ஊர்:ஸ்ரீபச்சைவண்ணர்#
மூலவர்:ஸ்ரீபச்சைவண்ணபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீ:மரகதவல்லி
உ:ஸ்ரீநிவாசர்
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே.0730-1100,1700-2000
#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பிருகுமுனி வந்ததை தெரிந்தும் அறியாததுபோல் திருமால் சயனகோலத்தில் லட்சுமியுடன் இருக்க கோபம் கொண்டவர் திருமாலைத் தன் காலால் எட்டி உதைத்தார். புன்னகையுடன் எழுந்த பெருமாள் என்னை உதைத்ததால் உங்கள் பாதம் வலித்திருக்குமே எனக்கூறி அவர் பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என வருந்திய முனி அதற்கு பிராயசித்தமாகப் பலத்தலங்களில் வழிபட்டு நாரதர் ஆலோசனைப்படி பவளவண்ணர் கோவில் வந்து சக்ர தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து தன் தோஷங்கள் விலக வழிபட்டார். அப்போது தாயே நான் அறியாமல் செய்த பிழைக்கு என்னை மன்னித்து நீயே என் மகளாகப் பிறந்து பதிலுக்கு என்னை மார்பில் உதைக்க வேண்டும் என வேண்டினார். பவளவண்ணர் ஆலயமருகில் ஓர்குடிலில் துணைவியாருடன் வசித்த பிருகு முனிக்கு ஓர் நன்னாளில் பச்சை நிறத்தில் பிறந்த குழதையை மரகதவல்லி என்று வளர்த்தார். தன் மகளை மணம் முடிக்க வேண்ட பெருமாள் மரகதவல்லியை மணந்த தலம்.
ஆதிஷேடன்மீது அமர்ந்த பரமபதநாதனாக- பச்சை வண்ணராக மரீசி மகரிஷிக்கு காட்சி. திருவட்டாறு-கோனேரி குப்பத்தில் வாழ்ந்திருந்த மரீசி முனி பெருமாளை நோக்கி தவமிருந்தார். இராம அவதாரத்தின் நோக்கத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க தவமிருந்தவருக்கு இராமராக பச்சை நிறத்துடன் காட்சிதந்து, "என்னிடம் அன்பு கொண்டவர்களுக்கு அருள் புரிய எடுக்கப்பட்டது இராம அவதாரம். ஏற்படும் கஷ்டங்கள் இயலாமைகள் எல்லாம் தெய்வ துணையுடன் கடந்து வெற்றி பெற" வலியுருத்துவதே அதன் நோக்கம் என அருள் புரிந்த தலம். புதன்கிரகம்- பச்சை-அதிபதி மகாவிஷ்ணு- வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும். தாயார் ஸ்ரீசக்ர பீடத்திலேயே அமர்ந்திருப்பது சிறப்பு. அருகில் நாகதீபம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)