூறிவிட்டு தேசாந்திரம் செய்தபோது உத்தம்புரம் என்ற ஊரை அடைய் அங்கிருந்த மன்னன் அவன் அறிவைக்கண்டு அவனுக்கு மந்திரி பதவி அளைத்து கௌரவித்தான். தீய நணபன் ஒருவன் சேர்க்கையால் மருதாந்தன் அந்த ஊரிலுள்ள தாசிவீட்டிற்குச் சென்று வந்தான். பின்னரே தெரிந்தது அந்த தாசி தன் தந்தையால் விரட்டப்பட்ட தன் தாய் என்று. உண்மை அவனை சுட்டெரிக்க மனம் வருந்தி தந்தையின் சொல்படி தர்ம சாஸ்திரங்களைக் கற்ற வித்வான்களை நாடினான். கோதாவரிக் கரையில் அவர்களிடம் உண்மையைச் சொன்ன போது அவர்கல் பாவம் தமோ குணத்தின் காரியம். தாஸ் என்பது கருப்புநிற இருள். எனவே கருப்பு இரும்பினால் செய்த மணிகளைக் கழுத்தில கட்டிக் கொண்டு பிச்சை எடு. அவர்களிடம் உண்மையைச் சொல் எப்போது உன் மணிகள் இரத்தின கற்கலாக மாறுகிறதோ அப்போது உன் பாவம் விலகிவிடும். அந்த இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடு என்றனர். அவ்வாறு செய்த மருதாந்தன் தன் இரும்பு மணிகள் ரத்திரனக் கற்களாக மாறிய இடத்தில் பிரதிஷ்டை செய்த லிங்கமே இந்த ஆங்கரை மருதாந்தநாதேஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)