ஊர்: நந்திவனம்
மூலவர்: ஸ்ரீநந்திநாதப்பெருமாள்-நின்றகோலம்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகத்வல்லித் தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீவிஸ்வக்கேசனர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
1800 ஆண்டுகள் பழமை. காளமேகப் புலவர் வாழ்ந்து வழிபட்டதலம். கோவில் பரிசாகராக இருந்த தந்தையின் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார் வரதன். திருவரங்கம் கோவில் பணியாற்றும்போது திருவானைக்கோவில் தாசி மோகனாங்கியிடம் மனத்தை பறி கொடுத்தார். தாசி ஈசன்முன் பாடி ஆடும்போது தோழிகள் அவரை வைணவத்தைத் தொடரும் வரதனை நினைத்துப் பாடியதா எனக் கேலி செய்ய அன்று இரவு வரதனை வீட்டினுள் அனுமதிக்க வில்லை. கதவை திறக்காவிடில் உயிர் விடுவதாக வரதன் சொல்ல தன்மேல் அவ்வளவு காதல் இருந்தால் உடன் சிவ தீட்சை பெற்று வரச் சொன்னாள். அவ்வாறே உடன் சிவதீட்சை பெற்று ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் பணி செய்து களைப்பில் அப்படியே படுத்து உறங்கினார். அப்போது தேவி அகிலாண்டேஸ்வரி வாயைத்திறந்து உறங்கிக் கொண்டிருந்த அவன் வாயில் பீஜ மந்திரங்களை எழுதி அருள் புரிந்தார். கனவுபோல் நடந்ததை நினைத்துத் திடுக்கிட்டு எழுந்தவர் புலமைத்துவம் பெற்றிருந்தார். அகிலாண்டேஸ்வரி அம்மையின் அருள் என்பதை உணர்ந்து "திருவானைக்கா உலா" எனும் பாடல்களை எழுதினார். மேக மழைபோல பாடுவதால் காளமேகப் புலவர் எனப் பெயர் பெற்றார். தல யாத்திரை மேற்கொண்டு பல தலங்கள் சுற்றி திருவாரூர் வந்தார். அங்குள்ள அந்தணர்கள் அவரை தியாகராசர் மேல் உள்ள வைர மாலை அறுந்துவிழப் பாடச் சொல்லி கேலி செய்ய " அன்ன வயல் சூட.." எனத்தொடங்கி பதிகம் பாட வைர மாலை அறுந்து விழுந்தது. குருக்கம் மாலையை ஒட்டவைக்க வேண்ட மீண்டும் பாடல்கள் பாடி அதை ஒட்டவைத்தார். மோகனாங்கியின் கோரிக்கை நினைவிற்குவர திருமலைராயன் பட்டிணம் சென்றார். அங்கு அதிமதுரகவிராயர் செருக்கும் செல்வாக்கு மிக்கவராக இருக்க, நகர்வலம் வந்த அவரை எல்லோரும் வணங்கினர். அவரின் சேவகர்கள் காளமேகரை கட்டாயமாக எழுந்து நிற்கச் சென்னார்கள். அரசவைக்குச் சென்று அவரது கர்வத்தை அடக்க முடிவெடுத்து மன்னரின் அவைக்குச் சென்று மன்னரிடம் ஒரு எழுமிச்சை பழத்தை மரியாதை நிமித்தமாக கொடுத்தார். அவருக்கு இருக்கை கூட தராத அவையில் இருந்த 64 தண்டிகைப் புலவரையும் போட்டியில் வென்றார். மன்னன் பல பரிசுகள் முத்துமாலைகளை அளிக்க அங்கிருந்து நந்திவனம் வந்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: