ஊர்:சாமளாபுரம்,சியாமளாபுரம்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசோழீசுவரர்
இறைவி:ஸ்ரீதில்லைநாயகி.
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவராஹி, ஸ்ரீபிரம்மி,ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீசுப்பிரமணி-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீதண்டாயுதபாணி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசனிபகவான், ஸ்ரீநவகிரகங்கள்.ஸ்ரீபஞ்சலிங்கங்கள்
ஐந்து நிலை ராஜகோபுரம் மரம்-வில்வம், தீர்-நொய்யல்,கிணறு 3காலபூஜைகள் தி.நே-0730-1200,1700-1930
# 27-11-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தொலைபேசி-98422 87461.
2013 ஆண்டு கும்பாபிஷேகம்.
சோழன் பூர்வ பட்டயத்தின் மூலம் மன்னன் கரிகாலன் காலத்துக் கோவில் என்பதை அறிய முடிகின்றது. உத்தம சோழனின் மகன் உறையூர் சோழன் காலத்தில் அநீதி தலைதூக்கவெ மக்கள் பஞ்சத்தில் வாடதுவங்க அனைவரையும் காக்க அம்மனை வேண்டி தன் இரு மனைவியரையும் கொங்கு நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தான். பின்னர் மரணமடைந்தான். கொங்கு நாட்டில் மூத்த மனைவி சிங்கம்மாள் ஆண்மகவை பெற, இளையவள் சாமளாம்மாவுடன் சேர்ந்து மகனை கல்வி கேள்விகளில் வல்லவனாக்கினார்கள். உறையூரில் உள்ள சமூகத் தலைவர்கள் மன்னன் இறந்து விட்டபடியால் காசிக்குச் சென்று தங்களுக்கு ஒர் அரசன் வேண்டும் என விசாலாட்சியிடம் வேண்டி அக்கால முறைப்படி யணையின் தும்பிக்கையில் மலர் மாலை கொடுக்க அது ஊர் ஊராகச் சென்று கொங்கு நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவனுக்கு மாலை போட அவனுக்கு கரிகாலன் எனப்பெயர் சூட்டி மன்னாராக்கினர். தங்களை பாதுகாத்த இராமபட்டருக்கு சிங்கம்மாள் சிங்காநல்லூர் என்ற அக்ரஹாரத்தையும் சாமளம்மாள் சாமளாபுரன் என்ற அக்ரஹாத்தையும் கொடுத்தனர். பின்னர் கரிகாலனுக்கு மனு நீதிச் சோழன் எனப் பெயரிட்டு மணம் செய்தனர். இளவரன் தேர் பசுவின் கன்றின்மீதேறி கன்று இறந்து விட்டதால் நீதிக்காக தன் மகனை தேர் சக்ரத்தின் கால்களில் ஏற்றி கொண்றான். இதனால் மன்னரை பிரம்ஹத்தி தோஷம் பீடிக்கவே அன்னையை வேண்டி தன் பிரமஹத்தி தோஷம் நீங்க பல சிவாலாயங்களைக் கட்டினான். அதில் ஒன்று சாமளாபுரம். பிப்ரவரி 16,17,18 தேதிகளில் சூரிய ஒளி இறைவன்மீது-பாஸ்கரத்தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)